மேலும் அறிய

தஞ்சாவூரில் மின்கசிவால் தீ விபத்து: 5 வீடுகள் எரிந்து சேதம்!

தஞ்சாவூர் மேட்டு எல்லையம்மன் கோயில் தெருவில் மின்கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் 5 வீடுகள் எரிந்து சாம்பலானது.

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் மின்கசிவு காரணத்தால் 5 வீடுகள் தீயில் எரிந்து சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தஞ்சாவூர் மேட்டு எல்லையம்மன்கோயில் தெரு பகுதியில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 5 கூரை வீடுகள் தீயில் எரிந்ததில், வீட்டிலிருந்த பொருட்கள் மற்றும் செருப்பு தைக்கும் தளவாடப்பொருட்கள் ஆகியவை எரிந்து சேதமானது.

தஞ்சாவூர் மேட்டு எல்லையம்மன் கோயில் தெருவில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளது. இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலும் ஸ்கூல் பேக் மற்றும் செருப்பு தைக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை திடீரென அப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சரவணன்,தனசேகரன், குமார், பாண்டி, ராஜேந்திரன் ஆகியோரது வீடுகள் தீயில் எரிந்தது.

தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தஞ்சாவூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் சுமார் 1 மணி நேரம் போராடி அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டு உபயோக பொருட்கள், உடமைகள், சைக்கிள்கள், வாஷிங் மெஷின், ஸ்கூல் பேக்குகள், செருப்பு தைக்கும் தளவாடப் பொருட்கள் என சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளன. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து தஞ்சாவூர் கிழக்கு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

12 பைக்குகள் திருடியவர் தனிப்படையிடம் சிக்கினார்

கும்பகோணம் கோர்ட்டு பகுதியில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் கும்பகோணம், மயிலாடுதுறை, நீடாமங்கலம், ஜெயங்கொண்டம், குடவாசல், நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இங்கு சிகிச்சை பெற வருபவர்களின் வாகனங்கள் தொடர்ந்து திருட்டு நடப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம்க்கு புகார்கள் சென்ற வண்ணம் இருந்தன. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க அவர் கும்பகோணம் கிழக்கு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்அடிப்படையில் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் இளையராஜாஆத்மநாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.  

போலீசார்  ஆஸ்பத்திரி வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமராகளை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிள்களை திருடி செல்வது பதிவாகி இருந்தது.  அந்த நபர் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் மதுரை மாவட்டம்  எஸ். ஆலங்குளம் பகுதியை சேர்ந்த கணேஷ்குமார் (43) என்பதும் மோட்டார் சைக்கிளில் திருடியதும் தெரியவந்தது.

அவரை கைது செய்து பல்வேறு இடங்களில் இருந்து திருடப்பட்ட 12 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணையில் கணேஷ்குமார் மயிலாடுதுறை மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர் என்பதும், ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்த இவருக்கு கடன் தொல்லை இருந்ததால், மதுரையில் இருந்து மயிலாடுதுறைக்கு வந்து செல்லும் போது கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருடி வந்துள்ளார். தற்போது நீண்ட தேடுதலுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கில் சிறப்பாக பணியாற்றி மோட்டார் சைக்கிள் திருடியவரை கைது செய்த சப்-இன்ஸ்பெக்டர் முனியரசு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், தலைமை காவலர்கள் காமராஜ், ஜனார்த்தன், அரிகிருஷ்ணன், காவலர்கள் ராம்குமார், பரணிதரன்(தனிப்பிரிவு) ஆகியோரை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

புதிய வரலாறு: தஞ்சாவூர் மாநகராட்சிக்கு முதன்முறையாக பெண் ஐஏஎஸ் ஆணையர் நியமனம்
புதிய வரலாறு: தஞ்சாவூர் மாநகராட்சிக்கு முதன்முறையாக பெண் ஐஏஎஸ் ஆணையர் நியமனம்
டாக் ஆப் தி சிட்டி' ஆன லஞ்ச ஒழிப்பு சோதனை: வல்லத்தில் சிக்கிய கணக்கில் வராத பணம்
டாக் ஆப் தி சிட்டி' ஆன லஞ்ச ஒழிப்பு சோதனை: வல்லத்தில் சிக்கிய கணக்கில் வராத பணம்
கும்பகோணம் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் கலந்தாய்வு தொடக்கம்: விரிவான கால அட்டவணை வெளியீடு
கும்பகோணம் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் கலந்தாய்வு தொடக்கம்: விரிவான கால அட்டவணை வெளியீடு
திருச்சி - கரூர் நெடுஞ்சாலை விரிவாக்கம்: விபத்துகளைக் குறைக்க நில எல்லைகளைக் கண்டறியும் பணி தீவிரம்!
திருச்சி - கரூர் நெடுஞ்சாலை விரிவாக்கம்: விபத்துகளைக் குறைக்க நில எல்லைகளைக் கண்டறியும் பணி தீவிரம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
Embed widget