மேலும் அறிய

பீகார் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு 2025

(Source:  Poll of Polls)

விபத்துக்கள் நடக்கும் பகுதி... சிறிய ரவுண்டானா கட்டுங்களேன்: பொதுமக்கள் வலியுறுத்தல்

தஞ்சை வரும் வாகனங்கள் என திருக்கானூர்பட்டி நால்ரோடு பகுதியை கடந்து தான் செல்ல வேண்டும்.

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் இருந்து புதுக்கோட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருக்கானூர்பட்டி நால்ரோட்டில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்களை தவிர்க்கும் வகையில் சிறிய அளவிலான ரவுண்டானா அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தஞ்சாவூரில் இருந்து புதுக்கோட்டைக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது இப்பகுதி வழியாக புதுக்கோட்டை உட்பட பிற பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள், லாரிகள், சரக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த தேசிய நெடுஞ்சாலை எப்பொழுதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும். 

இந்த தேசிய நெடுஞ்சாலையில் திருக்கானூர்பட்டி நால்ரோடு பகுதி அமைந்துள்ளது. தஞ்சாவூரிலிருந்து புதுக்கோட்டை செல்லும் வாகனங்கள் மற்றும் ஒரத்தநாட்டில் இருந்து வல்லம் திருச்சிக்கு செல்லும் வாகனங்கள், வல்லத்தில் இருந்து ஒரத்தநாடு செல்லும் வாகனங்கள் புதுக்கோட்டையில் இருந்து தஞ்சை வரும் வாகனங்கள் என திருக்கானூர்பட்டி நால்ரோடு பகுதியை கடந்து தான் செல்ல வேண்டும். முக்கியமாக கனரக வாகனங்கள் அதிக அளவில் இப்பகுதி வழியாக சென்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த திருக்கானூர்பட்டி நால்ரோட்டில் வேகத்தடை உள்ளது. மேலும் பேரிகார்டுகள் வைக்கப்பட்டு இருந்தாலும் அடிக்கடி வாகனங்கள் மோதிக் கொண்டு விபத்துக்கள் ஏற்படுகின்றன. இரு சக்கர வாகனங்கள் மற்றும் அரசு பேருந்து போன்றவை இப்பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவங்கள் நடந்து உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. 

அதிகாலை நேரத்தில் இப்பகுதியில் வேகமாக வரும் பேருந்துகள், வாகனங்கள் எதிரில் வரும் வாகனங்களுடன் மோதிக் கொள்ளும் நிலை உள்ளது. இதனால் திருக்கானூர்பட்டி நால் ரோட்டை கடந்து செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. இந்த பகுதியை சுற்றி ஏராளமான கிராமப் பகுதிகள் அமைந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்கள் வேளாண் நிலங்களுக்கு தேவையான உரங்கள் உட்பட இடுபொருட்களை இருசக்கர வாகனங்களில் எடுத்து வரும் நிலை உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களின் இயக்கம் அதிகமாக உள்ளது, இவ்வாறு வரும் வாகனங்கள் வலது புறம் மற்றும் இடதுபுரத்தில் இருந்து வரும் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளனர். 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டையில் இருந்து வந்த அரசு பேருந்து திருக்கானூர்பட்டி நால்ரோடு பகுதியில் நிலைத்தடுமாறி விபத்துக்குள்ளாகி பயணிகள் காயமடைந்த சம்பவமும் நடந்தது. இதே போல் புதுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி வந்த பஸ்சும் ஒரத்தநாட்டிலிருந்து வல்லம் நோக்கி சென்ற தனியார் பார்சல் சர்வீஸ் வேனும் மோதிக்கொண்டு விபத்தும் உள்ளாகி பயணிகள் காயமடைந்தனர்.

தேசிய நெடுஞ்சாலையாக இருப்பதால் இப்பகுதியில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். நான்கு புறமும் பல கிராமங்களை சேர்ந்த மக்கள் இந்த சாலை வழியாகத்தான் செல்ல வேண்டி உள்ளது. எனவே இப்பகுதியில் ரவுண்டானா அமைத்து விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Modi TN Visit : ‘ஆபரேஷன் TN’ கோவைக்கு வரும் பிரதமர் மோடி ; சந்திக்கப்போவது யாரை..?
‘ஆபரேஷன் TN’ கோவைக்கு வரும் பிரதமர் மோடி ; சந்திக்கப்போவது யாரை..?
Ramadoss PMK: முடக்கப்படுமா மாம்பழம் சின்னம்.? ராமதாஸ் எடுத்த முடிவால் அலறும் பாமக நிர்வாகிகள்
முடக்கப்படுமா மாம்பழம் சின்னம்.? ராமதாஸ் எடுத்த முடிவால் அலறும் பாமக நிர்வாகிகள்
TVK VIJAY: 53 ஆண்டுக்கு பிறகு பக்கா மாஸ் கட்சி வந்திருக்கு.! ஆட்சி அதிகாரத்தைப் பகல் கனவாக்கப் போகப்போகுது- விஜய்
53 ஆண்டுக்கு பிறகு பக்கா மாஸ் கட்சி வந்திருக்கு.! ஆட்சி அதிகாரத்தைப் பகல் கனவாக்கப் போகப்போகுது- விஜய்
UPSC Exam Results: யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு; 2736 பேர் தேர்ச்சி- காண்பது எப்படி?
UPSC Exam Results: யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு; 2736 பேர் தேர்ச்சி- காண்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஆற்றில் குதிக்க ஓடிய திருநங்கை! காப்பாற்றிய பத்திரிகையாளர்கள்! போராட்டத்தின் பின்னணி?
அரியணை ஏறும் பாஜக? ஷாக்கில் தேஜஸ்வி, ராகுல் வெளியான EXIT POLL | Bihar Exit Poll 2025
குடும்பத்தை பிரித்த ஆதவ் தூக்கி எறிந்த திமுக, விசிக விஜய்யை எச்சரிக்கும் சார்லஸ் | Charles Martin on Aadhav Arjuna
வெடித்து சிதறிய சிலிண்டர்கள் தீக்கிரையான டிப்பர் லாரி பரபரக்கும் அரியலூர் பகீர் வீடியோ | Ariyalur Gas Cylinder Lorry Blast
Terrorist Umar Mohammed Profile| பாகிஸ்தானின் SLEEPER CELL பழிதீர்க்க வந்த பயங்கரவாதியார் இந்த உமர்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Modi TN Visit : ‘ஆபரேஷன் TN’ கோவைக்கு வரும் பிரதமர் மோடி ; சந்திக்கப்போவது யாரை..?
‘ஆபரேஷன் TN’ கோவைக்கு வரும் பிரதமர் மோடி ; சந்திக்கப்போவது யாரை..?
Ramadoss PMK: முடக்கப்படுமா மாம்பழம் சின்னம்.? ராமதாஸ் எடுத்த முடிவால் அலறும் பாமக நிர்வாகிகள்
முடக்கப்படுமா மாம்பழம் சின்னம்.? ராமதாஸ் எடுத்த முடிவால் அலறும் பாமக நிர்வாகிகள்
TVK VIJAY: 53 ஆண்டுக்கு பிறகு பக்கா மாஸ் கட்சி வந்திருக்கு.! ஆட்சி அதிகாரத்தைப் பகல் கனவாக்கப் போகப்போகுது- விஜய்
53 ஆண்டுக்கு பிறகு பக்கா மாஸ் கட்சி வந்திருக்கு.! ஆட்சி அதிகாரத்தைப் பகல் கனவாக்கப் போகப்போகுது- விஜய்
UPSC Exam Results: யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு; 2736 பேர் தேர்ச்சி- காண்பது எப்படி?
UPSC Exam Results: யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு; 2736 பேர் தேர்ச்சி- காண்பது எப்படி?
மருத்துவமனைகளில் 12,000 மருத்துவர் இடங்கள் காலி: உயிர்காக்கும் துறையை சாகடிப்பதா? அன்புமணி கேள்வி
மருத்துவமனைகளில் 12,000 மருத்துவர் இடங்கள் காலி: உயிர்காக்கும் துறையை சாகடிப்பதா? அன்புமணி கேள்வி
Tata Curvv: பழைய விலையில், கூடுதல் அம்சங்கள்..! டாடா கர்வின் இரண்டு எடிஷன்களிலும் அப்க்ரேட்கள் - புதுசா என்ன?
Tata Curvv: பழைய விலையில், கூடுதல் அம்சங்கள்..! டாடா கர்வின் இரண்டு எடிஷன்களிலும் அப்க்ரேட்கள் - புதுசா என்ன?
Jadeja CSK: சிஎஸ்கே-வை விட்டு வெளியேற ஜடேஜா ”ஓகே” சொன்னது ஏன்? ராஜஸ்தானின் கிஃப்ட், சாம்சனுக்கு ”நோ”
Jadeja CSK: சிஎஸ்கே-வை விட்டு வெளியேற ஜடேஜா ”ஓகே” சொன்னது ஏன்? ராஜஸ்தானின் கிஃப்ட், சாம்சனுக்கு ”நோ”
Sabarimala Malai: ஐயப்ப பக்தர்களே.. சபரிமலைக்கு மாலை போட்டால் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?
Sabarimala Malai: ஐயப்ப பக்தர்களே.. சபரிமலைக்கு மாலை போட்டால் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?
Embed widget