மேலும் அறிய

"வாங்க! விதிமுறைகள் இதுதாங்க!" வரும் 18ம் தேதி ஏலம் - தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தஞ்சை மாவட்டம் ஈச்சங்கோட்டை அரசு கால்நடை பண்ணையில் உள்ள கால்நடைகள் வரும் 18ம் தேதி ஏலம் விடப்பட உள்ளன என்று மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் ஈச்சங்கோட்டை அரசு கால்நடை பண்ணையில் உள்ள கால்நடைகள் வரும் 18ம் தேதி ஏலம் விடப்பட உள்ளன என்று மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

கால்நடைகள்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:  தஞ்சை மாவட்டம் ஈச்சங்கோட்டையில் உள்ள மாவட்ட அரசு உயிரின கால்நடை பெருக்கு பண்ணையில் கழிவு செய்யப்பட்ட 18 கால்நடைகள் வரும் 18ம் தேதி வியாழக்கிழமை காலை 11 மணியளவில் பொது ஏலம் விடப்பட உள்ளது. ஏலம் அரசு விதிமுறைகளின் படி பகிரங்கமாக துணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் நடத்தப்படுகிறது. 

ஜெர்சி பொலி காளைகள் ஏலம்

இதில் ஜெர்சி பொலி காளைகள் 5, திருச்சி கலப்பின பொலி காளை 19, முர்ரா வகை மாடு 2 என மொத்தம் 26 கால்நடைகள் ஏலம் இடப்படுகிறது. ஏலத்தில் கலந்து கொள்ளும் நபர்கள் தனித்தனியாக முன் வைப்பு தொகை 20 ஆயிரத்தை கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குனர், மாவட்ட கால்நடை உயிரின பெருக்குபண்ணை, ஈச்சங்கோட்டை. என்ற பெயரில் வங்கி வரைவோலையாக தஞ்சையில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் மாற்றத்தக்க வகையில் எடுத்து வர வேண்டும்.

ஒரு நபரிடமிருந்து ஒரு வங்கி வரைவோலை

ஒரு நபரிடமிருந்து ஒரு வங்கி வரைவோலை மட்டுமே பெற்றுக் கொள்ளப்படும். ஏலத்தில் கலந்து கொள்பவர்களின் பெயர் மற்றும் முகவரி போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டு போலீசார் உதவியுடன் ஏலம் நடத்தப்படும். வைப்புத் தொகையாக செலுத்தப்படும் வங்கி வரைவோலைகள் அனைத்தும் வரும் 12-ம் தேதி முதல் 16ம் தேதி வரை பெறப்பட்ட வங்கி வரைவோலையாக இருக்க வேண்டும். இதற்குப் பிந்தைய அல்லது முந்தைய தேதியில் பெறப்பட்ட வரைவோலைகள் ஏற்கப்பட மாட்டாது. ஏலத்தில் வங்கி வரைவோலைகளை கொடுத்த நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.  

வைப்புத் தொகை திருப்பி வழங்கப்படும்

கால்நடை ஏலம் எடுத்தவர் முழு ஏல தொகைகளும் செலுத்திய பின்னரே அடுத்த ஏலம் கோர அனுமதிக்கப்படுவர். ஏலம் முடிந்தவுடன் அதிக தொகைக்கு ஏலம் கோரிய வரை தவிர இதர நபர்களுக்கு வைப்புத்தொகை வங்கி வரை வேலை திருப்பி வழங்கப்படும். ஏலம் முடிந்தவுடன் முழுத் தொகையும் உடனே செலுத்தி கால்நடைகளை அன்றே எடுத்துச் செல்ல வேண்டும். ஏலம் விடப்படும் கால்நடைகளை பண்ணையில் உள்ள கால்நடை பிரிவு  உதவி டாக்டர்களை அணுகி அனுமதி பெற்று பார்வையிடலாம்.

ஏலத்தை தள்ளி வைக்க அதிகாரம் உண்டு

ஏலம் கேட்ட தொகை அரசு நிர்ணயித்த தொகைக்கு குறைவாக இருப்பின் அல்லது நிர்வாக காரணங்களால் ஏலம் தடை பட்டாலும் ஏலத்தை தள்ளி வைக்கவும் ரத்து செய்யவும் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனருக்கு முழு அதிகாரம் உண்டு. மத்திய மாநில அரசு ஊழியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் இந்த பொது ஏலத்தில் பங்கு பெற அனுமதி இல்லை. ஏலத்தில் வங்கி வரைவோலைகளை கொடுத்த நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். குடிபோதையில் இருப்பவர்கள் ஏலத்தில் கண்டிப்பாக கலந்து கொள்ள அனுமதிக்க பட மாட்டாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
இந்தியர்களே! இனி இலங்கைக்கு போக விசா தேவையில்லை - இன்று முதல் அமல்
இந்தியர்களே! இனி இலங்கைக்கு போக விசா தேவையில்லை - இன்று முதல் அமல்
கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியத்தை வெளியிட்ட பாரதிராஜா..
கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியத்தை வெளியிட்ட பாரதிராஜா..
Embed widget