மேலும் அறிய

மழை வந்ததால் வியாபாரம் பாதிப்பு...  விலை அதிகம் இருந்தாலும் ஆர்வமுடன் வாங்கிய மக்கள்

இன்று ஆயுதபூஜையை ஒட்டி தஞ்சையில் உள்ள பூச்சந்தைகளில் மக்களின் வரத்து குறைந்து காணப்பட்டது. மேலும் மழையும் விட்டு விட்டு பெய்ததால் காலையில் பூக்கள் வாங்குபவர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது

தஞ்சாவூர்: இன்று ஆயுதபூஜையை ஒட்டி தஞ்சையில் உள்ள பூச்சந்தைகளில் மக்களின் வரத்து குறைந்து காணப்பட்டது. மேலும் மழையும் விட்டு விட்டு பெய்ததால் காலையில் பூக்கள் வாங்குபவர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. மேலும் பூக்களின் விலையும் உச்சத்தில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

தமிழகம் முழுவதும் இன்று ஆயுதபூஜை விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தஞ்சை மாநகரில் வீடுகள், வா்த்தக நிறுவனங்கள், ஆட்டோ மொபைல் ஸ்டோா்ஸ், வாகனப் பணிமனை கூடங்கள், லாரி பட்டறைகளை சுத்தம் செய்யும் நேற்று நடந்தது. இன்று காலை முதல் வாடிக்கையாளர்கள், நண்பர்கள், உறவினர்களை அழைத்து உற்சாகமாக ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.

ஆயுதபூஜையில் இடம் பெறும் பொரிகடலை, வெல்லம், பழங்கள் உள்ளிட்ட பொருட்களின் விற்பனையும் நேற்று முதல் களைக்கட்டத் தொடங்கியது. அதுமட்டுமின்றி வீடுகளில் பூஜை செய்வதுடன், வாகனங்களுக்கு மாலை அணிவித்து பூஜைகள் செய்யப்படும். இதனால் பூஜை பொருட்கள் வாங்குவதற்கும் மக்கள் ஆர்வம் காட்டினர்.

ஆயுதபூஜையையொட்டி தஞ்சை மாநகரில் பூக்களின் விலை உச்சத்தை தொடத்தது. தஞ்சை பூக்காரத்தெருவில் உள்ள பூச்சந்தை, தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் உள்ள மலர் வணிக வளாகம் ஆகியவற்றில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. இங்கு திண்டுக்கல், ஓசூர், நிலக்கோட்டை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் ப்ல்வேறு இடங்களில் இருந்து தினமும் பூக்கள் விற்பனைக்காக லாரிகளில் கொண்டு வரப்படும். அதேபோல் இங்கிருந்தும் பல்வேறு இடங்களுக்கு பல்வேறு பகுதிகளுக்கு பூக்கள் அனுப்பி வைக்கப்படும்.

மேலும் நேற்று முதல் மழையும் விட்டு விட்டு பெய்து வந்ததால் கிராமப்புறங்களில் இருந்து பூக்கள் வாங்குவதற்காக வரும் மக்கள் எண்ணிக்கையும் குறைந்து காணப்பட்டது. பொதுவாக பண்டிகை காலங்கள், சுபமுகூர்த்த நாட்களில் பூக்களில் விலை உயர்ந்து காணப்படும். மேலும் வரத்து குறைவாக இருந்தாலும் விலை உயரும்.

இந்த நிலையில் இன்று ஆயுத பூஜை, நாளை  சரஸ்வதி பூஜை, அதற்கு மறுநாள் விஜயதசமி என தொடர்ந்து பண்டிகைகள் என்பதால் பூக்களின் தேவை வழக்கத்தை விட அதிகம் உள்ளது. இதனால் கடந்த 2 நாட்களாகவே பூச்சந்தைகளில் பூக்களின் விலை  உச்சத்தை தொட்டுள்ளது. வரத்து அதிகமாக இருந்தாலும் தேவை அதை விட அதிகம் என்பதால் அனைத்து வகையான பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது.

நேற்று மல்லிகை கிலோ ரூ.750-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று கிலோ ரூ.1000 வரை விற்பனையாகின. இதேப்போல்  கிலோ ரூ.600-க்கு விற்பனையான முல்லை கிலோ ரூ.1000-க்கும். கனகாம்பரம் கிலோ ரூ.1000-க்கு விற்பனை செய்யப்பட்டன. செவ்வந்தி கிலோ ரூ.300, அரளி ரூ.600, ரோஸ் ரூ.300, செண்டிப்பூ ரூ.150-க்கும் விற்பனையாகின. இவற்றின் விலையும் உயர்ந்து காணப்பட்டது. 

நேற்று காலை முதல் விலை உயர்வு அதிகமாக இருந்தாலும் மக்கள் அதை பற்றி கவலைப்படாமல் பூக்களை வாங்கி சென்றனர். இதனால் பூக்கள் வியாபாரமும் ஜோராக நடைபெற்றது. ஆனால் நேற்று மதியம் முதல் மழை விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் பூக்களின் விற்பனை பாதிக்கப்பட்டது. 

இது குறித்து வியாபாரிகள் தரப்பில் கூறுகையில், தஞ்சை பூச்சந்தைக்கு ஓசூர், நிலக்கோட்டை, திண்டுக்கல், ஸ்ரீரங்கம் மற்றும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக பூச்செடிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் பூக்கள் வரத்து குறைவாகவே இருக்கிறது. விலை அதிகமாக இருந்தாலும் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். நல்ல வருமானமும் எங்களுக்கு கிடைத்தது என்றனர். இதேபோல் இன்று மதியம் வரை வாழைக்கன்று, தோரணம், எலுமிச்சைப்பழம், வாழைப்பழம் ஆகியவற்றின் விற்பனையும் அமோகமாக இருந்தது.

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், விலை கூடுதலாக இருந்தாலும் ஆண்டுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் இந்த ஆயுத பூஜை விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். அதனால் விலையை பற்றி கவலைப்படாமல் ஆண்டு முழுவதும் வருமானம் அளிக்கும் தொழில்கள் மேலும் வளர்ச்சி பெற வேண்டிக் கொண்டு சிறப்பாக கொண்டாடினோம் என்றனர்.
 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
Trump's New Tariff: ஆஹா.. மறுபடியும் தொடங்கிட்டாருயா.! விவசாய பொருட்கள் மீது வரி; ட்ரம்ப்பின் அடுத்த பிளான்
ஆஹா.. மறுபடியும் தொடங்கிட்டாருயா.! விவசாய பொருட்கள் மீது வரி; ட்ரம்ப்பின் அடுத்த பிளான்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
Trump's New Tariff: ஆஹா.. மறுபடியும் தொடங்கிட்டாருயா.! விவசாய பொருட்கள் மீது வரி; ட்ரம்ப்பின் அடுத்த பிளான்
ஆஹா.. மறுபடியும் தொடங்கிட்டாருயா.! விவசாய பொருட்கள் மீது வரி; ட்ரம்ப்பின் அடுத்த பிளான்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Embed widget