மேலும் அறிய

தஞ்சையில் ரேஷன் கார்டு, ஆதார் கார்டுகளை வீசியெறிந்து போராட்டம் நடத்திய பெண்களால் பரபரப்பு

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் ஒருமையில் பேசியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் இந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

தஞ்சாவூர்:  தஞ்சை சூரக்கோட்டை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை பட்டா வழங்காததை கண்டித்து தங்களது ரேஷன் கார்டு, ஆதார் அட்டை அனைத்தையும் சாலையில் வீசியெறிந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்து பொதுமக்கள் வழங்கிய மனுக்களை பெற்றுக் கொண்டார். தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த பல பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

அப்போது தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டை பகுதியில் இருந்து குழந்தைகளுடன் வந்த பெண்கள் கலெக்டர் அலுவலக முகப்பில் திடீரென்று அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது அவர்கள் தெரிவித்ததாவது:

தஞ்சாவூர் மாவட்டம் சூரக்கோட்டை பகுதியில் நாங்கள் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். கடந்த நான்கு வருடங்களாக மாவட்ட ஆட்சியரிடம் பட்டா வழங்க கோரி பலமுறை மனு எடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எங்கள் பகுதியில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை. ஒரு அவசரத்திற்கு கூட ஆம்புலன்ஸ் உள்ளே வராத நிலையில் எங்கள் பகுதி உள்ளது. மின்சாரம் சாலை குடிநீர் உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை. மேலும் எங்கள் குழந்தைகள் பள்ளிக்கு சென்றால் அவர்களை துரத்துகிறார்கள். மேலும் ஜாதி பெயரை குறிப்பிட்டு பேசுகிறார்கள். தேர்தல் வரும் காலங்களில் எங்களை அடித்து ஓட்டு போட சொல்லி மிரட்டுகிறார்கள். ஓட்டு போடுவதற்கு மட்டும் தான் நாங்கள் உள்ளோமா என அப்பகுதி மக்கள் வேதனையுடன் கேள்வி எழுப்பினர்.

பட்டா குறித்து கோட்டாட்சியரிடம் கேட்டதற்கு நான் உங்கள் பகுதியில் வந்து ஆய்வு செய்து நீங்கள் ஆடு, மாடுகளை திருடுகிறீர்கள் என்று கூறுகிறார்கள் இதனால் உங்களுக்கு பட்டா வழங்க முடியாது என கூறுகிறார். எனவே பட்டா வழங்கும் வரை நாங்கள் இங்கிருந்து போக மாட்டோம் எனக்கூறி அவர்களது குழந்தைகளுடன் சேர்ந்து மாவட்ட ஆட்சியர் நுழைவாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சையில் ரேஷன் கார்டு, ஆதார் கார்டுகளை வீசியெறிந்து போராட்டம் நடத்திய பெண்களால் பரபரப்பு

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் ஒருமையில் பேசியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் இந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. பின்பு போலீசார் அவர்களை மாவட்ட ஆட்சியரிடம் அனைத்து சென்றனர். மாவட்ட ஆட்சியர்  உங்களுக்கு பிள்ளையார்பட்டி பகுதியில் இடம் ஒதுக்குவதாக தெரிவித்த பின்னர் சூரக்கோட்டை பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.

இதேபோல் தனது வீட்டை சுற்றி வேலி அடைத்து பாதை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி 3வது முறையாக விவசாய கூலி தொழிலாளி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.


அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது: எனது வீட்டை சுற்றி நாலு புறமும் முள்வேலி அடைத்து பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கடந்த டிசம்பர் மாதம் மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் கடந்த 2 வாரத்திற்கு முன்பும் மனு அளித்தேன். இதுவரை 76 நாட்கள் சென்ற நிலையில் இன்றும் பாதை ஆக்கிரமிப்பு  அகற்றப்படாததால் எங்கள் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாத சூழல் உள்ளது.

மேலும் நாங்களும் வேலைக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகிறோம். எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன், இவ்வாறு அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.
 
 
 
 

தலைப்பு செய்திகள்

தஞ்சை பெரிய கோயில் பகுதியில் ரூ.25 கோடியில் மேம்பாட்டு பணிகள்: விரைவில் டெண்டர்: எம்.பி. முரசொலி மகிழ்ச்சி தகவல்
தஞ்சை பெரிய கோயில் பகுதியில் ரூ.25 கோடியில் மேம்பாட்டு பணிகள்: விரைவில் டெண்டர்: எம்.பி. முரசொலி மகிழ்ச்சி தகவல்
தஞ்சாவூருக்கு இன்று மதியம் துணை குடியரசுத் தலைவர் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் ஹெலிகாப்டரில் ஒத்திகை
தஞ்சாவூருக்கு இன்று மதியம் துணை குடியரசுத் தலைவர் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் ஹெலிகாப்டரில் ஒத்திகை
தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
Hybrid SUV: இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
Embed widget