மேலும் அறிய

கிடைச்சாச்சு லீவு... வந்தாச்சு டூரு... பெரியகோயிலில் குவியும் சுற்றுலாப்பயணிகள்

தஞ்சாவூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும்,  இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு சபரிமலைக்கு மாலை அணிந்த பக்தர்கள், மேல்மருவத்தூர் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் என ஆயிரக்கணக்கானோர் வருகை புரிந்தனர். 

மாமன்னன் ராஜராஜசோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்றது ஆகும். தமிழர்களின் கட்டிட கலைக்கும், சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் பெரியகோயிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், முருகன் என பல்வேறு சன்னதிகள் உள்ளன.

இக்கோயிலுக்கு தஞ்சாவூர் மட்டுமின்றி பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும்,  இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.

தஞ்சை பெரிய கோயிலில் மற்ற நாட்களை விட விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதன்படி பள்ளி விடுமுறை, சபரிமலை செல்லும் பக்தர்கள், மேல்மருவத்தூர் செல்லும் பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் நேற்று விடுமுறை நாள் என்பதால் பெரிய கோயிலுக்கு காலை முதல் பக்தர்கள் வருகை அதிகளவில் காணப்பட்டது. குறிப்பாக வெளி மாவட்டங்களில் இருந்து குடும்பத்தோடு சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வருகைபுரிந்தனர்.

கார், வேன் போன்ற வாகனங்களில் வந்ததால் வாகனம் நிறுத்துமிடமும் நிரம்பி வழிந்தது. இதனால் சுற்றுலாப்பயணிகள் வந்த கார்கள், வேன்கள் பழைய கோர்ட் ரோடு பகுதியில் வரிசையாக நிறுத்தப்பட்டது. பெரிய கோயிலுக்கு வழக்கத்தைவிட நேற்று அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்ததால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதேபோல் தஞ்சை ராஜப்பா பூங்கா, அரண்மனை, சரஸ்வதி மகால் உட்பட இடங்களிலும் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.

ராஜப்பா பூங்காவிற்கு குழந்தைகளுடன் வந்த பெற்றோர்கள் நவீன பொழுதுபோக்கு மையத்தினை பார்த்து ரசித்தனர். 

இன்று கிறிஸ்துமஸ் விழா என்பதால் வாகன போக்குவரத்தும் அதிகம் இருந்தது. இந்நிலையில் பெரிய கோயிலுக்கு வந்த சுற்றுலாப்பயணிகளாலும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது. இதேபோல் டவுன் பஸ்களிலும் மக்கள் கூட்டம் அதிகம் இருந்தது. பழைய கோர்ட் ரோடு பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது. காலையில் இருந்தே அதிக சுற்றுலாப்பயணிகள் வந்த நிலையில் மதியம் சற்று கூட்டம் குறைந்திருந்தது. 

மாலையில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வரத்து அதிகம் இருந்தது. போலீசார் தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டு இருந்தனர்.

தலைப்பு செய்திகள்

பலருக்கு மறுவாழ்வு அளித்த சுரேந்தரின் மனிதநேயம்: மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்
பலருக்கு மறுவாழ்வு அளித்த சுரேந்தரின் மனிதநேயம்: மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்
ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கால்நடை தடுப்பு... நோயாளிகள் பெரும் அவதி: எங்கே தெரியுமா?
ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கால்நடை தடுப்பு... நோயாளிகள் பெரும் அவதி: எங்கே தெரியுமா?
பட்டுக்கோட்டையில் இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 
பட்டுக்கோட்டையில் இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 
தரக்கட்டுப்பாட்டு அதிகாரியின் அதிரடி: கும்பகோணத்தில் உர இருப்பு குறித்து திடீர் ஆய்வு
தரக்கட்டுப்பாட்டு அதிகாரியின் அதிரடி: கும்பகோணத்தில் உர இருப்பு குறித்து திடீர் ஆய்வு

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN : “Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
“Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
Actress Jyothika : அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
Chengalpattu metro rail : அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
Thirumavalavan:
Thirumavalavan: "தர்மேந்திர பிரதான் பாவம்.." திருமாவளவன் திடீரென ஏன் அப்படி பேசினார்?
Sanam Shetty:
Sanam Shetty: "நான் தளபதி ரசிகை.." சனம் ஷெட்டியிடம் மைக்கைப் பிடுங்கி அனுப்பிய மாணவர்கள் - நீங்களே பாருங்க
TASMAC SHOP : பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கால்நடை தடுப்பு... நோயாளிகள் பெரும் அவதி: எங்கே தெரியுமா?
ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கால்நடை தடுப்பு... நோயாளிகள் பெரும் அவதி: எங்கே தெரியுமா?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
Embed widget