மேலும் அறிய

ஆட்கள் கிடைப்பது அரிது... கை கொடுக்கும் இயந்திரங்கள்: அசத்தும் விவசாயிகள்

தஞ்சையின் முக்கிய சாகுபடி பயிராக நெல் உள்ளது. கரும்பு, நிலக்கடலை, உளுந்து, சோளம் என்று பயிரிடப்பட்டாலும் அதிக பரப்பளவில் நெல் சாகுபடியைதான் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் ராமநாதபுரம் ஊராட்சியில் விவசாயப்பணிக்கு ஆட்கள் பற்றாக்குறையால் விவசாயிகள் இயந்திரங்கள் வாயிலாக நாற்று நடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இப்பகுதியில் ஏராளமான விவசாயிகள் இயந்திர நடவையே மேற்கெண்டு வருகின்றனர். பணமும், நேரமும் மிச்சமாகிறது என்று தெரிவிக்கின்றனர்.

தஞ்சையின் முக்கிய சாகுபடி பயிர்

தஞ்சையின் முக்கிய சாகுபடி பயிராக நெல் உள்ளது. கரும்பு, நிலக்கடலை, உளுந்து, சோளம் என்று பயிரிடப்பட்டாலும் அதிக பரப்பளவில் நெல் சாகுபடியைதான் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். நெல் அதிகம் விளையும் தஞ்சை மாவட்டத்தில் தற்போது சம்பா சாகுபடி மும்முரமாக நடந்து வருகிறது. மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் காலதாமதமாக திறக்கப்பட்டது.

மேலும் மழையும் சரியாக பெய்யாத நிலையில் தஞ்சை மாவட்டம் ஆலக்குடி, வல்லம், 8.கரம்பை, கல்விராயன் பேட்டை, சித்திரக்குடி, கள்ளப்பெரம்பூர், சக்கரசாமந்தம் உட்பட பல பகுதிகளில் ஆற்றுப்பாசனத்தை நம்பி விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள் குறுவை சாகுபடியை செய்யவில்லை. பம்ப்செட் வசதி உள்ள விவசாயிகள் மட்டும் குறுவை சாகுபடி செய்து அறுவடையை முடித்தனர்.

ஒரு போக சம்பா சாகுபடி பணிகள்

இந்நிலையில் தற்போது ஆற்றில் தண்ணீர் வருவதால் இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஒரு போக சம்பா சாகுபடியை மேற்கொண்டுள்ளனர். சில விவசாயிகள் நேரடி விதைப்பாகவும், நாற்று விட்டும் சாகுபடி பணிகளை தொடங்கி உள்ளனர். பல விவசாயிகள் பாய் நாற்றங்கால் முறையில் சாகுபடியை மேற்கொண்டுள்ளனர்.

விவசாயிகளுக்கு கை கொடுக்கும் இயந்திரங்கள்
 
அந்த வகையில் தஞ்சை அருகே ராமநாதபுரம் ஊராட்சியில் விவசாயிகள் பாய் நாற்றங்கால் சாகுபடி செய்து வருகின்றனர். இதற்காக நாற்று நடும் சிறிய இயந்திரத்தை கொண்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இப்பகுதியில் பல்வேறு விவசாயிகளும் பாய் நாற்றங்காலை மேற்கொள்ள முக்கிய காரணமாக விவசாயப்பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ளது என்று தெரிவிக்கின்றனர்.

ஒரு போக சம்பா சாகுபடியை பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் மேற்கொள்வதால் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் விவசாயப்பணிக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இதனால் களை எடுப்பது, நாற்று நடுவது போன்ற பணிகளை விவசாயிகள் இயந்திரங்களை கொண்டு செய்து வருகின்றனர்.

விவசாயப்பணிக்கு ஆட்கள் கிடைப்பது அரிதாகிறது

இதுகுறித்து ராமநாதபுரம் ஊராட்சியை சேர்ந்த விவசாயி வீரராகவன் கூறியதாவது; தற்போது விவசாயப்பணிக்கு ஆட்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. இதனால் பாய் நாற்றங்கால் சாகுபடியை மேற்கொண்டு இயந்திர நடவு செய்து வருகிறோம். கூடுதல் சம்பளம் கொடுக்கும் இடத்திற்கு விவசாயத் தொழிலாளர்கள் செல்கின்றனர். இதனால் தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் வெளி மாநில ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் நாற்று நடும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
உரம் தட்டுப்பாடின்றி கிடைக்கணும்

தற்போது மழை மற்றும் ஆற்றில் வரும் தண்ணீரை நம்பி ஒரு போக சம்பா சாகுபடியை மேற்கொண்டுள்ளோம். தற்போது விட்டு விட்டு மழை பெய்வதால் நெல் பயிர்களில் பூச்சி தாக்குதல்  ஏற்படக்கூடாது என்பதற்காக பூச்சி மருந்து அடித்து வருகிறோம். இனி வரும் நாட்களில் உரங்கள் தேவை இருக்கும். அதை தட்டுப்பாடின்றி வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Ramadoss Vs Anbumani: “நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
“நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
EPS ADMK: அதிமுகவில் ஓபிஎஸ்க்கு நோ... டிடிவிக்கு..? அமித்ஷாவுடன் சந்திப்பில் நடந்தது என்ன.? இபிஎஸ் பரபரப்பு தகவல்
அதிமுகவில் ஓபிஎஸ்க்கு நோ... டிடிவிக்கு..? அமித்ஷாவுடன் சந்திப்பில் நடந்தது என்ன.? இபிஎஸ் பரபரப்பு தகவல்
ABP Premium

வீடியோ

ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!
Madhampatti Rangaraj|”அது என் குழந்தையா DNA TEST எடுக்கணும்” ஜாய்-ஐ சீண்டும் மாதம்பட்டி
MP Jothimani Issue | ’’எதுக்கு வந்தீங்க ஜோதிமணி?’’வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்அடித்து விரட்டிய காங்கிரஸார்’’ஏய்..போடா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Ramadoss Vs Anbumani: “நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
“நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
EPS ADMK: அதிமுகவில் ஓபிஎஸ்க்கு நோ... டிடிவிக்கு..? அமித்ஷாவுடன் சந்திப்பில் நடந்தது என்ன.? இபிஎஸ் பரபரப்பு தகவல்
அதிமுகவில் ஓபிஎஸ்க்கு நோ... டிடிவிக்கு..? அமித்ஷாவுடன் சந்திப்பில் நடந்தது என்ன.? இபிஎஸ் பரபரப்பு தகவல்
Tata Punch Facelift: பீஸ்ட் மோடில் பஞ்ச்.. ஃபேஸ்லிஃப்ட்டின் வேரியண்ட்களும், அம்சங்களும்.. மொத்த லிஸ்டை கொடுத்த டாடா
Tata Punch Facelift: பீஸ்ட் மோடில் பஞ்ச்.. ஃபேஸ்லிஃப்ட்டின் வேரியண்ட்களும், அம்சங்களும்.. மொத்த லிஸ்டை கொடுத்த டாடா
Trump Vs Petro: அமெரிக்காவிடமிருந்து தப்புமா கொலம்பியா.? ட்ரம்ப்பை அழைத்துப் பேசிய பெட்ரோ; விரைவில் சந்திப்பு
அமெரிக்காவிடமிருந்து தப்புமா கொலம்பியா.? ட்ரம்ப்பை அழைத்துப் பேசிய பெட்ரோ; விரைவில் சந்திப்பு
iPhone 200mp Camera: DSLR-களை ஓரங்கட்ட வரும் ஆப்பிள் ஐபோன்; ஆத்தாடி.! 200 MP கேமராவா.? சம்பவம் எப்போ தெரியுமா.?
DSLR-களை ஓரங்கட்ட வரும் ஆப்பிள் ஐபோன்; ஆத்தாடி.! 200 MP கேமராவா.? சம்பவம் எப்போ தெரியுமா.?
Chennai Power Cut: சென்னைல ஜனவரி 9-ம் தேதி எங்கெங்க மின் தடை செய்யப் போறாங்கன்னு தெரியுமா.? விவரம் இதோ
சென்னைல ஜனவரி 9-ம் தேதி எங்கெங்க மின் தடை செய்யப் போறாங்கன்னு தெரியுமா.? விவரம் இதோ
Embed widget