மேலும் அறிய

ஓராண்டு நிறைவு நாள்... விருட்ச வனத்தில் மாணவர்களுக்கு விளக்கம் அளித்த தஞ்சை கலெக்டர்!

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் மாணவ, மாணவிகளிடையே மரம் நடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

தஞ்சாவூர் அருகே 7 ஏக்கரில் 216 வகையான பழமையான மரங்களை கொண்ட விருட்ச வனம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் ஓராண்டு நிறைவு நாளில் பள்ளி மாணவ, மாணவிகளை வரவழைத்து மரங்களை பற்றி எடுத்துக்கூறி விளக்கம் அளித்தார் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர். தஞ்சாவூர் அருகே திருமலைசமுத்திரம் ஊராட்சியில் 216 வகையான அரிய, பாரம்பரிய மரங்களை கொண்டு 7 ஏக்கரில் உருவாக்கப்பட்ட விருட்ச வனத்துக்கு மாணவ, மாணவிகளை வரவழைத்து, மரங்களை பற்றி எடுத்துரைத்தார் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

தஞ்சாவூர் அருகே திருமலைசமுத்திரம் ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான 7 ஏக்கரில் பாரம்பரிய, அரிய வகையான மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் வகையில் விருட்ச வனம் உருவாக்கப்பட்டது. கடந்தாண்டு செப்.15-ம் தேதி இந்த விருட்ச வனத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் கருவாலி, திருவோடு, இத்தி, சிவகுண்டலம், அத்தி, எட்டி, மாவிலங்கை, ருத்ராட்சம் என 216 வகையான 500 மரக்கன்றுகள் நடப்பட்டது.

இந்த மரக்கன்றுகள் நடப்பட்டு ஓராண்டு நிறைவு அடைந்துள்ளது. இதையடுத்து திருமலைசமுத்திரம் பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகளை விருட்ச வனத்துக்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வரவழைத்தார். பின்னர் விருட்ச வனத்தில் உள்ள மரங்களைப் பற்றியும், அதன் தன்மைகளைப் பற்றியும் விளக்கமாக மாணவ, மாணவிகளுக்கு எடுத்துக்கூறினார். பின்னர் மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

ஓராண்டு நிறைவு நாள்... விருட்ச வனத்தில் மாணவர்களுக்கு விளக்கம் அளித்த தஞ்சை கலெக்டர்!

தொடர்ந்து நிருபர்களிடம் கலெக்டர் கூறியதாவது: கடந்தாண்டு செப்.15-ம் தேதி திருமலை சமுத்திரம் கிராமத்தில் வன விருட்சம் என்ற மரங்கள் சரணாலயம் தொடங்கப்பட்டது. தற்போது ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இதில் 216 வகையான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இந்த சரணாலயத்தில் பன்முகத் தன்மையை பிரதிபலிக்கும் வகையில் புங்கனூர் பசுக்கள் மற்றும் காளை வளர்க்கப்படுகிறது. அதே போல் உலகத்திலேயே சிறிய ரகமான கோழி மற்றும் பெரிய கோழி இனங்களும் வளர்க்கப்படுகிறது.


ஓராண்டு நிறைவு நாள்... விருட்ச வனத்தில் மாணவர்களுக்கு விளக்கம் அளித்த தஞ்சை கலெக்டர்!
மேலும், ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டத்தின் கீழ் மீன் பண்ணை குட்டையும், காய்கறி தோட்டமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சரணாலயம் பெரிய அளவில் உருவாக்கப்பட்டு வருகிறது. வருங்காலத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இந்த மரங்களின் சரணாலயம் பெரிய அளவில் உதவிடும். இன்று முதல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இந்த சரணாலயத்தை பார்வையிடலாம். இன்னும் மூன்று வார காலத்தில் சுற்றுலாப் பயணிகளும் இந்த சரணாலயத்துக்கு வந்து பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்றார்.

நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் ஸ்ரீகாந்த், கோட்டாட்சியர் ரஞ்சித், வட்டாட்சியர் மணிகண்டன், திருமலைசமுத்திரம் ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேஷ் மற்றும் அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் தரப்பில் கூறுகையில், இங்குள்ள மரங்கள் பற்றி அறிந்து கொண்டது பயன் உள்ள ஒன்றாக இருந்தது. இந்த நாளை மறக்க முடியாத நாளாக மாற்றி விட்டது என்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Sabareesan : ’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Trump Gets Peace Prize: அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
Embed widget