மேலும் அறிய

காணாமல் போனதாக கருதப்பட்ட பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலில் ஐம்பொன்சிலை கண்டுபிடிப்பு

காணாமல் போனதாக கருதப்பட்ட சண்டிகேஸ்வரர் ஐம்பொன் சிலை, கீழமனக்குடி கோயில் சிலையாக கணக்கில் இருந்து, பந்தநல்லுார் பசுபதீஸ்வரர் கோயில் பாதுகாப்பு அறையில் இருந்துள்ளது

பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலில் காணாமல் போனதாக கருதப்பட்ட சண்டிகேஸ்வரர் ஐம்பொன் சிலை, அதே கோயிலில் பாதுகாப்பு அறையில் இருந்ததாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பந்தநல்லூர் பசுபதீஸ்வரர்  சிவன் கோயிலில் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டு இருந்த, கீழ்மனக்குடி விஸ்வநாதசுவாமி மற்றும் ரங்கராஜபுரம் இடும்பேஸ்வரர் கோயிலின் 6 உற்சவர் ஐம்பொன சிலைகள் திருட்டு போனதாகவும்,  திருட்டு போன சிலைகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் புகார் அளிக்காமல் மறைத்து விட்டதாகவும், பந்தநல்லுாரை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் அளித்த புகாரின் பேரில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கடந்த 2017-ம் ஆண்டு 9 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.



காணாமல் போனதாக கருதப்பட்ட பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலில் ஐம்பொன்சிலை கண்டுபிடிப்பு

மேலும், இதே கோயிலில் இருந்து 60 க்கும் மேற்பட்ட உற்சவர் சிலைகள் திருடு போய் விட்டதாக, வெங்கட்ராமன், கொடுத்த புகாரின் பேரில் பந்தநல்லுார் போலீசார் வழக்கு பதிவு செய்து, இவ்வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தற்போது, கீழ்மனக்குடி விஸ்வநாதசுவாமி மற்றும் ரங்கராஜபுரம் இடும்பேஸ்வரர் கோயில்களில் 8 சிலைகள் திருட்டு போய் விட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக 4 பேரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்கள். திருட்டு போன சிலைகளின் புகைப்படங்களை வைத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.


காணாமல் போனதாக கருதப்பட்ட பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலில் ஐம்பொன்சிலை கண்டுபிடிப்பு

அதன்படி பசுபதீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ஒரு பழமையான சண்டிகேஸ்வர் உலோக சிலையும் காணாமல்  போனது தெரியவந்தது.இந்நிலையில் பசுபதீஸ்வரர் கோயிலில் காணாமல் போனதாக கருதப்பட்ட சண்டிகேஸ்வரர் ஐம்பொன் சிலை, கீழமனக்குடி கோயில் சிலையாக கணக்கில் இருந்து, பந்தநல்லுார் பசுபதீஸ்வரர் கோயில் பாதுகாப்பு அறையில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் விசாரணை அடிப்படையில் கண்டுபிடித்தனர்.  இதன் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

நியாய விலை கடையில் தரமற்ற அரிசி விநியோகம் - கீழே கொட்டி பொதுமக்கள் போராட்டம்

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு  கூடுதல் இயக்குநர் க.ஜெய்ந்த்முரளி உத்தரவின் பேரில்,  கூடுதல் கண்காணிப்பாளர்கள் அசோக் நடராஜன், ராஜாராம் ஆகியோர் நேற்று இந்த சிலையை, சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் கும்பகோணத்தில் உள்ள கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கும்பகோணத்தை மையமாக கொண்டு விசாரிக்க காரணமாக இருந்ததும், சிலை கடத்தல் துறை விஸ்வரூபம் எடுப்பதற்கு பந்தநல்லுார் மற்றும் மனக்கடி கிராமத்திலுள்ள கோயில் சிலைகள் காணமாமல் போனது தான் காரணம்  என்பது குறிப்பிடத்தக்கது.

தஞ்சாவூரில் கடும் வைக்கோல் தட்டுப்பாடு - கேரளாவுக்கு இறைச்சிக்காக கொண்டு செல்லப்படும் மாடுகள்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rain Update: மக்களே உஷார்..! இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Rain Update: மக்களே உஷார்..! இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Breaking News LIVE 28th Sep 2024: இஸ்ரேல் தாக்குதல் - லெபனானில் மேலும் 300 பேர் பலி
Breaking News LIVE 28th Sep 2024: இஸ்ரேல் தாக்குதல் - லெபனானில் மேலும் 300 பேர் பலி
Nirmala Sitharaman: ”தேர்தல் பத்திரம் மூலம் பணம் பறிப்பு” - நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிய நீதிமன்றம் உத்தரவு
Nirmala Sitharaman: ”தேர்தல் பத்திரம் மூலம் பணம் பறிப்பு” - நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிய நீதிமன்றம் உத்தரவு
ENG Vs AUS ODI: உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை பொட்டலம் கட்டிய இங்கிலாந்து - 126 ரன்களுக்கு ஆல்-அவுட், அபார வெற்றி
ENG Vs AUS ODI: உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை பொட்டலம் கட்டிய இங்கிலாந்து - 126 ரன்களுக்கு ஆல்-அவுட், அபார வெற்றி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thrissur ATM Robbery | GUNSHOT.. CHASING.. ஹரியானா கொள்ளையர்கள் சிக்கியது எப்படி? Namakkal ContainerThiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rain Update: மக்களே உஷார்..! இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Rain Update: மக்களே உஷார்..! இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Breaking News LIVE 28th Sep 2024: இஸ்ரேல் தாக்குதல் - லெபனானில் மேலும் 300 பேர் பலி
Breaking News LIVE 28th Sep 2024: இஸ்ரேல் தாக்குதல் - லெபனானில் மேலும் 300 பேர் பலி
Nirmala Sitharaman: ”தேர்தல் பத்திரம் மூலம் பணம் பறிப்பு” - நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிய நீதிமன்றம் உத்தரவு
Nirmala Sitharaman: ”தேர்தல் பத்திரம் மூலம் பணம் பறிப்பு” - நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிய நீதிமன்றம் உத்தரவு
ENG Vs AUS ODI: உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை பொட்டலம் கட்டிய இங்கிலாந்து - 126 ரன்களுக்கு ஆல்-அவுட், அபார வெற்றி
ENG Vs AUS ODI: உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை பொட்டலம் கட்டிய இங்கிலாந்து - 126 ரன்களுக்கு ஆல்-அவுட், அபார வெற்றி
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Kanchipuram Traffic Diversion: காஞ்சிபுரம் வாகன ஓட்டிகளே உஷார்... திடீர் போக்குவரத்து மாற்றம்.. முழு தகவல் இங்கே ..
Kanchipuram Traffic Diversion: காஞ்சிபுரம் வாகன ஓட்டிகளே உஷார்... திடீர் போக்குவரத்து மாற்றம்.. முழு தகவல் இங்கே ..
திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு, கடவுளோடு விளையாடுகிறார் - மதுரையில் ரோஜா பேட்டி !
திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு, கடவுளோடு விளையாடுகிறார் - மதுரையில் ரோஜா பேட்டி !
திருவிழாவில் ஏற்பட்ட முன் விரோதம்... 'டீ' வியாபாரியை வழிமறித்து வெட்டி படுகொலை...
திருவிழாவில் ஏற்பட்ட முன் விரோதம்... 'டீ' வியாபாரியை வழிமறித்து வெட்டி படுகொலை...
Embed widget