மேலும் அறிய

அக்., 3இல் காவிரி டெல்டா மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகங்கள் முற்றுகை -  பிஆர்.பாண்டியன் அறிவிப்பு

ஏக்கர் ஒன்றுக்கு 35 ஆயிரம் ரூபாயை குறுவை அழிந்திருக்கிற விவசாயிகளுக்கு இழப்பீடாக வழங்க முன்வர வேண்டும். 2022 சம்பா சாகுபடி செய்த விவசாயிகளுக்கு இதுவரையில் இழப்பீடு வழங்கப்படவில்லை.

குறுவை ஏக்கர் 1க்கு 35,000 ரூபாய் இழப்பீடு, நிபந்தனையின்றி நெல் கொள்முதல் செய்திட உடனே வழங்கிட வலியுறுத்தி அக்டோபர் 3ல் காவிரி டெல்டா மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகங்கள் முற்றுகை என பிஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார்.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் .பிஆர்.பாண்டியன் திருவாரூர் மாவட்டம் மாவூர், பாலையூர், பின்னத்தூர், ஆண்டாங்கரை, ஆலிவலம், விக்கிரபாண்டியம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெல் பயிர் பெரும் மழையால் சாய்ந்து அழுகத் தொடங்கி இருப்பதை நேரில் பார்வையிட்டார். அதன் பின்னர் மாவூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: காவிரியில் மே மாதமே தண்ணீர் திறக்கப்பட்டதால் இதுவரையிலும் இல்லாத அளவில் 4 லட்சம் ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி மேற்கொண்டு இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இதுவரையிலும் குறுவை அறுவடை செய்யும் நெல்லை கொள்முதல் செய்வதற்கு எந்த அடிப்படை நடவடிக்கைகளையும் முன்கூட்டி திட்டமிட்டு மேற்கொள்ளவில்லை. செப்டம்பர் 1 முதல் காரீப் பருவ கொள்முல் அனுமதி பெற்றோம் என்று சொல்லுவது டெல்டா விவசாயிகளுடைய சாகுபடி பருவத்திற்கு முரணானது. இதனால் ஒரு மாத காலமாக நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதே தவிர, ஈரப்பதத்தை காரணம் காட்டி கொள்முதல் செய்ய மறுத்துவிட்டார்கள். 


அக்., 3இல் காவிரி டெல்டா மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகங்கள் முற்றுகை -  பிஆர்.பாண்டியன் அறிவிப்பு

சென்ற ஆண்டு கொள்முதல் நிலையங்கள் திறந்த இடங்களில் இந்த ஆண்டு திறக்கப்படவில்லை. குறிப்பாக நிரந்தர கட்டிடங்கள் உள்ள இடங்களில் மட்டும் தான் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்று அனுமதி வழங்கி அங்கேயும் கொள்முதலை ஈரப்பதத்தை காரணம் காட்டி நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் அறுவடையும் தாமதப்பட்டுள்ளது. அறுவடை செய்ய வேண்டிய பயிர் தற்போது பெரும் மழையால் அழிய தொடங்கி இருக்கிறது. அழிவுக்கு தமிழக அரசே பொறுப்பு ஏற்க வேண்டும். 4 லட்சம் ஏக்கருக்குமேல் சாகுபடி பரப்பளவு கூடுதலாக இருக்கிற போது அதற்கான கொள்முதல் நடவடிக்கையை ஏன் திட்டமிட்டு மேற்கொள்ளவில்லை. 22 சதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசிடம் ஏன் அனுமதி பெறவில்லை. இது குறித்து தமிழக முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும். மத்திய அரசை காரணம் காட்டி கொள்முதலை நிறுத்தி வைப்பது ஏற்க முடியாது, சென்ற ஆண்டும் குறுவைக்கு காப்பீடு மறுக்கப்பட்டது. இந்தாண்டும் பெற்ற உரிமையை தமிழக அரசு குறுவைக்கு காப்பீடு செய்ய முடியாமல் பறித்துவிட்டது. இதனால் விவசாயி அழியும் குறுவைப் பயிரை பார்த்து தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். 


அக்., 3இல் காவிரி டெல்டா மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகங்கள் முற்றுகை -  பிஆர்.பாண்டியன் அறிவிப்பு

கிட்டத்தட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் மட்டும் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் தற்போது பெய்து வருகிற மழையால் குறுவை அறுவடை பயிர்கள் அழிய தொடங்கி இருக்கிறது. சென்றாண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் இதுவரையில் நிவாரணம் வழங்கப்படவில்லை. இவ்வாண்டாவது உடன் தமிழக அரசு பொறுப்பு ஏற்று இழப்பீடு வழங்க முன்வர வேண்டும். ஏக்கர் ஒன்றுக்கு 35 ஆயிரம் ரூபாயை குறுவை அழிந்திருக்கிற விவசாயிகளுக்கு இழப்பீடாக வழங்க முன்வர வேண்டும். 2022 சம்பா சாகுபடி செய்த விவசாயிகளுக்கு இதுவரையில் இழப்பீடு வழங்கப்படவில்லை. இதனால் பெற்ற கடனை திரும்ப செலுத்த முடியாமல் விவசாயிகள் பரிதவிக்கிறார்கள். எனவே உடனடியாக இழப்பீடு வழங்க முன்வர வேண்டும். முதலமைச்சர் கொள்முதல் செய்வோம் என்று அறிக்கை விடுவதால் மட்டும் நடைபெறாது. நிபந்தனை இல்லாமல் கொள்முதல் செய்வதற்கான அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற அக்டோபர் 3ஆம் தேதி தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை ஆயிரக்கணக்கான விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றார்.

தலைப்பு செய்திகள்

சேதமான பாசன வாய்க்கால் படித்துறையால் சோகம்: உடன் சீரமைக்க ஆலக்குடி பொதுமக்கள் வலியுறுத்தல்
சேதமான பாசன வாய்க்கால் படித்துறையால் சோகம்: உடன் சீரமைக்க ஆலக்குடி பொதுமக்கள் வலியுறுத்தல்
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை: கும்பகோணம் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை: கும்பகோணம் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை
பம்பர் ஆஃபர்! 'உத்யமி மித்ரா' திட்டத்தில் ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம்... யாரெல்லாம் பெறலாம்?
பம்பர் ஆஃபர்! 'உத்யமி மித்ரா' திட்டத்தில் ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம்... யாரெல்லாம் பெறலாம்?
பட்ஜெட் கருத்து கேட்பு கூட்டம்: விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்: தஞ்சையில் பரபரப்பு
பட்ஜெட் கருத்து கேட்பு கூட்டம்: விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்: தஞ்சையில் பரபரப்பு

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: யாரை கேட்டு இப்படி பண்ணீங்க? உதயநிதி, சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வார்னிங்! நடந்தது என்ன?
MK Stalin: யாரை கேட்டு இப்படி பண்ணீங்க? உதயநிதி, சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வார்னிங்! நடந்தது என்ன?
ADMK functionaries JOIN TVK : தள்ளிட்டு வாங்க.. அள்ளிட்டு போங்க. அதிமுகவை காலி செய்ய தவெகவின் ஆடி ஆஃபர்- விஜய்யின் செம பிளான்
தள்ளிட்டு வாங்க.. அள்ளிட்டு போங்க. அதிமுகவை காலி செய்ய தவெகவின் ஆடி ஆஃபர்- விஜய்யின் செம பிளான்
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை... 3 மணி நேர ஆய்வால் பரபரப்பு!
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை... 3 மணி நேர ஆய்வால் பரபரப்பு!
MK STALIN : “நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
“நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
Indus-India Vs Pakistan: ''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
பல வருட CASE-க்கு ஒரே நாளில் தீர்வு கிடைக்க சூப்பர் சான்ஸ்.! மிஸ் பண்ணாதீங்க- தேதி அறிவிப்பு
பல வருட CASE-க்கு ஒரே நாளில் தீர்வு கிடைக்க சூப்பர் சான்ஸ்.! மிஸ் பண்ணாதீங்க- தேதி அறிவிப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று ஜூலை 4-ல் இங்கெல்லாம் மின்தடை.. உங்க ஊர் லிஸ்டுல இருக்கா? செக் பண்ணுங்க!
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று ஜூலை 4-ல் இங்கெல்லாம் மின்தடை.. உங்க ஊர் லிஸ்டுல இருக்கா? செக் பண்ணுங்க!
ஆம்புலன்ஸாக மாறிய அரசு பேருந்து: இளம்பெண் உயிரைக் காத்த ஓட்டுநர், நடத்துநர்!
ஆம்புலன்ஸாக மாறிய அரசு பேருந்து: இளம்பெண் உயிரைக் காத்த ஓட்டுநர், நடத்துநர்!
Embed widget