மேலும் அறிய

Thiruvarur: பருத்திக்கு உரிய விலை கிடைக்கல; வயலில் டிராக்டர் விட்டு அடித்த விவசாயி

பருத்திக்கு உரிய விலை கிடைக்காததை கண்டித்து பருத்தி வயலில் டிராக்டர் விட்டு அடித்த விவசாயி.

திருவாரூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் குறுவை சம்பா தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் பருவமழை பற்றாக்குறை மற்றும் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வருவதில் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் விவசாயிகள் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக ஒருபோகம் சம்பா சாகுபடி பணிகளை மட்டும் மேற்கொண்டு வந்தனர். மீண்டும் கடந்த சில ஆண்டுகளாக மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்பட்டதன் காரணத்தினால் மூன்று போகம் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கோடை சாகுபடியாக திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக பருத்தி சாகுபடியை தீவிரமாக விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.


Thiruvarur: பருத்திக்கு உரிய விலை கிடைக்கல; வயலில் டிராக்டர் விட்டு அடித்த விவசாயி

கோடை சாகுபடியான பருத்தி இந்த ஆண்டு மாவட்டம் முழுவதும் சுமார் 47 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டது. குறிப்பாக கடந்த ஆண்டு ஒரு கிலோ பருத்தி 100 முதல் 120 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்டதால் இந்த ஆண்டு மாவட்டம் முழுவதும் அதிக அளவில் விவசாயிகள் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம், மன்னார்குடி, கோட்டூர், விக்கரபாண்டியம், புழுதிகுடி, சேந்தங்குடி, செருவாமணி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டனர். மேலும் இயற்கை சீற்றம் மற்றும் கனமழையின் காரணமாக பருத்தி ஆரம்பம் முதலே பாதிக்கப்பட்ட நிலையில் அதற்காகவும் நிவாரணம் கேட்டும் தற்போது வரை அந்த நிவாரணம் என்பது வழங்கப்படவில்லை. மேலும் மழையினால் பாதிக்கப்பட்ட பருத்தி செடிகளை ஆட்கள் மூலம் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து அடித்து தற்போது பருத்தி எடுக்கும் தருவாயில் மாவட்டம் முழுவதும் கிலோ பருத்தி ஆனது 45 முதல் 50 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் பருத்தி விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Thiruvarur: பருத்திக்கு உரிய விலை கிடைக்கல; வயலில் டிராக்டர் விட்டு அடித்த விவசாயி

மேலும் ஒரு ஏக்கருக்கு 30,000 வரை செலவு செய்தும் அதற்கான தொகை தற்போது வரை கிடைக்காத காரணத்தினால் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள இருள்நீக்கி பகுதியில் பருத்திச் செடியில் காய்கள் மற்றும் பூக்கள் பூத்திருக்கும் நிலையில் அதை டிராக்டர் மூலம் பருத்தியை அழித்து வருகின்றனர். மேலும் அவர்கள் தெரிவிக்கும் பொழுது கடந்த ஆண்டு 120 ரூபாய் வரை கிலோ பருத்தி விற்பனையானதால் நாங்கள் இந்த ஆண்டு பருத்தியை அதிக அளவில் சாகுபடி செய்தோம் தற்போது கிலோ 45 முதல் 50 ரூபாய் வரை மட்டுமே செல்வதால் எங்களுக்கு கட்டுப்படி ஆகவில்லை. எனவே மேலும் நாங்கள் நஷ்டம் அடையாமல் இருப்பதற்கு தற்போது பருத்தி வயலில் டிராக்டரை விட்டு உழவு செய்கிறோம். அதற்கு அடுத்தபடியாக சம்பா பணியில் ஈடுபட உள்ளோம். மேலும் பருத்தி செடிகள் மழையால் பாதிக்கப்பட்ட காரணத்தினால் மட்டுமே விலை போகவில்லை. எனவே எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகளின் தரப்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 CSK vs MI: கடைசி வரை திக்... திக்! மும்பையை வதம் செய்த ரவீந்திரா, ருதுராஜ்! சிஎஸ்கே சூப்பர் வெற்றி!
IPL 2025 CSK vs MI: கடைசி வரை திக்... திக்! மும்பையை வதம் செய்த ரவீந்திரா, ருதுராஜ்! சிஎஸ்கே சூப்பர் வெற்றி!
பாம்பன் பாலம் ரெடி: வரார் பிரதமர் மோடி: திறப்பு எப்போது? ட்ரோன் காட்சி இதோ!
பாம்பன் பாலம் ரெடி: வரார் பிரதமர் மோடி: திறப்பு எப்போது? ட்ரோன் காட்சி இதோ!
Yogi babu: பிரபலத்துடன் வாரத்துக்கு 2 முறை வீடியோ கால் பேசும் யோகி பாபு! யார் அந்த பிரபலம்?
Yogi babu: பிரபலத்துடன் வாரத்துக்கு 2 முறை வீடியோ கால் பேசும் யோகி பாபு! யார் அந்த பிரபலம்?
"இந்து என சொல்வது வெட்கக்கேடான விஷயமல்ல" ஆர்.எஸ்.எஸ் சொன்னது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chariot falls in Bangalore | ”தள்ளுங்க.. தள்ளுங்க சாய்து” சரிந்த 150 அடி ராட்சத தேர் பெங்களூருரில் கோர சம்பவம்Kaaraikudi Rowdy Murder  ஓட ஓட விரட்டி ரவுடி கொலை தந்தைக்காக பழிதீர்த்த திகில் கிளப்பும் CCTV காட்சிஅதிரடி காட்டிய ஸ்டாலின்! ஆப்செண்ட் ஆன மம்தா! பின்னணி என்ன?”நாங்க அண்ணன், தம்பிடா!” ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கட்சி! ஷாக்கான மோடி, அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 CSK vs MI: கடைசி வரை திக்... திக்! மும்பையை வதம் செய்த ரவீந்திரா, ருதுராஜ்! சிஎஸ்கே சூப்பர் வெற்றி!
IPL 2025 CSK vs MI: கடைசி வரை திக்... திக்! மும்பையை வதம் செய்த ரவீந்திரா, ருதுராஜ்! சிஎஸ்கே சூப்பர் வெற்றி!
பாம்பன் பாலம் ரெடி: வரார் பிரதமர் மோடி: திறப்பு எப்போது? ட்ரோன் காட்சி இதோ!
பாம்பன் பாலம் ரெடி: வரார் பிரதமர் மோடி: திறப்பு எப்போது? ட்ரோன் காட்சி இதோ!
Yogi babu: பிரபலத்துடன் வாரத்துக்கு 2 முறை வீடியோ கால் பேசும் யோகி பாபு! யார் அந்த பிரபலம்?
Yogi babu: பிரபலத்துடன் வாரத்துக்கு 2 முறை வீடியோ கால் பேசும் யோகி பாபு! யார் அந்த பிரபலம்?
"இந்து என சொல்வது வெட்கக்கேடான விஷயமல்ல" ஆர்.எஸ்.எஸ் சொன்னது என்ன?
"கபட நாடக திமுக அரசு" அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக களத்தில் குதித்த விஜய்!
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
Dindigul Leoni:
Dindigul Leoni: "அண்ணாமலையால் இதை செய்ய முடியுமா? 2026-ல் ஜீரோ தான்... " சவால்விட்ட லியோனி
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
Embed widget