மேலும் அறிய

ஓரம்போ... ஓரம்போ... ருக்மணி குடும்பதோடு வர்றா உலா: கதறும் வாகன ஓட்டிகள்

தினமும் கால்நடைகளால் அவதிக்கு உள்ளாகி வருகிறோம். நாங்கள் முடிந்த வரை பொறுத்து கொண்டு தான் செல்கிறோம். மாடுகளை வளர்ப்பவர்கள் மீது தான் தவறு இருக்கிறது.

தஞ்சாவூர்: நீங்க ஒதுங்கி போங்கப்பா... ருக்மணி குடும்பத்தோடு வர்றா உலா என்று கெத்து காட்டி சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டன. 

தஞ்சையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து அனைத்தும் திருவிடைமருதூரில் உள்ள கோசாலைக்கு வாகனம் மூலம் அனுப்பி வைத்தனர். தஞ்சாவூர் மாநகராட்சி முழுவதும் சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் அதிக அளவில் விபத்துக்கள் ஏற்பட்டுவதாக தஞ்சை மாநகராட்சிக்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.

தஞ்சை மாநகராட்சியில் முக்கிய பகுதிகளான மருத்துவக்கல்லூரி சாலை, புதிய பேருந்து நிலையம்,  நாஞ்சிக்கோட்டை சாலை, கான்வென்ட், ராமநாதன்,  கரந்தை ஆகியவற்றில் மாடுகள், ஆடுகள் போன்ற கால்நடைகள் செம ஹாயாக சாலையில் சுற்றி திரிகின்றன. இந்த பகுதிகள் மட்டுமின்றி சந்துகளிலும் இவற்றின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. காலை வேளையில் உணவு தேடி சுற்றுவதும், மாலை வேளையில் நடுசாலையிலேயே ஒய்யாரமாக மாடு போல் சுற்றி உட்கார்ந்து அசைபோட்டபடி ஓய்வு எடுப்பதும் என்று வாகன ஓட்டுனர்களை மிரட்டி வந்தன. 


ஓரம்போ... ஓரம்போ... ருக்மணி குடும்பதோடு வர்றா உலா: கதறும் வாகன ஓட்டிகள்

ஏற்கனவே தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களால் தினமும் அதிக அளவிளான விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன‌. இந்நிலையில் தற்போது கடந்த ஆண்டுகளை விட தற்போது ஏராளமான மாடுகள் சாலையில் சுற்றி திரிவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் வாகன ஓட்டுனர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருவதோடு மட்டுமன்றி தினமும் விபத்துக்களிலும் சிக்கித் தவிக்கின்றனர். முக்கியமாக காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் செல்லும் போதும், குழந்தைகளை பள்ளிகளில் விடுவதற்கு வாகனங்களில் செல்லும் பெற்றோர்கள், வேலைக்கு செல்பவர்கள், அவசர ஊர்தி என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

வாயில்லா ஜீவன் என வாகனங்களை நிறுத்திவிட்டு மாடுகள் கடந்து செல்லும் வரை மக்கள் காத்திருந்து செல்கின்றனர். இருப்பினும் மாடுகள் உரிமையாளர்களின் மீது ஆதங்கத்தை கொட்டிவிட்டு செல்கின்றனர். எப்போதாவது என்றால் பரவாயில்லை, பெரிய பாதிப்பு யாருக்கும் இல்லை. ஆனால் இது தினந்தோறும் நடந்து வருவது சிக்கலை ஏற்படுத்துகிறது. வீடுகளில் மாடுகளை கட்டிப்போடாமல் அதிகாலையிலேயே அவிழ்த்துவிட்டு விடுகின்றனர். அந்த மாடுகளும் சாலைகளிலேயே உலா வருகிறது. எனவே இதுகுறித்து தஞ்சை மாநகராட்சி சார்பில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார்கள் எழுந்தது.

இதையடுத்து தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த மூன்று மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து மாநகராட்சி வாகனம் மூலம் திருவிடைமருதூரில் உள்ள கோசாலைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வாகன ஓட்டுனர்கள் தரப்பில் கூறியதாவது:

தினமும் கால்நடைகளால் அவதிக்கு உள்ளாகி வருகிறோம். நாங்கள் முடிந்த வரை பொறுத்து கொண்டு தான் செல்கிறோம். மாடுகளை வளர்ப்பவர்கள் மீது தான் தவறு இருக்கிறது. இதனால் விபத்துகள் ஏற்பட்டு உயிருக்கு அபாயம் ஏற்படும் நிலை உள்ளது. தயவு செய்து இதற்கு மாநகராட்சி ஒரு நிரந்தர தீர்வு ‌அளிக்க வேண்டும், கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு கடுமையாக அபராதம் விதிக்க வேண்டும். மாடுகள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு சாலையில் செல்லும் வாகனங்களின் குறுக்கே புகுந்து ஓடுகின்றன. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் நிலைத்தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். எனவே இனியும் இந்த நிலை ஏற்டாதவாறு சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிப்பதோடு மட்டுமின்றி அவற்றின் உரிமையாளர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Free Laptop: இவ்வளவு புதிய வசதியோடு இலவச லேப்டாப்பா.!! எந்தெந்த மாணவர்களுக்கு கிடைக்கும்.? தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
இவ்வளவு புதிய வசதியோடு இலவச லேப்டாப்பா.!! எந்தெந்த மாணவர்களுக்கு கிடைக்கும்.? தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
US Attacked Venezuela: வெனிசுலாவை தாக்கியது ஏன்? சீனாவிற்கு பாடம், குட்டி நாடுகளுக்கு வார்னிங் - ட்ரம்ப் அதிரடி
US Attacked Venezuela: வெனிசுலாவை தாக்கியது ஏன்? சீனாவிற்கு பாடம், குட்டி நாடுகளுக்கு வார்னிங் - ட்ரம்ப் அதிரடி
Top 10 News Headlines: வெனிசுலாவிற்கு இடைக்கால அதிபர், இந்தியர்களுக்கு எச்சரிக்கை, பாரதிராஜா உடல்நிலை - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: வெனிசுலாவிற்கு இடைக்கால அதிபர், இந்தியர்களுக்கு எச்சரிக்கை, பாரதிராஜா உடல்நிலை - 11 மணி வரை இன்று
T20 Worldcup: ”இந்தியா வேண்டாம், டி20 உலகக் கோப்பையை மாத்துங்க” எகிறிய நாகினி பாய்ஸ், தட்டி விடும் பிசிசிஐ
T20 Worldcup: ”இந்தியா வேண்டாம், டி20 உலகக் கோப்பையை மாத்துங்க” எகிறிய நாகினி பாய்ஸ், தட்டி விடும் பிசிசிஐ
ABP Premium

வீடியோ

MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Free Laptop: இவ்வளவு புதிய வசதியோடு இலவச லேப்டாப்பா.!! எந்தெந்த மாணவர்களுக்கு கிடைக்கும்.? தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
இவ்வளவு புதிய வசதியோடு இலவச லேப்டாப்பா.!! எந்தெந்த மாணவர்களுக்கு கிடைக்கும்.? தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
US Attacked Venezuela: வெனிசுலாவை தாக்கியது ஏன்? சீனாவிற்கு பாடம், குட்டி நாடுகளுக்கு வார்னிங் - ட்ரம்ப் அதிரடி
US Attacked Venezuela: வெனிசுலாவை தாக்கியது ஏன்? சீனாவிற்கு பாடம், குட்டி நாடுகளுக்கு வார்னிங் - ட்ரம்ப் அதிரடி
Top 10 News Headlines: வெனிசுலாவிற்கு இடைக்கால அதிபர், இந்தியர்களுக்கு எச்சரிக்கை, பாரதிராஜா உடல்நிலை - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: வெனிசுலாவிற்கு இடைக்கால அதிபர், இந்தியர்களுக்கு எச்சரிக்கை, பாரதிராஜா உடல்நிலை - 11 மணி வரை இன்று
T20 Worldcup: ”இந்தியா வேண்டாம், டி20 உலகக் கோப்பையை மாத்துங்க” எகிறிய நாகினி பாய்ஸ், தட்டி விடும் பிசிசிஐ
T20 Worldcup: ”இந்தியா வேண்டாம், டி20 உலகக் கோப்பையை மாத்துங்க” எகிறிய நாகினி பாய்ஸ், தட்டி விடும் பிசிசிஐ
Pongal Parisu 2026: ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு - இன்று அறிவிப்பை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்?
Pongal Parisu 2026: ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு - இன்று அறிவிப்பை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்?
Anbil Mahesh intermediate teachers: இடைநிலை ஆசிரியர்களுக்கு விரைவில் குட்நியூஸ்.! வெளியாகப்போகும் அறிவிப்பு- அன்பில் மகேஷ் அதிரடி
இடைநிலை ஆசிரியர்களுக்கு விரைவில் குட்நியூஸ்.! வெளியாகப்போகும் அறிவிப்பு.? அன்பில் மகேஷ் அதிரடி
தவெக-பாஜக கூட்டணி சாத்தியமா? திமுக அமைச்சர்கள் குறித்து அருண்ராஜின் பரபரப்பு பதில்!
தவெக-பாஜக கூட்டணி சாத்தியமா? திமுக அமைச்சர்கள் குறித்து அருண்ராஜின் பரபரப்பு பதில்!
Sivakarthikeyan: ”ஜனநாயகனை கொண்டாடுங்க, அண்ணன் -தம்பி பொங்கல்” பராசக்தி ஆடியோ லாஞ்ச் - சிவகார்த்திகேயன் பேச்சு
Sivakarthikeyan: ”ஜனநாயகனை கொண்டாடுங்க, அண்ணன் -தம்பி பொங்கல்” பராசக்தி ஆடியோ லாஞ்ச் - சிவகார்த்திகேயன் பேச்சு
Embed widget