மேலும் அறிய

தஞ்சையில் ரேஷன் கார்டு, ஆதார் கார்டுகளை வீசியெறிந்து போராட்டம் நடத்திய பெண்களால் பரபரப்பு

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் ஒருமையில் பேசியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் இந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

தஞ்சாவூர்:  தஞ்சை சூரக்கோட்டை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை பட்டா வழங்காததை கண்டித்து தங்களது ரேஷன் கார்டு, ஆதார் அட்டை அனைத்தையும் சாலையில் வீசியெறிந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்து பொதுமக்கள் வழங்கிய மனுக்களை பெற்றுக் கொண்டார். தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த பல பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

அப்போது தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டை பகுதியில் இருந்து குழந்தைகளுடன் வந்த பெண்கள் கலெக்டர் அலுவலக முகப்பில் திடீரென்று அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது அவர்கள் தெரிவித்ததாவது:

தஞ்சாவூர் மாவட்டம் சூரக்கோட்டை பகுதியில் நாங்கள் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். கடந்த நான்கு வருடங்களாக மாவட்ட ஆட்சியரிடம் பட்டா வழங்க கோரி பலமுறை மனு எடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எங்கள் பகுதியில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை. ஒரு அவசரத்திற்கு கூட ஆம்புலன்ஸ் உள்ளே வராத நிலையில் எங்கள் பகுதி உள்ளது. மின்சாரம் சாலை குடிநீர் உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை. மேலும் எங்கள் குழந்தைகள் பள்ளிக்கு சென்றால் அவர்களை துரத்துகிறார்கள். மேலும் ஜாதி பெயரை குறிப்பிட்டு பேசுகிறார்கள். தேர்தல் வரும் காலங்களில் எங்களை அடித்து ஓட்டு போட சொல்லி மிரட்டுகிறார்கள். ஓட்டு போடுவதற்கு மட்டும் தான் நாங்கள் உள்ளோமா என அப்பகுதி மக்கள் வேதனையுடன் கேள்வி எழுப்பினர்.

பட்டா குறித்து கோட்டாட்சியரிடம் கேட்டதற்கு நான் உங்கள் பகுதியில் வந்து ஆய்வு செய்து நீங்கள் ஆடு, மாடுகளை திருடுகிறீர்கள் என்று கூறுகிறார்கள் இதனால் உங்களுக்கு பட்டா வழங்க முடியாது என கூறுகிறார். எனவே பட்டா வழங்கும் வரை நாங்கள் இங்கிருந்து போக மாட்டோம் எனக்கூறி அவர்களது குழந்தைகளுடன் சேர்ந்து மாவட்ட ஆட்சியர் நுழைவாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சையில் ரேஷன் கார்டு, ஆதார் கார்டுகளை வீசியெறிந்து போராட்டம் நடத்திய பெண்களால் பரபரப்பு

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் ஒருமையில் பேசியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் இந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. பின்பு போலீசார் அவர்களை மாவட்ட ஆட்சியரிடம் அனைத்து சென்றனர். மாவட்ட ஆட்சியர்  உங்களுக்கு பிள்ளையார்பட்டி பகுதியில் இடம் ஒதுக்குவதாக தெரிவித்த பின்னர் சூரக்கோட்டை பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.

இதேபோல் தனது வீட்டை சுற்றி வேலி அடைத்து பாதை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி 3வது முறையாக விவசாய கூலி தொழிலாளி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.


அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது: எனது வீட்டை சுற்றி நாலு புறமும் முள்வேலி அடைத்து பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கடந்த டிசம்பர் மாதம் மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் கடந்த 2 வாரத்திற்கு முன்பும் மனு அளித்தேன். இதுவரை 76 நாட்கள் சென்ற நிலையில் இன்றும் பாதை ஆக்கிரமிப்பு  அகற்றப்படாததால் எங்கள் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாத சூழல் உள்ளது.

மேலும் நாங்களும் வேலைக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகிறோம். எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன், இவ்வாறு அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.
 
 
 
 

தலைப்பு செய்திகள்

அடுத்த கட்ட தீவிர போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்... செவிலியர்கள் எச்சரிக்கை
அடுத்த கட்ட தீவிர போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்... செவிலியர்கள் எச்சரிக்கை
சக்கராப்பள்ளியில் 12-ல் மக்கள் நேர்காணல் முகாம்! முன்கூட்டியே மனு அளிக்க கலெக்டர் ரேவதி அழைப்பு
சக்கராப்பள்ளியில் 12-ல் மக்கள் நேர்காணல் முகாம்! முன்கூட்டியே மனு அளிக்க கலெக்டர் ரேவதி அழைப்பு
மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
மத்திய அரசுக்கு எதிராக 10ல் ‘மறியல்’: தஞ்சையில் 4 மையங்களில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்–விவசாயிகள்
மத்திய அரசுக்கு எதிராக 10ல் ‘மறியல்’: தஞ்சையில் 4 மையங்களில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்–விவசாயிகள்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
Embed widget