மேலும் அறிய

அனுமதியின்றி செயல்படும் குடிநீர் நிறுவனம்...மூட நடவடிக்கை கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தினை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் ஜெய்னுல் ஆப்தீன் துவக்கி வைத்து உரையாற்றினார். இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தார். 

தஞ்சாவூர்: அனுமதியின்றி செயல்படும் தண்ணீர் ஆலையை மூட வேண்டும் என தஞ்சை மாநகராட்சி 47 வது வார்டு பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்தையும், மாநகராட்சி நிர்வாகத்தையும் வலியுறுத்தி மருத்துவக்கல்லூரி வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தஞ்சாவூர் 47வது வார்டு பகுதி மக்கள்  சார்பில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மூன்றாவது வாயில் முன்பு அனுமதி இன்றி செயல்பட்டு வரும் தண்ணீர் ஆலையை இழுத்து மூட மாவட்ட நிர்வாகத்தையும், மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் தேவா தலைமை வகித்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநகர செயலாளர் எஸ்.அபுசாலிக் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தினை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் ஜெய்னுல் ஆப்தீன் துவக்கி வைத்து உரையாற்றினார். இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன் ஆர்ப்பாட்டத்தினை நிறைவு செய்து பேசினார். 

ஆர்ப்பாட்டத்தில் தஞ்சாவூர் மாநகராட்சி 47 வது வார்டு பகுதியில் முல்லை நகர், விசாலாட்சி நகர்,குமார் போஸ்டல் காலனி, ரத்னா நகர், பாரதிநகர், உப்பரிகை உள்ளிட்ட நகர்கள் உள்ளது. இந்தப் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் நிலத்தடி நீரை நம்பியும், மாநகராட்சி வழங்குகின்ற குடிநீரை பயன்படுத்தியும் தங்கள் வாழ்க்கை தேவைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்தப் பகுதியில் உள்ள முல்லை தெருவில் பியூரி பையிங் என்ற தனியார் கம்பெனி  ஆழ்துளை போர்வெல் அமைத்து தண்ணீரை தினந்தோறும் அளவுக்கு அதிகமாக உறிஞ்சி எடுத்து குடிநீர் விற்பனை செய்து வருகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள அனைத்து தெருவிலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து,அவரவர்கள் வீடுகளில் உள்ள போர் தண்ணீர் எடுக்க முடியவில்லை. மாநகராட்சி வழங்குகின்ற குடிநீரும் இப்பகுதி மக்களின் தேவையை போக்கவில்லை.

எனவே சட்டத்திற்கு புறம்பாக அனுமதி இன்றி செயல்படுகின்ற தனியார் தண்ணீர் ஆலையை  மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் உடனடியாக தண்ணீர் கம்பெனி ஆலையை இழுத்து மூட வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் செந்தில்சிவக்குமார், செல்வசுப்பிரமணி, மகேந்திரன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக ராமநாதபுரம் ஊராட்சி நிர்வாகி அபிப்ரஹ்மான், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாவட்ட பொருளாளர் லட்சுமணன்,  ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் சாமிநாதன்,  மாரிமுத்து , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொழிலாளர் அணி செயலாளர் சுப்பராயன், வன துர்கா நகர் திமுக பிரதிநிதி மகேந்திரன், 47 வது வார்டு  கார்த்திகேயன், தமிழ் தேசிய முன்னேற்றக் கழக மாநில நிர்வாகி குணசேகரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். 

ஆர்ப்பாட்டத்தில் விசிக நிர்வாகி சுரேஷ், 47 வது வார்டு தொமுச பிரதிநிதி ஜோசப், 47 வது வார்டு பகுதி நிர்வாகிகள் சையது முகமது, இப்ராஹிம், ரஜாக்,ஆதாம் முகமது சுந்தர்,கிருஷ்ணராஜ், மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் மாவட்ட மகளிர் அணி செயலாளர் சசிகலா, 47வது வார்டு பகுதி மகளிர் அணி நிர்வாகிகள் சவுரியம்மாள், ஜெய்சிராணி, சாமியம்மாள் புஷ்பவல்லி மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Sundar Pichai: ‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
Pakistan Vs India: 'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
Embed widget