மேலும் அறிய

தஞ்சையில் ரேஷன் கார்டு, ஆதார் கார்டுகளை வீசியெறிந்து போராட்டம் நடத்திய பெண்களால் பரபரப்பு

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் ஒருமையில் பேசியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் இந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

தஞ்சாவூர்:  தஞ்சை சூரக்கோட்டை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை பட்டா வழங்காததை கண்டித்து தங்களது ரேஷன் கார்டு, ஆதார் அட்டை அனைத்தையும் சாலையில் வீசியெறிந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்து பொதுமக்கள் வழங்கிய மனுக்களை பெற்றுக் கொண்டார். தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த பல பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

அப்போது தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டை பகுதியில் இருந்து குழந்தைகளுடன் வந்த பெண்கள் கலெக்டர் அலுவலக முகப்பில் திடீரென்று அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது அவர்கள் தெரிவித்ததாவது:

தஞ்சாவூர் மாவட்டம் சூரக்கோட்டை பகுதியில் நாங்கள் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். கடந்த நான்கு வருடங்களாக மாவட்ட ஆட்சியரிடம் பட்டா வழங்க கோரி பலமுறை மனு எடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எங்கள் பகுதியில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை. ஒரு அவசரத்திற்கு கூட ஆம்புலன்ஸ் உள்ளே வராத நிலையில் எங்கள் பகுதி உள்ளது. மின்சாரம் சாலை குடிநீர் உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை. மேலும் எங்கள் குழந்தைகள் பள்ளிக்கு சென்றால் அவர்களை துரத்துகிறார்கள். மேலும் ஜாதி பெயரை குறிப்பிட்டு பேசுகிறார்கள். தேர்தல் வரும் காலங்களில் எங்களை அடித்து ஓட்டு போட சொல்லி மிரட்டுகிறார்கள். ஓட்டு போடுவதற்கு மட்டும் தான் நாங்கள் உள்ளோமா என அப்பகுதி மக்கள் வேதனையுடன் கேள்வி எழுப்பினர்.

பட்டா குறித்து கோட்டாட்சியரிடம் கேட்டதற்கு நான் உங்கள் பகுதியில் வந்து ஆய்வு செய்து நீங்கள் ஆடு, மாடுகளை திருடுகிறீர்கள் என்று கூறுகிறார்கள் இதனால் உங்களுக்கு பட்டா வழங்க முடியாது என கூறுகிறார். எனவே பட்டா வழங்கும் வரை நாங்கள் இங்கிருந்து போக மாட்டோம் எனக்கூறி அவர்களது குழந்தைகளுடன் சேர்ந்து மாவட்ட ஆட்சியர் நுழைவாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சையில் ரேஷன் கார்டு, ஆதார் கார்டுகளை வீசியெறிந்து போராட்டம் நடத்திய பெண்களால் பரபரப்பு

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் ஒருமையில் பேசியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் இந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. பின்பு போலீசார் அவர்களை மாவட்ட ஆட்சியரிடம் அனைத்து சென்றனர். மாவட்ட ஆட்சியர்  உங்களுக்கு பிள்ளையார்பட்டி பகுதியில் இடம் ஒதுக்குவதாக தெரிவித்த பின்னர் சூரக்கோட்டை பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.

இதேபோல் தனது வீட்டை சுற்றி வேலி அடைத்து பாதை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி 3வது முறையாக விவசாய கூலி தொழிலாளி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.


அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது: எனது வீட்டை சுற்றி நாலு புறமும் முள்வேலி அடைத்து பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கடந்த டிசம்பர் மாதம் மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் கடந்த 2 வாரத்திற்கு முன்பும் மனு அளித்தேன். இதுவரை 76 நாட்கள் சென்ற நிலையில் இன்றும் பாதை ஆக்கிரமிப்பு  அகற்றப்படாததால் எங்கள் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாத சூழல் உள்ளது.

மேலும் நாங்களும் வேலைக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகிறோம். எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன், இவ்வாறு அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.
 
 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
ABP Premium

வீடியோ

MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
Embed widget