மேலும் அறிய

”வீட்டுக்குள் புகுந்த கோழி – சண்டையில் பறிபோன முதியவர் உயிர்” என்ன நடந்தது..?

"இது யாருடைய கோழி என தெரியவில்லை என்று சொன்னதற்காக தொடங்கியது சண்டை, முடிந்தது கொலையில்”

தஞ்சாவூர்: கோழிச்சண்டையில் ஏற்பட்ட வாக்குவாதம் முதியவர் ஒருவரின் உயிரை பறித்த சம்பவம் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் நடந்துள்ளது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே தேனாம்படுகை வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகையன்(82). இவர் தனது வீட்டில் கோழி வளர்த்து வருகிறார். இந்த கோழியை அடைக்கும் பகுதிக்கு இவரது கோழியும் அந்த பகுதியை சேர்ந்த மற்றொருவரின்  கோழியும் வந்துவிட்டது. 

தங்கள் வீட்டு கோழி முருகையன் வீட்டுக்குள் செல்வதை பார்த்துள்ளார் மற்றொரு கோழியின் உரிமையாளர். உடன் அவர் முருகையன் வீட்டுக்கு வந்து உங்கள் கோழியுடன் எங்கள் வீட்டு கோழியும் சேர்ந்து வந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார். மேலும் அதை அடைத்து வைத்துள்ளீர்கள் எங்கள் கோழியை வெளியில் விடுங்கள் என்று முருகையனிடம் தெரிவித்துள்ளார்.

அதற்கு முருகையன் எது யாருடைய கோழி என்பது எனக்கு தெரியவில்லை. எனது மகன் வந்தவுடன் கேட்டு விடுவிக்கிறேன் என்று கூறியுள்ளார். இதனால் இரண்டு தரப்பினருக்கும் மத்தியில் வாக்குவாதம் எழுந்தது. வாக்குவாதம் முற்றிய நிலையில் இருதரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர். அப்போது எதிர்தரப்பு நபர்கள் தாக்கியதில் முருகையன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பட்டீஸ்வரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் முருகையன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பட்டீஸ்வரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  முருகையன் இறந்தது குறித்து தகவல் அறிந்த அவரின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திாிக்கு வந்தனர்.

தொடர்ந்து அவர்கள் முருகையன் சாவுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். ஆனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். தில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.   

கோழி சண்டையில் முதியவர் உயிர் பறிபோன சம்பவம் கும்பகோணம் பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
ABP Premium

வீடியோ

PC Sreeram supports Vijay|‘’அதிகார துஷ்பிரயோகம்!இது டிரம்ப் மண் கிடையாதுவிஜய்க்கு PC ஸ்ரீராம்SUPPORT
Vijay CBI Enquiry | CBI விசாரணையில் TWIST தேர்தலுக்கு முன் குற்றப்பத்திரிகை? அடுத்த சிக்கலில் விஜய்?
Villupuram News|முளைப்பாரி..கும்மியாட்டம்!களைகட்டிய பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்று திருவிழா
Woman Police with Baby|Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்!கைக்குழந்தையுடன் கடமை! மாஸ் காட்டிய பெண் காவலர்
”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
HC Judge Vs Savukku Shankar: “நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
“நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
Tata Punch vs Nexon: டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
Embed widget