மேலும் அறிய

30 ஆயிரத்திற்கு மேற்பட்ட கடைகள் அடைப்பு.. லாரிகள் நிறுத்தம்.. கர்நாடகாவை கண்டித்து வணிகர்கள் போராட்டம்!

திருவாரூர் மன்னார்குடி திருத்துறைப்பூண்டி குடவாசல் கூத்தாநல்லூர் நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 30,000 கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயங்கவில்லை

காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து காவிரி படுகை கூட்டியக்கம் சார்பில் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டம்.
 
காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் புதுக்கோட்டை திருச்சி கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீரை நம்பி 5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குருவை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை மாவட்டமான தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு முழுமையாக வந்து சேராத காரணத்தினால் லட்சக்கணக்கான ஏக்கர் குருவை நெல் பயிர்கள் கருக தொடங்கின. உடனடியாக காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை திறந்து விட்டால் மட்டுமே டெல்டா மாவட்டங்களில் குருவை நெல் சாகுபடியை காப்பாற்ற முடியும் எனக்கூறி தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
 
உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் காவிரி மேலாண்மை தீர்ப்பினை ஏற்றுக் கொள்ளாமல் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை வழங்காத கர்நாடக அரசையும் மத்திய அரசையும் கண்டித்து திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை தஞ்சாவூர் அரியலூர் புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் முழு அடைப்பு மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக மறியல் போராட்டம் நடைபெறும் என  அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் போராட்டத்திற்கு அரசியல் கட்சியினர் மற்றும் வர்த்தக சங்கத்தினர் முழு ஆதரவு தெரிவித்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறும் முழு அடைப்பில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சிகள் இந்த முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

30 ஆயிரத்திற்கு மேற்பட்ட கடைகள் அடைப்பு.. லாரிகள் நிறுத்தம்.. கர்நாடகாவை கண்டித்து வணிகர்கள் போராட்டம்!
 
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி திருத்துறைப்பூண்டி குடவாசல் கூத்தாநல்லூர் நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 30,000 கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மாவட்டம் முழுவதும் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயங்கவில்லை. அதே போன்று ஆட்டோக்களும் ஓடவில்லை. ஆட்டோக்கள் பள்ளி குழந்தைகளை அழைத்து செல்வதற்கு மட்டும் பயன்படுத்தப்படும் என்று சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருவாரூர் பழைய பேருந்து நிலையம் பேருந்துகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. அதேபோன்று திருவாரூர் விஜயபுரம் காய்கறி மார்க்கெட் போன்ற இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டன.

30 ஆயிரத்திற்கு மேற்பட்ட கடைகள் அடைப்பு.. லாரிகள் நிறுத்தம்.. கர்நாடகாவை கண்டித்து வணிகர்கள் போராட்டம்!
 
மேலும் காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் திருவாரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேபோன்று காவல்துறை வாகனங்களும் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு காரணம் கருதி ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன. திருவாரூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து இயக்கப்படும் 45 அரசு பேருந்துகளும் என்று இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் திருவாரூர் மாவட்ட முழுவதும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டு இருப்பதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

தலைப்பு செய்திகள்

பட்டுக்கோட்டையில் இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 
பட்டுக்கோட்டையில் இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 
தரக்கட்டுப்பாட்டு அதிகாரியின் அதிரடி: கும்பகோணத்தில் உர இருப்பு குறித்து திடீர் ஆய்வு
தரக்கட்டுப்பாட்டு அதிகாரியின் அதிரடி: கும்பகோணத்தில் உர இருப்பு குறித்து திடீர் ஆய்வு
பேரிடர் வந்தாலும் பதறாதீங்க மாணவாஸ்... என்ன செய்யணும்? செய்முறை பயிற்சி நிறைவு
பேரிடர் வந்தாலும் பதறாதீங்க மாணவாஸ்... என்ன செய்யணும்? செய்முறை பயிற்சி நிறைவு
பாடாலூரில் பரபரப்பு: பள்ளி, கல்லூரி மாணவிகள் 2 பேர் மாயம்: போலீசார் தீவிர விசாரணை
பாடாலூரில் பரபரப்பு: பள்ளி, கல்லூரி மாணவிகள் 2 பேர் மாயம்: போலீசார் தீவிர விசாரணை

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
Trump Tariff on India: போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
iPhone 17 Price Hike: மக்களே.! ஐபோன் 17 வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; ஆகஸ்ட்ல எக்கச்சக்கமா விலை ஏறப்போகுது.!
மக்களே.! ஐபோன் 17 வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; ஆகஸ்ட்ல எக்கச்சக்கமா விலை ஏறப்போகுது.!
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
Mahindra New Upcoming SUV: டாடா, ஹூண்டாய்க்கு வரும் சத்திய சோதனை.! பவர்ஃபுல் SUV-யை இறக்கும் மஹிந்திரா; மலைப்பகுதியில் விஷன் S சோதனை
டாடா, ஹூண்டாய்க்கு வரும் சத்திய சோதனை.! பவர்ஃபுல் SUV-யை இறக்கும் மஹிந்திரா; மலைப்பகுதியில் விஷன் S சோதனை
Embed widget