மேலும் அறிய

குவைத் தீ விபத்தில் மரணம்! தஞ்சை வாலிபர் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் - மாவட்ட ஆட்சியர் நேரில் அஞ்சலி

குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான பேராவூரணி பகுதியைச் சேர்ந்த வாலிபரின் உடல் சொந்த கிராமத்திற்கு நேற்று நள்ளிரவு கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

தஞ்சாவூர்: குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியைச் சேர்ந்த வாலிபரின் உடல் சொந்த கிராமத்திற்கு நேற்று நள்ளிரவு கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் சென்று வாலிபரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அரசு அறிவித்த நிவாரணத் தொகையை அவரது குடும்பத்தினருக்கு வழங்கினார். 

சொந்த கிராமத்திற்கு வந்த வாலிபரின் உடல்

குவைத் நாட்டில் மங்காஃப் என்ற இடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த, தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஆதனூர் பகுதியை சேர்ந்த ரூனாஃப் ரிச்சர்ட் ராய் என்பவருடைய உடல் குவைத் நாட்டில் இருந்து விமான மூலம் கொண்டு கேரளா மாநிலம் கொச்சிக்கு கொண்டு வரப்பட்டது. 


குவைத் தீ விபத்தில் மரணம்! தஞ்சை வாலிபர் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் - மாவட்ட ஆட்சியர் நேரில் அஞ்சலி

பின்னர் கொச்சியில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சொந்த கிராமத்திற்கு நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் கொண்டு வரப்பட்டது. அவரது உடலைக் கண்டு பெற்றோர்கள், உறவினர்கள், கிராமத்தினர் கதறி அழுதது பார்ப்பவர்களை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியது. 

நேரில் அஞ்சலி செலுத்திய மாவட்ட ஆட்சியர்:

இதற்கிடையில் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆதனூருக்கு நேரில் வந்தார். தொடர்ந்து புனாஃப் ரிச்சர்ட் ராய் உடலுக்கு அவர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ, வட்டாட்சியர் தெய்வானை ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். பின்னர்  புனாஃப் ரிச்சர்ட் ராய் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த நிவாரணத் தொகை ரூ.5 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கி ஆறுதல் கூறினார். 

கல்லறைத் தோட்டத்தில் உடல் நல்லடக்கம்:

அதைத் தொடர்ந்து புனாஃப் ரிச்சர்ட் ராய் உடல் அவரது வீட்டில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு புனித அன்னாள் ஆலயத்தில் வைக்கப்பட்டு, சிறப்பு பிரார்த்தனை மற்றும் இறுதி நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் ஆர்.சி கல்லறை தோட்டத்தில் உடல் நல்லடக்கம் நடைபெற்றது. இதில் பேராவூரணி மற்றும் ஆதனூரை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு புனாஃப் ரிச்சர்ட் ராய் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tasmac Income: டாஸ்மாக் வருமானம்: கடந்த ஆண்டைவிட ரூ. 1, 734 கோடி அதிகரிப்பு
Tasmac Income: டாஸ்மாக் வருமானம்: கடந்த ஆண்டைவிட ரூ. 1, 734 கோடி அதிகரிப்பு
kallakurichi Illicit Liquor Death issue: மோசமான அரசியலை எடப்பாடி பழனிசாமி கையில் எடுத்துள்ளார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மோசமான அரசியலை எடப்பாடி பழனிசாமி கையில் எடுத்துள்ளார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
The GOAT Second Single: விஜய்யின் தி கோட் 2வது பாடலில் மறைந்த பவதாரணியின் குரல்.. க்ளிம்ஸ் வீடியோ!
The GOAT Second Single: விஜய்யின் தி கோட் 2வது பாடலில் மறைந்த பவதாரணியின் குரல்.. க்ளிம்ஸ் வீடியோ!
Breaking News LIVE: துப்பாக்கிச்சுடுதல் : முன்னணி வீராங்கனை ஷ்ரேயாசி சிங் பாரீஸ் ஒலிம்பிக்குக்கு தகுதி
Breaking News LIVE: துப்பாக்கிச்சுடுதல் : முன்னணி வீராங்கனை ஷ்ரேயாசி சிங் பாரீஸ் ஒலிம்பிக்குக்கு தகுதி
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்Saattai Duraimurugan Kallakurichi : சாட்டை மீது தாக்குதல்! கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!நடந்தது என்ன?Kallakurichi kalla sarayam  : Suriya on Kallakurichi Kallasarayam: ”தமிழக அரசுக்கு கண்டனம்! 20 ஆண்டுகளாக அவலம்” கொந்தளித்த சூர்யா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tasmac Income: டாஸ்மாக் வருமானம்: கடந்த ஆண்டைவிட ரூ. 1, 734 கோடி அதிகரிப்பு
Tasmac Income: டாஸ்மாக் வருமானம்: கடந்த ஆண்டைவிட ரூ. 1, 734 கோடி அதிகரிப்பு
kallakurichi Illicit Liquor Death issue: மோசமான அரசியலை எடப்பாடி பழனிசாமி கையில் எடுத்துள்ளார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மோசமான அரசியலை எடப்பாடி பழனிசாமி கையில் எடுத்துள்ளார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
The GOAT Second Single: விஜய்யின் தி கோட் 2வது பாடலில் மறைந்த பவதாரணியின் குரல்.. க்ளிம்ஸ் வீடியோ!
The GOAT Second Single: விஜய்யின் தி கோட் 2வது பாடலில் மறைந்த பவதாரணியின் குரல்.. க்ளிம்ஸ் வீடியோ!
Breaking News LIVE: துப்பாக்கிச்சுடுதல் : முன்னணி வீராங்கனை ஷ்ரேயாசி சிங் பாரீஸ் ஒலிம்பிக்குக்கு தகுதி
Breaking News LIVE: துப்பாக்கிச்சுடுதல் : முன்னணி வீராங்கனை ஷ்ரேயாசி சிங் பாரீஸ் ஒலிம்பிக்குக்கு தகுதி
கள்ளச்சாராய கோரம்! உயிரிழப்புகள் அதிகரிக்க காரணம் என்ன? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
கள்ளச்சாராய கோரம்! உயிரிழப்புகள் அதிகரிக்க காரணம் என்ன? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
கெஜ்ரிவால் சிறையிலிருந்து வெளிவர சில நிமிடம்: திடீரென ஜாமீன் உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம்: நடந்தது என்ன?
கெஜ்ரிவால் சிறையிலிருந்து வெளிவர சில நிமிடம்: திடீரென ஜாமீன் உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம்: நடந்தது என்ன?
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் உயிரிழப்பு எதிரொலி - மயிலாடுதுறையில் அதிரடி நடவடிக்கை எடுத்த ஆட்சியர்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் உயிரிழப்பு எதிரொலி - மயிலாடுதுறையில் அதிரடி நடவடிக்கை எடுத்த ஆட்சியர்
Sivakarthikeyan Seeman Meeting: தம்பி சிவாவுடன் கூட்டணி சேர்கிறாரா சீமான்? வெளியான புகைப்படத்தால் கசிந்த தகவல்!
Sivakarthikeyan Seeman Meeting: தம்பி சிவாவுடன் கூட்டணி சேர்கிறாரா சீமான்? வெளியான புகைப்படத்தால் கசிந்த தகவல்!
Embed widget