மேலும் அறிய

30 ஆயிரத்திற்கு மேற்பட்ட கடைகள் அடைப்பு.. லாரிகள் நிறுத்தம்.. கர்நாடகாவை கண்டித்து வணிகர்கள் போராட்டம்!

திருவாரூர் மன்னார்குடி திருத்துறைப்பூண்டி குடவாசல் கூத்தாநல்லூர் நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 30,000 கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயங்கவில்லை

காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து காவிரி படுகை கூட்டியக்கம் சார்பில் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டம்.
 
காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் புதுக்கோட்டை திருச்சி கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீரை நம்பி 5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குருவை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை மாவட்டமான தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு முழுமையாக வந்து சேராத காரணத்தினால் லட்சக்கணக்கான ஏக்கர் குருவை நெல் பயிர்கள் கருக தொடங்கின. உடனடியாக காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை திறந்து விட்டால் மட்டுமே டெல்டா மாவட்டங்களில் குருவை நெல் சாகுபடியை காப்பாற்ற முடியும் எனக்கூறி தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
 
உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் காவிரி மேலாண்மை தீர்ப்பினை ஏற்றுக் கொள்ளாமல் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை வழங்காத கர்நாடக அரசையும் மத்திய அரசையும் கண்டித்து திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை தஞ்சாவூர் அரியலூர் புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் முழு அடைப்பு மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக மறியல் போராட்டம் நடைபெறும் என  அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் போராட்டத்திற்கு அரசியல் கட்சியினர் மற்றும் வர்த்தக சங்கத்தினர் முழு ஆதரவு தெரிவித்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறும் முழு அடைப்பில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சிகள் இந்த முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

30 ஆயிரத்திற்கு மேற்பட்ட கடைகள் அடைப்பு.. லாரிகள் நிறுத்தம்.. கர்நாடகாவை கண்டித்து வணிகர்கள் போராட்டம்!
 
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி திருத்துறைப்பூண்டி குடவாசல் கூத்தாநல்லூர் நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 30,000 கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மாவட்டம் முழுவதும் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயங்கவில்லை. அதே போன்று ஆட்டோக்களும் ஓடவில்லை. ஆட்டோக்கள் பள்ளி குழந்தைகளை அழைத்து செல்வதற்கு மட்டும் பயன்படுத்தப்படும் என்று சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருவாரூர் பழைய பேருந்து நிலையம் பேருந்துகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. அதேபோன்று திருவாரூர் விஜயபுரம் காய்கறி மார்க்கெட் போன்ற இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டன.

30 ஆயிரத்திற்கு மேற்பட்ட கடைகள் அடைப்பு.. லாரிகள் நிறுத்தம்.. கர்நாடகாவை கண்டித்து வணிகர்கள் போராட்டம்!
 
மேலும் காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் திருவாரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேபோன்று காவல்துறை வாகனங்களும் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு காரணம் கருதி ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன. திருவாரூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து இயக்கப்படும் 45 அரசு பேருந்துகளும் என்று இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் திருவாரூர் மாவட்ட முழுவதும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டு இருப்பதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

தலைப்பு செய்திகள்

சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
பாசன வாய்க்கால் பால இரும்பு பாதுகாப்பு தடுப்பு சேதம்... பொதுமக்கள் அச்சம்
பாசன வாய்க்கால் பால இரும்பு பாதுகாப்பு தடுப்பு சேதம்... பொதுமக்கள் அச்சம்
புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்... எதற்காக தெரியுங்களா?
புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்... எதற்காக தெரியுங்களா?
ஏமாற்றத்தை அளிக்கும் தமிழக பட்ஜெட்... வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு தலைவர் கடும் கண்டனம்
ஏமாற்றத்தை அளிக்கும் தமிழக பட்ஜெட்... வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு தலைவர் கடும் கண்டனம்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
TTV vs Vijay : கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
Embed widget