மேலும் அறிய

திருவாரூரில் ‘இல்லம் தேடி கல்வி திட்ட’ வகுப்புக்கு சென்ற 4 மாணவர்கள் மின்சாரம் தாக்கி படுகாயம்

இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் படிக்கச் சென்ற நான்கு மாணவர்கள் மின்சாரம் தாக்கி அரசு மருத்துவமனையில் அனுமதி. 

இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் படிக்கச் சென்ற நான்கு மாணவர்கள் மின்சாரம் தாக்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் திருவாதிரைமங்கலம் என்கிற ஊரில் சங்கர் என்பவருக்கு சொந்தமான இடத்தில் கீற்று கொட்டகை அமைத்து இல்லம் தேடி கல்விக்கான வகுப்புகள் என்பது நடைபெற்று வருகிறது. அந்த கீற்றுக் கொட்டகைக்கு செல்லும் மின்சார ஒயர் என்பது அறுந்து  அருகில் உள்ள கம்பி வேலியில் கிடந்துள்ளது. 

இந்தநிலையில், திருவாதிரை மங்களத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரின் மகன் சந்துரு வயது 8, ஞானவேல் என்பவரது மகன் நிஷ்வந்த் வயது 6, கரன் சந்திரபோஸ் என்பவரின் மகன் யஸ்வந்த் யுகன் வயது 9, மற்றும் மணி என்பவரின் மகன் சுரேஷ் குமார் வயது 11 ஆகியோர் இல்லம் தேடி கல்வி வகுப்பிற்கு வந்திருந்த நிலையில் அருகில் உள்ள இடத்தில்  விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். 
இந்த நிலையில் விளையாடிக் கொண்டிருந்த நான்கு சிறுவர்களும் எதிர்பாராத விதமாக அருகில் இருந்த கம்பி வேலியை தொட்டுள்ளனர். ஏற்கெனவே கம்பியில் அறுந்து கிடந்த மின்சார ஒயரின் காரணமாக கம்பி வேலியில் பாய்ந்த மின்சாரம் தாக்கி சிறுவர்கள் நால்வரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர். உடனடியாக கிராம மக்கள் அவர்களை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். 

இதனையடுத்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்று மாணவர்களின் பெற்றோர்களிடம் ஆறுதல் கூறியதுடன் இது குறித்து விசாரித்துள்ளார். மேலும் வைப்பூர் காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த 4 சிறுவர்கள் மின்சாரம் தாக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாணவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் குவிந்துள்ளதால் பெரும் பரபரப்பு காணப்படுகிறது. 

 இல்லம் தேடி கல்வித் திட்டம் நடக்கின்ற இடம் சங்கர் என்பவருக்கு சொந்தமானது. ஆகையால் அவர் வீட்டில் இருந்து சென்ற மின்சார ஒயர் எப்படி அறுந்து விழுந்தது. அதனை அவர்கள் முன்கூட்டியே பார்க்கவில்லையா? ஆபத்தான நிலையில் இருந்த மின்பெட்டியை மூடி வைக்கவில்லையா? என்ற கோணத்தில் காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பள்ளிச் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த பொழுது இந்த சம்பவம் நடைபெற்றதா அல்லது இல்லம் தேடி கல்வி வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது இந்த சம்பவம் நடைபெற்றதா என்பது குறித்தும் சங்கர் மற்றும் இல்லம் தேடி கல்வி ஆசிரியர் மற்றும் அந்தப் பகுதி கிராம மக்கள் ஆகியோரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நான்கு சிறுவர்கள் மீது மின்சாரம் தாக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது அந்த பகுதி மக்கள் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Embed widget