மேலும் அறிய

திருவாரூரில் ‘இல்லம் தேடி கல்வி திட்ட’ வகுப்புக்கு சென்ற 4 மாணவர்கள் மின்சாரம் தாக்கி படுகாயம்

இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் படிக்கச் சென்ற நான்கு மாணவர்கள் மின்சாரம் தாக்கி அரசு மருத்துவமனையில் அனுமதி. 

இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் படிக்கச் சென்ற நான்கு மாணவர்கள் மின்சாரம் தாக்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் திருவாதிரைமங்கலம் என்கிற ஊரில் சங்கர் என்பவருக்கு சொந்தமான இடத்தில் கீற்று கொட்டகை அமைத்து இல்லம் தேடி கல்விக்கான வகுப்புகள் என்பது நடைபெற்று வருகிறது. அந்த கீற்றுக் கொட்டகைக்கு செல்லும் மின்சார ஒயர் என்பது அறுந்து  அருகில் உள்ள கம்பி வேலியில் கிடந்துள்ளது. 

இந்தநிலையில், திருவாதிரை மங்களத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரின் மகன் சந்துரு வயது 8, ஞானவேல் என்பவரது மகன் நிஷ்வந்த் வயது 6, கரன் சந்திரபோஸ் என்பவரின் மகன் யஸ்வந்த் யுகன் வயது 9, மற்றும் மணி என்பவரின் மகன் சுரேஷ் குமார் வயது 11 ஆகியோர் இல்லம் தேடி கல்வி வகுப்பிற்கு வந்திருந்த நிலையில் அருகில் உள்ள இடத்தில்  விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். 
இந்த நிலையில் விளையாடிக் கொண்டிருந்த நான்கு சிறுவர்களும் எதிர்பாராத விதமாக அருகில் இருந்த கம்பி வேலியை தொட்டுள்ளனர். ஏற்கெனவே கம்பியில் அறுந்து கிடந்த மின்சார ஒயரின் காரணமாக கம்பி வேலியில் பாய்ந்த மின்சாரம் தாக்கி சிறுவர்கள் நால்வரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர். உடனடியாக கிராம மக்கள் அவர்களை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். 

இதனையடுத்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்று மாணவர்களின் பெற்றோர்களிடம் ஆறுதல் கூறியதுடன் இது குறித்து விசாரித்துள்ளார். மேலும் வைப்பூர் காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த 4 சிறுவர்கள் மின்சாரம் தாக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாணவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் குவிந்துள்ளதால் பெரும் பரபரப்பு காணப்படுகிறது. 

 இல்லம் தேடி கல்வித் திட்டம் நடக்கின்ற இடம் சங்கர் என்பவருக்கு சொந்தமானது. ஆகையால் அவர் வீட்டில் இருந்து சென்ற மின்சார ஒயர் எப்படி அறுந்து விழுந்தது. அதனை அவர்கள் முன்கூட்டியே பார்க்கவில்லையா? ஆபத்தான நிலையில் இருந்த மின்பெட்டியை மூடி வைக்கவில்லையா? என்ற கோணத்தில் காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பள்ளிச் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த பொழுது இந்த சம்பவம் நடைபெற்றதா அல்லது இல்லம் தேடி கல்வி வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது இந்த சம்பவம் நடைபெற்றதா என்பது குறித்தும் சங்கர் மற்றும் இல்லம் தேடி கல்வி ஆசிரியர் மற்றும் அந்தப் பகுதி கிராம மக்கள் ஆகியோரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நான்கு சிறுவர்கள் மீது மின்சாரம் தாக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது அந்த பகுதி மக்கள் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Savukku Shankar: எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
OPS vs EPS: கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... வேறு வழியில்லாமல் ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
ABP Premium

வீடியோ

Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Savukku Shankar: எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
OPS vs EPS: கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... வேறு வழியில்லாமல் ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
Embed widget