மேலும் அறிய

திருவையாறில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்; பங்கேற்று பயன் பெற்ற ஏராளமான மக்கள்

இந்த முகாமில் தாசில்தார், பேரூராட்சி செயல் அலுவலர், துணைத் தலைவர், 15 வார்டு உறுப்பினர்கள், அனைத்து துறை அரசு அலுவலர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் திருவையாறில் பேரூராட்சி சார்பில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயம்புத்தூரில் மக்களுடன் முதல்வர் என்ற சிறப்பு முகாமை தொடங்கி வைத்து அனைத்து துறையினுடைய மனுக்களையும் வாங்கி குறைகளை தீர்க்கும் வண்ணமாக கேட்டறிந்தார். பின்பு அவற்றிற்கு உரிய ஆவணங்கள் உள்ளவர்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. இது மக்கள் மத்தியில் வெகுவாக பாராட்டுக்களை பெற்றது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் பேரூராட்சி, ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி போன்றவற்றில் மக்களுடன் முதல்வர் என்றும் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவித்தார். இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

அந்த வகையில் தஞ்சை மாவட்டம் திருவையாறில் பேரூராட்சியின் சார்பாக மக்களுடன் முதல்வர் என சிறப்பு முகாம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. தொடர்ந்து முகாமை திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன், பேரூராட்சி தலைவர் கஸ்தூரி நாகராஜன் முன்னிலையில் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.


திருவையாறில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்; பங்கேற்று  பயன் பெற்ற ஏராளமான மக்கள்

எரிசக்தி துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வளங்கள் துறை, ஊரக வளர்ச்சித் துறை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, தமிழ்நாடு அரசு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள், காவல்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை, சமூக நல மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மாற்று திறனாளிகள் துறை என அனைத்து துறைகளும் கம்ப்யூட்டர் மூலமாக ஆன்லைன் வசதியுடன் அமைக்கப்பட்டு இருந்தது.

இதை சட்டமன்ற உறுப்பினர் பார்வையிட்டு பொதுமக்கள் எந்த விதமான கோரிக்கை மனுகள் வழங்கி உள்ளார்கள் என கேட்டறிந்தார். உரிய ஆவணங்கள் இருந்தால் உடனடியாக அவற்றை நிவர்த்தி செய்து கொடுக்க வேண்டும். பொது மக்களை அலைய விடக்கூடாது என அரசு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்த முகாமில் தாசில்தார், பேரூராட்சி செயல் அலுவலர், துணைத் தலைவர், 15 வார்டு உறுப்பினர்கள், அனைத்து துறை அரசு அலுவலர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

திருவையாறு பகுதியில் சாரல் மழை பெய்து கொண்டிருந்த பொழுதும் தங்களுடைய குறைகளை நிவர்த்தி செய்வதற்காக ஆர்வம் காட்டிய மக்கள்  மழையை பொருட்படுத்தாமல் பட்டா, ரேஷன் கார்டு, முதியோர் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான மூன்று சைக்கிள் வாகனம், மகளிர் உரிமைத்தொகை, மருத்துவ காப்பீடு, மின் மாற்றங்கள்,வாரிசு சான்றிதழ், பட்டா மாறுதல் , நில அளவீடு பிறப்பு இறப்பு சான்றிதழ் போன்ற உதவிகள் கேட்டு மனுக்கள் அளித்தனர். இவற்றை பெற்ற அரசு அலுவலர்கள் உரிய ஆவணங்கள் இருந்தவற்றுக்கு தீர்வு கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget