மேலும் அறிய

திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை..! கர்ப்பமாக்கி விட்டு தலைமறைவாகிய விவசாயி..! பார்வையற்ற பெண்ணுக்கு நிகழ்ந்த சோகம்..!

தஞ்சை அருகே பார்வையற்ற இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி கர்ப்பமாக்கிவிட்டு தப்பியோடிய விவசாயியை போலீசார் கைது செய்துள்ளனர்.

தஞ்சையை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு ஏழு வயதாக இருக்கும் போது ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பால் கண்பார்வை பறிபோனது. அந்த பார்வையற்ற இளம்பெண்ணிடம் தஞ்சை அருகே துருசுப்பட்டி மேல தெருவை சேர்ந்த விவசாயி வீரையன் (45)  என்பவர் நெருங்கி பழகி வந்துள்ளார். அந்த இளம் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியதாகவும் தெரிகிறது.

தொடர்ந்து பலமுறை அப்பெண்ணை வற்புறுத்தி தகாதமுறையில் நடந்து வந்துள்ளார். இதனால் அந்த பெண் கர்ப்பம் அடைந்துள்ளார். இதுகுறித்து அறிந்த வீரையன் அப்பெண்ணுக்கு மாத்திரை வாங்கி கொடுத்து கர்ப்பத்தை கலைத்துள்ளார்.

இதில் பாதிக்கப்பட்ட அப்பெண் இதுகுறித்து செங்கிப்பட்டி போலீசில் புகார் செய்தார். இதையறிந்த வீரையன் தலைமறைவானார். இதற்கிடையில் இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் செங்கிகப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு தலைமறைவாக இருந்த வீரையனை தேடி வந்தனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே உறவினர் ஒருவர் வீட்டில் மறைந்திருந்த வீரையனை செங்கிப்பட்டி போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து வீரையனை நேற்றிரவு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி தஞ்சை கிளை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
----------------------------
பெண்ணிடம் தங்க செயின் பறிப்பு:

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பொய்யுண்டார்கோட்டை பழங்கொண்டான் தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி கஜராஜ வள்ளி (57). இவரது கணவர் இறந்து கடந்த 7 மாதங்கள் ஆகிறது

இந்நிலையில் தனது மகன் மற்றும் மருமகள் ஆகியோருடன் வீட்டில் வள்ளி தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் பின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர் கஜராஜவள்ளி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை அறுத்துக் கொண்டு தப்பி சென்று விட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். இருப்பினும் அந்த மர்ம நபரை பிடிக்க இயலவில்லை. இதுகுறித்து ஒரத்தநாடு போலீசில் புகார் செய்யப்பட்டது. தொடர்ந்து ஒரத்தநாடு டிஎஸ்பி பிரசன்னா தலைமையிலான போலீசார் திருட்டு நடந்த இடத்தை பார்வையிட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இரவு நேரத்தில் வீடு புகுந்து பெண்களிடம் இருந்து நகை பறிக்கும் சம்பவங்கள் தஞ்சை மாவட்டத்தில் அடிக்கடி நடக்கிறது. மேலும் சில பகுதிகளில் காற்றுக்காக வீட்டு கதவு மற்றும் ஜன்னலை திறந்து வைத்து தூங்குவதை நோட்டமிட்டு மர்மநபர்கள் இதுபோன்ற திருட்டு சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget