மேலும் அறிய

Thiruvarur : விடாமல் பெய்த மழை..! மழைநீரில் மூழ்கிய 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள்..! விவசாயிகள் வேதனை..

வயலில் தேங்கியுள்ள மழைநீரை வடிய வைப்பதற்கான வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படவில்லை என்றும், இதன் காரணமாக தண்ணீரை வடிய வைப்பதிலும் சிக்கல் நீடிப்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

கனமழையின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் ஏக்கர் நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கின. விவசாயிகள் நிவாரணம் வழங்க வலியுறுத்தல்.

காவேரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா மற்றும் தாளடி என மூன்று கோபம் நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருவது வழக்கம். இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக மேட்டூர் அணையில் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படாததன் காரணத்தினாலும் உரிய நேரத்தில் பருவமழை பொய்த்து போனதன் காரணத்தினாலும் மூன்று போகும் சாகுபடி என்பது ஒருபோகம் சம்பா சாகுபடி பணிகளை மட்டும் விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மீண்டும் மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி உரிய நேரத்தில் திறக்கப்பட்டதன் காரணத்தினால் கடந்த மூன்று ஆண்டுகளாக டெல்டா மாவட்டங்களில் மூன்று போகம் சாகுபடி பணிகள் என்பது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வருடம் மேட்டூர் அணையிலிருந்து மே 24ம் தேதியே தண்ணீர் திறக்கப்பட்டதால் ஒரு லட்சத்து 57 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளில் ஈடுபட்டனர்.


Thiruvarur : விடாமல் பெய்த மழை..! மழைநீரில் மூழ்கிய 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள்..! விவசாயிகள் வேதனை..

தற்போது குறுவை சாகுபடி அறுவடை பணிகள் என்பது 100 சதவீதம் முடிவடைந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 517 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தாளடி நெற்பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோன்று இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தற்பொழுது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தாளடி சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பெரும்பாலானோர்  நேரடி விதைப்பு முறையில் விதை விதைத்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக வளிமண்டல கீழடுக்க சுழற்சி மற்றும் வடகிழக்கு பருவமழை தொடக்கத்தின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை என்பது பெய்து வந்தது. 


Thiruvarur : விடாமல் பெய்த மழை..! மழைநீரில் மூழ்கிய 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள்..! விவசாயிகள் வேதனை..

இதன் காரணமாக விதைத்து 20 நாட்களே ஆன  நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி பாதிப்புக்கு உள்ளானது. இந்த நிலையில் வங்க கடலில்  உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றைய முன் தினம் கனமழை தீர்த்தது. இந்தத தொடர் மழையின் காரணமாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம்  கம்மங்குடி, குப்பம், சோத்திரியம், விக்கிரபாண்டியம் கொல்லுமாங்குடி மங்கை நல்லூர் கிராமத்தில் சுமார் 5000 ஏக்கர் பரப்பளவில் சம்பா நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து கன மழை நீடிக்கும் பட்சத்தில் இந்த நெற்பயிர்கள் முற்றிலுமாக மழை நீர் வயல்களில் தேங்கி நெற்பயிர்கள் அழுகி பாதிக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.  மேலும் குறிப்பாக இந்த பகுதியில் வயலில் தேங்கியுள்ள மழைநீரை வடிய வைப்பதற்கான வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படவில்லை என்றும் இதன் காரணமாக தண்ணீரை வடிய வைப்பதிலும் சிக்கல் நீடிப்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.  மேலும் இதுவரை ஏக்கர் ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ள நிலையில் செலவு செய்த பணத்தை கூட எடுக்க முடியாத நிலையில் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

விவசாயிகள் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யுங்கள்... குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்
விவசாயிகள் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யுங்கள்... குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்
234 தொகுதிகளிலும் விஜய் கட்சி டெபாசிட்டை இழக்கும்: அர்ஜுன் சம்பத் சொல்கிறார்
234 தொகுதிகளிலும் விஜய் கட்சி டெபாசிட்டை இழக்கும்: அர்ஜுன் சம்பத் சொல்கிறார்
உள் இணைப்பு சாலை பணிகளை எப்போ தொடங்குவீங்க? திருச்சி மக்கள் எதிர்பார்ப்பு
உள் இணைப்பு சாலை பணிகளை எப்போ தொடங்குவீங்க? திருச்சி மக்கள் எதிர்பார்ப்பு
சம்பா அறுவடையின் போது இப்படி ஒரு சிக்கலா? தவிக்கும் விவசாயிகள்: காரணம் என்ன?
சம்பா அறுவடையின் போது இப்படி ஒரு சிக்கலா? தவிக்கும் விவசாயிகள்: காரணம் என்ன?
ABP Premium

வீடியோ

TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ind vs Zim: கதம் கதம்... சேப்பாக்கில் ஜிம்பாப்வேயை ஊதி தள்ளிய இந்தியா! வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நாக் அவுட்டுக்கு ரெடி
Ind vs Zim: கதம் கதம்... சேப்பாக்கில் ஜிம்பாப்வேயை ஊதி தள்ளிய இந்தியா! வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நாக் அவுட்டுக்கு ரெடி
TN Weather Rain: வெயில் பொளக்குதேன்னு பயப்படாதீங்க.? இதோ மழை வந்துட்டே இருக்கு; வானிலை மையம் குட் நியூஸ்.!
வெயில் பொளக்குதேன்னு பயப்படாதீங்க.? இதோ மழை வந்துட்டே இருக்கு; வானிலை மையம் குட் நியூஸ்.!
EPS Slams DMK Govt.: என்னா சார் இப்படி கேட்டுப்புட்டீங்க.?! SI தேர்வு சர்ச்சையில் திமுக அரசை விளாசிய இபிஎஸ்
என்னா சார் இப்படி கேட்டுப்புட்டீங்க.?! SI தேர்வு சர்ச்சையில் திமுக அரசை விளாசிய இபிஎஸ்
T20 WC IND Vs ZIM: டி20 உலகக் கோப்பை; அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்குமா இந்தியா.? ஜிம்பாப்வேயுடன் இந்தியா முதலில் பேட்டிங்
டி20 உலகக் கோப்பை; அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்குமா இந்தியா.? ஜிம்பாப்வேயுடன் இந்தியா முதலில் பேட்டிங்
பிரம்மாண்ட அறிவியல் திருவிழா! மாணவர்கள் பங்கேற்க அழைப்பு! போட்டி, பரிசுகள்.. விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல்!
பிரம்மாண்ட அறிவியல் திருவிழா! மாணவர்கள் பங்கேற்க அழைப்பு! போட்டி, பரிசுகள்.. விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல்!
Crude Oil Price: இந்தியாவால சீனாவுக்கு அடித்த யோகம்.! ஈரானும், ரஷ்யாவும் கொடுத்த சூப்பர் ஆஃபர்; எதுல தெரியுமா.?
இந்தியாவால சீனாவுக்கு அடித்த யோகம்.! ஈரானும், ரஷ்யாவும் கொடுத்த சூப்பர் ஆஃபர்; எதுல தெரியுமா.?
Maruti Baleno vs Tata Altroz: மாருதி பலேனோவா.? டாடா அல்ட்ராஸா.? எத வாங்குறதுன்னு குழப்பமா இருக்கா.? இத படிச்சா தெளிஞ்சுடும்
மாருதி பலேனோவா.? டாடா அல்ட்ராஸா.? எத வாங்குறதுன்னு குழப்பமா இருக்கா.? இத படிச்சா தெளிஞ்சுடும்
அப்பாடா... ஒரு வழியாக திமுகவுடன் நாளை காங். பேச்சுவார்த்தை- காத்திருந்ததற்கு பலன் கிடைக்குமா..?
அப்பாடா... ஒரு வழியாக திமுகவுடன் நாளை காங். பேச்சுவார்த்தை- காத்திருந்ததற்கு பலன் கிடைக்குமா..?
Embed widget