மேலும் அறிய

Thiruvarur: பருத்திக்கு உரிய விலை கிடைக்கல; வயலில் டிராக்டர் விட்டு அடித்த விவசாயி

பருத்திக்கு உரிய விலை கிடைக்காததை கண்டித்து பருத்தி வயலில் டிராக்டர் விட்டு அடித்த விவசாயி.

திருவாரூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் குறுவை சம்பா தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் பருவமழை பற்றாக்குறை மற்றும் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வருவதில் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் விவசாயிகள் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக ஒருபோகம் சம்பா சாகுபடி பணிகளை மட்டும் மேற்கொண்டு வந்தனர். மீண்டும் கடந்த சில ஆண்டுகளாக மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்பட்டதன் காரணத்தினால் மூன்று போகம் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கோடை சாகுபடியாக திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக பருத்தி சாகுபடியை தீவிரமாக விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.


Thiruvarur: பருத்திக்கு உரிய விலை கிடைக்கல; வயலில் டிராக்டர் விட்டு அடித்த விவசாயி

கோடை சாகுபடியான பருத்தி இந்த ஆண்டு மாவட்டம் முழுவதும் சுமார் 47 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டது. குறிப்பாக கடந்த ஆண்டு ஒரு கிலோ பருத்தி 100 முதல் 120 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்டதால் இந்த ஆண்டு மாவட்டம் முழுவதும் அதிக அளவில் விவசாயிகள் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம், மன்னார்குடி, கோட்டூர், விக்கரபாண்டியம், புழுதிகுடி, சேந்தங்குடி, செருவாமணி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டனர். மேலும் இயற்கை சீற்றம் மற்றும் கனமழையின் காரணமாக பருத்தி ஆரம்பம் முதலே பாதிக்கப்பட்ட நிலையில் அதற்காகவும் நிவாரணம் கேட்டும் தற்போது வரை அந்த நிவாரணம் என்பது வழங்கப்படவில்லை. மேலும் மழையினால் பாதிக்கப்பட்ட பருத்தி செடிகளை ஆட்கள் மூலம் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து அடித்து தற்போது பருத்தி எடுக்கும் தருவாயில் மாவட்டம் முழுவதும் கிலோ பருத்தி ஆனது 45 முதல் 50 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் பருத்தி விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Thiruvarur: பருத்திக்கு உரிய விலை கிடைக்கல; வயலில் டிராக்டர் விட்டு அடித்த விவசாயி

மேலும் ஒரு ஏக்கருக்கு 30,000 வரை செலவு செய்தும் அதற்கான தொகை தற்போது வரை கிடைக்காத காரணத்தினால் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள இருள்நீக்கி பகுதியில் பருத்திச் செடியில் காய்கள் மற்றும் பூக்கள் பூத்திருக்கும் நிலையில் அதை டிராக்டர் மூலம் பருத்தியை அழித்து வருகின்றனர். மேலும் அவர்கள் தெரிவிக்கும் பொழுது கடந்த ஆண்டு 120 ரூபாய் வரை கிலோ பருத்தி விற்பனையானதால் நாங்கள் இந்த ஆண்டு பருத்தியை அதிக அளவில் சாகுபடி செய்தோம் தற்போது கிலோ 45 முதல் 50 ரூபாய் வரை மட்டுமே செல்வதால் எங்களுக்கு கட்டுப்படி ஆகவில்லை. எனவே மேலும் நாங்கள் நஷ்டம் அடையாமல் இருப்பதற்கு தற்போது பருத்தி வயலில் டிராக்டரை விட்டு உழவு செய்கிறோம். அதற்கு அடுத்தபடியாக சம்பா பணியில் ஈடுபட உள்ளோம். மேலும் பருத்தி செடிகள் மழையால் பாதிக்கப்பட்ட காரணத்தினால் மட்டுமே விலை போகவில்லை. எனவே எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகளின் தரப்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget