Thanjavur power shutdown: தஞ்சை பகுதியில் நாளையும், நாளை மறுநாளும் எங்கெல்லாம் மின்தடை - முழு விவரம் இதோ
Thanjavur Power Shutdown: தஞ்சாவூர் மின்நகர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் நாளை (17ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

Thanjavur Power Shutdown Tomorrow: தஞ்சாவூர்: தஞ்சாவூர் மின்நகர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் நாளை (17ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. கோவை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதால் முன்கூட்டியே அறிவிக்கப்படும். இந்த பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட இடங்களில் மின்சேவை நிறுத்தப்படும்.
வழக்கமாக காலை 9 மணி/10 மணியிலிருந்து மாலை 4 அல்லது 5 மணிவரை, அல்லது 9 காலை மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்துவது, பல்வேறு டிரான்ஸ்பார்மகளை பழுது பார்ப்பது மற்றும் பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
அந்த வகையில் மின்நகர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் நாளை மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து உதவி செயற் பொறியாளர் பாலகுமார் தெரிவித்துள்ளதாவது: மின்நகர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நாளை 17ம் தேதி வியாழக்கிழமை அன்று நடைபெற நடைபெற உள்ளது. எனவே இந்த துணைமின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் வல்லம், மின்நகர், பிள்ளையார்பட்டி, எம்.ஜி.ஆர் நகர், சென்னம்பட்டி, கயிறு வாரியம், ராமலிங்கபுரம் ஆகிய பகுதிகளுக்கு நாளை 17ம் தேதி காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவக்கல்லூரி துணை மின்நிலையம்
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. அதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் வரும் 19ம் தேதி மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து உதவி செயற்பொறியாளர் அண்ணாசாமி தெரிவித்துள்ளதாவது:
தஞ்சாவூர் மருத்துவக்கல்லுரி துணைமின் நிலையப் பகுதியில் மாதந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 19ம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதனால் இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் கரந்தை, பள்ளி அக்ரகாரம் பள்ளியேரி, திட்டை, பலோபநந்தவனம், சுக்கான்திடல், நாலுகால் மண்டபம் அரண்மனை பகுதிகள் திருவையாறு கண்டியூர், நடுக்கடை மேலதிருப்பந்துருத்தி, நடுக்காவேரி, திருவளம் பொழில் விளார் நாஞ்சிக்கோட்டை, காவேரி நகர் வங்கி உழியர் காலனி, EB காலணி, மருத்துவக்கல்லுரி பகுதிகள், ஈஸ்வரி நகர் முனிசிபல் காலனி, R.R நகர், புதிய பேருந்துநிலையம், புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு.
திருவேங்கடம் நகர், கருப்ஸ் நகர், AVP அழகம்மாள் நகர், மன்னர் சரபோஜி நகர், மாதாகோட்டை, சோழன் நகர் தமிழ்பல்கலைக்கழகம், வஸ்தாசாவடி, மனோஜிபட்டி ரெட்டிபாளையம் ரோடு, காந்திபுரம், வஹாப் நகர், சப்தகிரி நகர், ராஜலிங்கம் நகர், ஐஸ்வர்யா கார்டன், சுந்தரபாண்டியன் நகர், ஜெபமாலைபுரம், மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளுக்கு அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




















