மேலும் அறிய

வெளுக்குது மழை... சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்: 37 வீடுகள் இடிந்தன... தஞ்சை மாவட்ட முழு விபரம் இதோ

விடிய விடிய செய்த கனமழையால் தஞ்சை மாவட்டத்தில் திவான் நகர் என்ற பகுதியில் திடீரென வீடு ஒன்று இடிந்து விழுந்து சேதமானது இதனால் யாருக்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை மஞ்சளாறு 196 மில்லி மீட்டரும், கும்பகோணத்தில் 179 மில்லி மீட்டரும் மழை அதிகபட்சமாக பதிவாகி உள்ளது. மாவட்டம் முழுவதும் 37 வீடுகள் சேதம் அடைந்துள்ளது. ஏழு கால்நடைகள் உயிரிழந்து உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வெளுக்குது மழை... சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்: 37 வீடுகள் இடிந்தன... தஞ்சை மாவட்ட முழு விபரம் இதோ

டெல்டா மாவட்டமான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆரஞ்சு அலெர்ட் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று கனமழை பெய்த நிலையில், இன்று அதிகாலை முதல் தஞ்சை நகர் மற்றும் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது. இதற்கிடையில் இன்றும் மாணவர்களின் நலன் கருதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவித்தார்.


வெளுக்குது மழை... சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்: 37 வீடுகள் இடிந்தன... தஞ்சை மாவட்ட முழு விபரம் இதோ

விடிய விடிய செய்த கனமழையால் தஞ்சை மாவட்டத்தில் திவான் நகர் என்ற பகுதியில் திடீரென வீடு ஒன்று இடிந்து விழுந்து சேதமானது இதனால் யாருக்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. மேலும் மானம்புச்சாவடி பகுதியில் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில் சாக்கடை கழிவுநீரும் கலந்து சென்றதால் மக்கள் அவதியடைந்தனர். இந்த சாக்கடை கழிவு நீரால் நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் அருகே பூதலூர், திருக்காட்டுப்பள்ளி, வல்லம் உட்பட பகுதிகளில் கனமழை பெய்தால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. தஞ்சை மாவட்டம் வேங்கராயன் குடிக்காடு கிராமத்தில் கார்த்திகை பட்டத்தில் விதைக்கப்பட்ட நிலக்கடலை சுமார் 50 ஏக்கரில் தற்போதைய இந்த கனமழையால் சேதம் அடைந்துள்ளது. இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் வட்டாரத்தில் ஊரணிபுரம், சிவவிடுதி பகுதிகளில் கடந்த ஒருவாரத்திற்கு முன்பு விதைக்கப்பட்ட நிலக்கடலை முளைத்து வந்த நிலையில் வயல்களில் தண்ணீர் தேங்கியதால் முழுமையாக அழுகிவிட்டது. இதனால் விவசாயிகள் பெரும் வேதனையடைந்துள்ளனர்.

தஞ்சாவூர் நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி நின்றனர். இதில் அருளானந்த நகர் நான்காவது தெருவில் மழை நீர் சாலையில் வடிய வழியில்லாமல் தேங்கியுள்ளதாலும், சாலையின் உயரம் உயர்ந்துள்ளதாலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.


வெளுக்குது மழை... சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்: 37 வீடுகள் இடிந்தன... தஞ்சை மாவட்ட முழு விபரம் இதோ
 
டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை காரணமாக கல்லணையிலிருந்து பாசனத்திற்காக காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய்களில் திறந்து விடப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. கல்லணைக்கு வரும் மழைநீர் மற்றும் பாசன நீர் 2533 கன அடி அப்படியே கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்படுகிறது. 

கும்பகோணத்தில் பெய்த கனமழையால் கொரநாட்டுகருப்பூர், பழவத்தான்கட்டளை, தேனாம்படுகை, உள்ளிட்ட பகுதிகளில் 2 குடிசை வீடுகள் இரண்டு ஓட்டு வீடுகள் சேதம் அடைந்தது. இதில் யாருக்கும் இந்த பாதிப்பும் இல்லை. கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகாவில் 5 வீடுகள் சேதம் அடைந்துள்ளது. சிதம்பரநாதபுரம், கருப்பட்டிச்சேரி, குறிச்சி, மருத்துவக்குடி, கூத்தனூர் 5 வீடுகள் சுவர் இடிந்து விழுந்து யாருக்கும் காயம் இல்லை.. நல்லதாடி பகுதியில் தொடர் மழை காரணமாக வீட்டுக்குள் தண்ணீர் புகுந்ததால் அங்கிருந்த பொது மக்களை தாசில்தார் பாக்யராஜ் தலைமையில் அதிகாரிகள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர். கும்பகோணம் அருகே சோழன் மாளிகை பகுதியில் சாகுபடி வயல்களை மழை நீர் மூழ்கடித்துள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை 6 மணி வரை முடிவடைந்த 24 மணிநேரத்தின் மழையளவு வருமாறு: திருவிடைமருதூர் 196, மஞ்சளாறு 191, கும்பகோணம் 179, அணைக்கரை 168, பாபநாசம், அய்யம்பேட்டை 124, பூதலூர் 115, திருக்காட்டுப்பள்ளி 85, திருவையாறு 78, கல்லணை 62, பட்டுக்கோட்டை 58, ஒரத்தநாடு 55, ஈச்சன்விடுதி 46, அதிராம்பட்டினம் 43, குருங்குளம், வெட்டிக்காடு, நெய்வாசல் தென்பாதி 37, தஞ்சாவூர் 35, வல்லம் 21, மதுக்கூர் 20, பேராவூரணி 17.

தஞ்சை மாவட்டத்தில் பெய்து வரும் இந்த தொடர் மழை நீடித்தால் சம்பா, தாளடி சாகுபடி பயிர்கள் வெகுவாக பாதிக்கப்படும் என்று விவசாயிகள் தரப்பில் கவலை தெரிவித்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

20 ஆண்டுகளாக தூர்வாரப்படாத தாமரைக்குளம்! ஆக்கிரமிப்பால் 2 ஏக்கராக சுருங்கியது: விவசாயிகள் விடுத்த எச்சரிக்கை என்ன?
20 ஆண்டுகளாக தூர்வாரப்படாத தாமரைக்குளம்! ஆக்கிரமிப்பால் 2 ஏக்கராக சுருங்கியது: விவசாயிகள் விடுத்த எச்சரிக்கை என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
வீடுகள் கட்டுவதை எதிர்க்கவில்லை... சரியான இடத்தில் கட்டுங்கள்! கல்யாணசுந்தரம் எம்.பி. கடும் அதிருப்தி
வீடுகள் கட்டுவதை எதிர்க்கவில்லை... சரியான இடத்தில் கட்டுங்கள்! கல்யாணசுந்தரம் எம்.பி. கடும் அதிருப்தி
மாம்பழத்துக்கு விலை இல்லை... மரங்களை வெட்டும் அவலம்: கும்பகோணத்தில் மாங்காய் உடைத்து நூதனப் போராட்டம்
மாம்பழத்துக்கு விலை இல்லை... மரங்களை வெட்டும் அவலம்: கும்பகோணத்தில் மாங்காய் உடைத்து நூதனப் போராட்டம்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Embed widget