மேலும் அறிய

Thanjavur District Power Shutdown (03.07.2026)"பவர் பேங்க் சார்ஜ் போடுங்கோ... இன்வெர்ட்டர் ரெடியா?... நாளை 3.7.26 கரண்ட் கொஞ்சம் ஓய்வெடுக்குது!

மாதாந்திர பராமரிப்பு பணிகள் என்பது மின் விநியோக அமைப்பை பாதுகாப்பாகவும் தடையின்றியும் செயல்பட வைப்பதற்கான வழக்கமான நடைமுறையாகும். எனவே, பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு மின்வாரியம் கேட்டுள்ளது.

தஞ்சாவூர்: "செல்போனை முழுசா சார்ஜ் பண்ணிட்டீங்களா? பவர் பேங்க் ரெடியா?" என்று ஒரு முறை சரிபார்த்துக் கொள்ள வேண்டிய நாள் வந்துவிட்டது. அட ஆமாங்க. தஞ்சாவூர் மாவட்டம் வடசேரி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், அந்த துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பல்வேறு பகுதிகளில் நாளை (ஜூலை 3) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

பராமரிப்பு பணிக்காக தற்காலிக மின்தடை

இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மின் உபகரணங்களை பரிசோதித்தல், பராமரித்தல் மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் இந்த மாதாந்திர மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மின் விநியோகம் தொடர்ந்து சீராகவும் பாதுகாப்பாகவும் இருக்க இதுபோன்ற பராமரிப்பு பணிகள் அவ்வப்போது மேற்கொள்ளப்படுகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எந்தெந்த பகுதிகளில் மின்தடை?

வடசேரி துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் வடசேரி, திருமங்கலக்கோட்டை, முள்ளர்பட்டிக்காடு, பரவக்கோட்டை, தளிக்காடு, கருப்பூர், புலவஞ்சி, கீழக்குறிச்சி, தொண்டராம்பட்டு, அண்டமி, ஓலையகுன்னம், வளையகாடு, மண்டபம், மகாதேவபுரம், கண்ணுகுடி மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

பராமரிப்பு பணிகள் திட்டமிட்ட நேரத்திற்குள் நிறைவடைந்தால், அதன்பிறகு மின் விநியோகம் வழக்கம்போல் வழங்கப்படும் என்றும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்கூட்டியே தயாராகுங்கள்

மின்தடை காரணமாக தேவையற்ற சிரமங்களைத் தவிர்க்க, பொதுமக்கள் முன்கூட்டியே தேவையான ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மொபைல் போன்கள், பவர் பேங்க், லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை முன்கூட்டியே சார்ஜ் செய்து வைத்துக் கொள்வதுடன், தண்ணீர் மோட்டார் பயன்படுத்துவோர் தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வணிக நிறுவனங்கள், சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களும் தங்களது பணிகளை அதற்கேற்ப முன்கூட்டியே திட்டமிடுவது நல்லது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சில மணி நேர சிரமம்... நீண்ட நாள் நிம்மதிக்காக

மாதாந்திர பராமரிப்பு பணிகள் என்பது மின் விநியோக அமைப்பை பாதுகாப்பாகவும் தடையின்றியும் செயல்பட வைப்பதற்கான வழக்கமான நடைமுறையாகும். எனவே, பொதுமக்கள் இந்த தற்காலிக மின்தடைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மின்வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஆகவே, நாளைய தினம் மேற்கண்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள், "கரண்ட் போகும் முன்பே சார்ஜ் போடுங்கள்" என்ற பழைய அனுபவத்தை மறக்காமல், தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொண்டால், மின்தடை நேரத்தை சிரமமின்றி சமாளிக்க முடியும். மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், பொதுமக்கள் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும். எனவே வடசேரி மக்களே நாளைக்கு உங்கள் பகுதியில் பவர் கட் ஆகிறது. அதற்கு முன்னதாகவே நீங்கள் தயாராகி பவர்கட்டை சமாளிச்சுங்கோ. மறந்திடாதீங்க. அப்புறம் அவஸ்தை உங்களுக்குதான்.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

தஞ்சையை பரபரப்பாக்கிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய அதிரடி ரெய்டு 
தஞ்சையை பரபரப்பாக்கிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய அதிரடி ரெய்டு 
கேங்மேன் தொழிலாளர்களுக்கு பதவி உயர்வு எப்போது? தஞ்சையில் ஆர்ப்பாட்டம்
கேங்மேன் தொழிலாளர்களுக்கு பதவி உயர்வு எப்போது? தஞ்சையில் ஆர்ப்பாட்டம்
புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம்... எதிர்ப்பு தெரிவிக்கும் ஓய்வூதியர்கள்: காரணம் என்ன?
புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம்... எதிர்ப்பு தெரிவிக்கும் ஓய்வூதியர்கள்: காரணம் என்ன?
கையில் கரும்புடன் களம் இறங்கிய விவசாயிகள்! தஞ்சாவூர் குருங்குளம் சர்க்கரை ஆலை முன் எதிரொலித்த கோரிக்கைகள்!
கையில் கரும்புடன் களம் இறங்கிய விவசாயிகள்! தஞ்சாவூர் குருங்குளம் சர்க்கரை ஆலை முன் எதிரொலித்த கோரிக்கைகள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Super Speciality: DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
Chennai Corporation: CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
பாமகவே பாஜக, அதிமுககிட்ட தொங்குது.. அன்புமணியை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
பாமகவே பாஜக, அதிமுககிட்ட தொங்குது.. அன்புமணியை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
இனிமேல் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்க மாட்டோம்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் உறுதி!
இனிமேல் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்க மாட்டோம்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் உறுதி!
TNEB : மின் கட்டணம் அதிகமா வந்திருக்கா.! பணத்தை திரும்ப கொடுக்க போறாங்க- மின்வாரியம் முக்கிய உத்தரவு
மின் கட்டணம் அதிகமா வந்திருக்கா.! பணத்தை திரும்ப கொடுக்க போறாங்க- மின்வாரியம் முக்கிய உத்தரவு
Hyundai Neira E-MPV: 490KM ரேஞ்சில் ஹுண்டாயின் புதிய 7 சீட்டர் மின்சார எம்பிவி - அம்சங்கள், வசதிகள் - விற்பனை எப்போது?
490KM ரேஞ்சில் ஹுண்டாயின் புதிய 7 சீட்டர் மின்சார எம்பிவி - அம்சங்கள், வசதிகள், விலை - விற்பனை எப்போது?
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Embed widget