மேலும் அறிய

Thiruvarur : விடாமல் பெய்த மழை..! மழைநீரில் மூழ்கிய 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள்..! விவசாயிகள் வேதனை..

வயலில் தேங்கியுள்ள மழைநீரை வடிய வைப்பதற்கான வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படவில்லை என்றும், இதன் காரணமாக தண்ணீரை வடிய வைப்பதிலும் சிக்கல் நீடிப்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

கனமழையின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் ஏக்கர் நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கின. விவசாயிகள் நிவாரணம் வழங்க வலியுறுத்தல்.

காவேரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா மற்றும் தாளடி என மூன்று கோபம் நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருவது வழக்கம். இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக மேட்டூர் அணையில் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படாததன் காரணத்தினாலும் உரிய நேரத்தில் பருவமழை பொய்த்து போனதன் காரணத்தினாலும் மூன்று போகும் சாகுபடி என்பது ஒருபோகம் சம்பா சாகுபடி பணிகளை மட்டும் விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மீண்டும் மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி உரிய நேரத்தில் திறக்கப்பட்டதன் காரணத்தினால் கடந்த மூன்று ஆண்டுகளாக டெல்டா மாவட்டங்களில் மூன்று போகம் சாகுபடி பணிகள் என்பது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வருடம் மேட்டூர் அணையிலிருந்து மே 24ம் தேதியே தண்ணீர் திறக்கப்பட்டதால் ஒரு லட்சத்து 57 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளில் ஈடுபட்டனர்.


Thiruvarur : விடாமல் பெய்த மழை..! மழைநீரில் மூழ்கிய 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள்..! விவசாயிகள் வேதனை..

தற்போது குறுவை சாகுபடி அறுவடை பணிகள் என்பது 100 சதவீதம் முடிவடைந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 517 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தாளடி நெற்பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோன்று இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தற்பொழுது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தாளடி சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பெரும்பாலானோர்  நேரடி விதைப்பு முறையில் விதை விதைத்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக வளிமண்டல கீழடுக்க சுழற்சி மற்றும் வடகிழக்கு பருவமழை தொடக்கத்தின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை என்பது பெய்து வந்தது. 


Thiruvarur : விடாமல் பெய்த மழை..! மழைநீரில் மூழ்கிய 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள்..! விவசாயிகள் வேதனை..

இதன் காரணமாக விதைத்து 20 நாட்களே ஆன  நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி பாதிப்புக்கு உள்ளானது. இந்த நிலையில் வங்க கடலில்  உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றைய முன் தினம் கனமழை தீர்த்தது. இந்தத தொடர் மழையின் காரணமாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம்  கம்மங்குடி, குப்பம், சோத்திரியம், விக்கிரபாண்டியம் கொல்லுமாங்குடி மங்கை நல்லூர் கிராமத்தில் சுமார் 5000 ஏக்கர் பரப்பளவில் சம்பா நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து கன மழை நீடிக்கும் பட்சத்தில் இந்த நெற்பயிர்கள் முற்றிலுமாக மழை நீர் வயல்களில் தேங்கி நெற்பயிர்கள் அழுகி பாதிக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.  மேலும் குறிப்பாக இந்த பகுதியில் வயலில் தேங்கியுள்ள மழைநீரை வடிய வைப்பதற்கான வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படவில்லை என்றும் இதன் காரணமாக தண்ணீரை வடிய வைப்பதிலும் சிக்கல் நீடிப்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.  மேலும் இதுவரை ஏக்கர் ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ள நிலையில் செலவு செய்த பணத்தை கூட எடுக்க முடியாத நிலையில் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

ஆயிரம் வேரைக் கொன்றவன் பாதி! ஆரோக்கியம் காக்கும் வைத்திய நீதி: மருவிய பழமொழியின் உண்மை இதோ!!!
ஆயிரம் வேரைக் கொன்றவன் பாதி! ஆரோக்கியம் காக்கும் வைத்திய நீதி: மருவிய பழமொழியின் உண்மை இதோ!!!
கால்நடை மருத்துவப் படிப்புகள்: 16 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம் – கால அவகாசம் ஜூன் 23 வரை நீட்டிப்பு!
கால்நடை மருத்துவப் படிப்புகள்: 16 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம் – கால அவகாசம் ஜூன் 23 வரை நீட்டிப்பு!
"தமிழகத்தில் நடப்பது என்ன ஆட்சி?" - அனல் பறக்கும் அரசியல் விமர்சனத்தை முன்வைத்த பாஜக கருப்பு முருகானந்தம்!
அமர்க்களம் புகுந்த அழகனின் ஆலயங்கள்: அசுர வதம் செய்த ஆறுபடை வீடுகள்!
அமர்க்களம் புகுந்த அழகனின் ஆலயங்கள்: அசுர வதம் செய்த ஆறுபடை வீடுகள்!

வீடியோ

திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!
CM Vijay Vs JCD Prabhakar: “5 திரியையும் நானே ஏத்துறேன் சபாநாயகரை மதிக்காத விஜய்” விளாசிய அதிமுக
Yuvaraja resigns from TMC | ”தமாகா-வில் இருந்து விலகுகிறேன்” யுவராஜா அதிரடி அறிவிப்பு! தவெகவில் இணைகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thangam Thennarasu: ’’தவெக இதை செஞ்சா பதவியில் இருந்தே விலகறேன்’’ தங்கம் தென்னரசு ஓப்பன் சவால்!
Thangam Thennarasu: ’’தவெக இதை செஞ்சா பதவியில் இருந்தே விலகறேன்’’ தங்கம் தென்னரசு ஓப்பன் சவால்!
Mithun Palanisamy : ’மகனுக்காக அதிமுகவை காவு வாங்கும் எடப்பாடி?’ கட்சியில் நடப்பது என்ன..?
’மகனுக்காக அதிமுகவை காவு வாங்கும் எடப்பாடி?’ கட்சியில் நடப்பது என்ன..?
வேறு துறை கேட்கும் விசிக? திருமாவளவன் MASTERPLAN.. குழம்பி நிற்கும் தவெக!
வேறு துறை கேட்கும் விசிக? திருமாவளவன் MASTERPLAN.. குழம்பி நிற்கும் தவெக!
பள்ளிக் கல்வித்துறையே.. இதெல்லாம் செய்ங்க- பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு 9 முக்கிய கோரிக்கைகள்!
பள்ளிக் கல்வித்துறையே.. இதெல்லாம் செய்ங்க- பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு 9 முக்கிய கோரிக்கைகள்!
TN BY-Election: 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
ADMK vs TVK : அதிமுகவின் 4 MLA-க்கள் மட்டுமல்ல சென்னையின் 2 மா.செயலாளர்களும் ரெடி.? எடப்பாடியை அலற விடும் விஜய்
அதிமுகவின் 4 MLA-க்கள் மட்டுமல்ல சென்னையின் 2 மா.செயலாளர்களும் ரெடி.? எடப்பாடியை அலற விடும் விஜய்
ரூ.3 லட்சம் கோடி கடன் வாங்குவது சாத்தியமா? வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசின் செயல்திட்டம் என்ன? அன்புமணி கேள்வி
ரூ.3 லட்சம் கோடி கடன் வாங்குவது சாத்தியமா? வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசின் செயல்திட்டம் என்ன? அன்புமணி கேள்வி
கோயில் பூஜை பொருள் விற்பனைக்கு புது விதிகள்: மீறினால் அபராதம், உரிமம் ரத்து- அமைச்சர் ரமேஷ் எச்சரிக்கை!
கோயில் பூஜை பொருள் விற்பனைக்கு புது விதிகள்: மீறினால் அபராதம், உரிமம் ரத்து- அமைச்சர் ரமேஷ் எச்சரிக்கை!
Embed widget