மேலும் அறிய

Thiruvarur : விடாமல் பெய்த மழை..! மழைநீரில் மூழ்கிய 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள்..! விவசாயிகள் வேதனை..

வயலில் தேங்கியுள்ள மழைநீரை வடிய வைப்பதற்கான வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படவில்லை என்றும், இதன் காரணமாக தண்ணீரை வடிய வைப்பதிலும் சிக்கல் நீடிப்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

கனமழையின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் ஏக்கர் நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கின. விவசாயிகள் நிவாரணம் வழங்க வலியுறுத்தல்.

காவேரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா மற்றும் தாளடி என மூன்று கோபம் நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருவது வழக்கம். இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக மேட்டூர் அணையில் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படாததன் காரணத்தினாலும் உரிய நேரத்தில் பருவமழை பொய்த்து போனதன் காரணத்தினாலும் மூன்று போகும் சாகுபடி என்பது ஒருபோகம் சம்பா சாகுபடி பணிகளை மட்டும் விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மீண்டும் மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி உரிய நேரத்தில் திறக்கப்பட்டதன் காரணத்தினால் கடந்த மூன்று ஆண்டுகளாக டெல்டா மாவட்டங்களில் மூன்று போகம் சாகுபடி பணிகள் என்பது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வருடம் மேட்டூர் அணையிலிருந்து மே 24ம் தேதியே தண்ணீர் திறக்கப்பட்டதால் ஒரு லட்சத்து 57 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளில் ஈடுபட்டனர்.


Thiruvarur : விடாமல் பெய்த மழை..! மழைநீரில் மூழ்கிய 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள்..! விவசாயிகள் வேதனை..

தற்போது குறுவை சாகுபடி அறுவடை பணிகள் என்பது 100 சதவீதம் முடிவடைந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 517 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தாளடி நெற்பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோன்று இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தற்பொழுது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தாளடி சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பெரும்பாலானோர்  நேரடி விதைப்பு முறையில் விதை விதைத்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக வளிமண்டல கீழடுக்க சுழற்சி மற்றும் வடகிழக்கு பருவமழை தொடக்கத்தின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை என்பது பெய்து வந்தது. 


Thiruvarur : விடாமல் பெய்த மழை..! மழைநீரில் மூழ்கிய 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள்..! விவசாயிகள் வேதனை..

இதன் காரணமாக விதைத்து 20 நாட்களே ஆன  நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி பாதிப்புக்கு உள்ளானது. இந்த நிலையில் வங்க கடலில்  உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றைய முன் தினம் கனமழை தீர்த்தது. இந்தத தொடர் மழையின் காரணமாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம்  கம்மங்குடி, குப்பம், சோத்திரியம், விக்கிரபாண்டியம் கொல்லுமாங்குடி மங்கை நல்லூர் கிராமத்தில் சுமார் 5000 ஏக்கர் பரப்பளவில் சம்பா நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து கன மழை நீடிக்கும் பட்சத்தில் இந்த நெற்பயிர்கள் முற்றிலுமாக மழை நீர் வயல்களில் தேங்கி நெற்பயிர்கள் அழுகி பாதிக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.  மேலும் குறிப்பாக இந்த பகுதியில் வயலில் தேங்கியுள்ள மழைநீரை வடிய வைப்பதற்கான வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படவில்லை என்றும் இதன் காரணமாக தண்ணீரை வடிய வைப்பதிலும் சிக்கல் நீடிப்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.  மேலும் இதுவரை ஏக்கர் ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ள நிலையில் செலவு செய்த பணத்தை கூட எடுக்க முடியாத நிலையில் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

மின்கம்பங்களின் தேவை ஒருபுறம்... மண்ணில் புதைந்து வீணாகும் அவலம் மறுபுறம்
மின்கம்பங்களின் தேவை ஒருபுறம்... மண்ணில் புதைந்து வீணாகும் அவலம் மறுபுறம்
இசை மேதையின் இல்லம்... தஞ்சைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் முதல் விருப்பம்!
இசை மேதையின் இல்லம்... தஞ்சைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் முதல் விருப்பம்!
ரூ.1200 கோடி பேரிடர் நிதி வழங்கிய மத்திய அரசு… தஞ்சாவூரில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
ரூ.1200 கோடி பேரிடர் நிதி வழங்கிய மத்திய அரசு… தஞ்சாவூரில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
தஞ்சை நில வழிகாட்டி மதிப்பில் முரண்பாடா? வரைவுப் பட்டியல் வெளியீடு – 15 நாட்களுக்குள் கருத்து தெரிவிக்க ஆட்சியர் ரேவதி அழைப்பு!
தஞ்சை நில வழிகாட்டி மதிப்பில் முரண்பாடா? வரைவுப் பட்டியல் வெளியீடு – 15 நாட்களுக்குள் கருத்து தெரிவிக்க ஆட்சியர் ரேவதி அழைப்பு!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pension : ஓய்வூதியதாரர்கள் எதிர்பார்த்த சூப்பர் நியூஸ்.! செப்.14 முதல் பணம் டெபாசிட்.? தமிழக அரசு அறிவிப்பு
ஓய்வூதியதாரர்கள் எதிர்பார்த்த சூப்பர் நியூஸ்.! செப்.14 முதல் பணம் டெபாசிட்.? தமிழக அரசு அறிவிப்பு
Power Cuts Electricity Purchase : மின்வெட்டுக்கு குட்பை.! 2000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்- செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மின்வெட்டுக்கு குட்பை.! 2000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்- செம பிளான் போட்ட சிஎம் விஜய்
நடிகர் அஜித்குமார் கார் ரேஸ்.! சிஎம் விஜய் தொடங்கி வைத்தது ஏன்.? இது தான் காரணம்- தமிழக அரசு அறிக்கை
நடிகர் அஜித்குமார் கார் ரேஸ்.! சிஎம் விஜய் தொடங்கி வைத்தது ஏன்.? இது தான் காரணம்- தமிழக அரசு அறிக்கை
Vanni Arasu: ”ஆ.ராசா = எச்.ராஜா” .. அமைச்சர் பிறப்பு குறித்து சர்ச்சை பேச்சு.. வெளுத்து வாங்கிய வன்னி அரசு!
Vanni Arasu: ”ஆ.ராசா = எச்.ராஜா” .. அமைச்சர் பிறப்பு குறித்து சர்ச்சை பேச்சு.. வெளுத்து வாங்கிய வன்னி அரசு!
Bigg BossTamil 10: தலைவனுக்கான தகுதியே இல்ல.. விஜயை வம்பிழுத்தாரா விஜய் சேதுபதி? - கொந்தளிக்கும் ரசிகர்கள்!
Bigg BossTamil 10: தலைவனுக்கான தகுதியே இல்ல.. விஜயை வம்பிழுத்தாரா விஜய் சேதுபதி? - கொந்தளிக்கும் ரசிகர்கள்!
September 17 Holiday : செப்டம்பர் 17-ல் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்- வெளியான அறிவிப்பு
செப்டம்பர் 17-ல் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்- வெளியான அறிவிப்பு
இன்று மழை பெய்யுமா? காஞ்சிபுரம், செங்கல்பட்டு மக்களுக்கு வந்த முக்கிய வானிலை அப்டேட்!
இன்று மழை பெய்யுமா? காஞ்சிபுரம், செங்கல்பட்டு மக்களுக்கு முக்கிய வானிலை அப்டேட்!
Rasi Palan Today (13-09-2026): இன்று கடகத்துக்கு செம லாபம்.. உங்களுக்கு நல்ல நாளா? - 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ!
Rasi Palan Today (13-09-2026): இன்று கடகத்துக்கு செம லாபம்.. உங்களுக்கு நல்ல நாளா? - 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ!
Embed widget