மேலும் அறிய

தஞ்சாவூர்: கும்பகோணத்தில் மின்சாரம் தாக்கி 9 வயது சிறுவன் உயிரிழப்பு

’’மின்கம்பத்திலிருந்து செல்லும் ஒயரில் கசிவு ஏற்பட்டு, தகர சீட்டில் உரசிக்கொண்டிருந்தது. இதனை அறியாமல், சசிகரன், கைப்பட்டதால், மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்’’

கும்பகோணம் அருகே திருபுவனம் காங்கேயம்பேட்டையைச் சேர்ந்தவர் பாட்டையன்- மாலினி. இவர்களது மகன் சசிகரன் (9). இவர் அணைக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார் இந்நிலையில், மாலினி தனது கைக்குழந்தையான கீர்த்திஹசனுக்கு மாடியில் உணவு ஊட்டிக் கொண்டிருந்தார். கும்பகோணம் பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால், மாடி பகுதிகளில் பாசிபடர்ந்து வழுக்கும் நிலையில் இருந்தது. அப்போது மாடியில் விளையாடி கொண்டிருந்த சசிகரன், மாடி பகுதி வழுக்கியதால், அருகில் அமைக்கப்பட்டிருந்த தகர சீட்டில் நிலைதடுமாறி கைப்பட்டது. அதில் மின்கம்பத்திலிருந்து செல்லும் ஒயரில் கசிவு ஏற்பட்டு, தகர சீட்டில் உரசிக்கொண்டிருந்தது. இதனை அறியாமல், சசிகரன், கைப்பட்டதால், மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டான். இதில் சம்பவ இடத்திலேயே சசிகரன், துடிதுடித்து இறந்தான். இதனையறிந்த, தாய் மாலினி, தனது மகன் மின்சாரம் தாக்கி இறப்பதை பார்த்து கதறி அழுதார். அழுகுரல் கேட்டு ஒடி வந்த உறவினர்கள், மின்சாரத்துறையினருக்கு தகவல் தெரிவித்து மின்சாரத்தை துண்டித்தனர். அதன் பின்னர், சசிகரனின் உடலை மீட்டு, திருவிடைமருதுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் குறித்து திருவிடைமருதூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


வயலில் களை எடுத்த போது இடிதாக்கி பெண் சாவு

கும்பகோணம் அருகே துக்காச்சி ஏரிசத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி ராதிகா (35). இவர் அதே கிராமத்தை சேர்ந்த சில பெண் கூலி விவசாய தொழிலாளர்களுடன்,  வயலில் கூலிக்கு சென்று நெற்பயிரில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். கும்பகோணம் மற்றும் சுற்றுப்பகுதியில் பலத்த மழை பெய்து வந்தாலும், பண்டிகையை  கொண்டாடுவேண்டும் என்பதற்காக மழையையும் பொருட்ப்படுத்தாது, வயலில் பெண் விவசாய தொழிலாளர்கள் களைகளை எடுத்து வந்தனர். அப்போது, திடிரென பலத்த சத்தத்துடன் இடி இடித்து, மின்னல் தோன்றியது. இதில் வயலில் நின்றிருந்த ராதிகா மீது இடி தாக்கியது.  இடி தாக்கியதில் ராதிகா அதே இடத்தில் உயிரிழந்தார். இதனையறிந்த மற்ற பெண் விவசாயிகள், அலறி அடித்து கொண்டு கரைக்கு ஓடினர்.

ஆனால் ராதிகா மட்டும் வராததால், அவரை திரும்பி பார்த்த போது, வயலில் விழந்து கிடந்தார். ராதிகாவை அழைத்து பார்த்த போது, அவர் பதில் ஏதும் கூறாததால், உடன், வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள், ராதிகாவின் அருகில் சென்று பார்த்த போது, ராதிகா இறந்து கிடந்தது தெரியவந்தது. பின்னர் உறவினர்கள் ராதிகாவின் உடலை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நாச்சியார்கோவில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் திருவிடைமருதுார் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

தஞ்சையில் இஞ்சி விலை கிடுகிடு உயர்வு! வரத்து குறைந்ததால் உச்சம்: இல்லத்தரசிகள் அதிர்ச்சி
தஞ்சையில் இஞ்சி விலை கிடுகிடு உயர்வு! வரத்து குறைந்ததால் உச்சம்: இல்லத்தரசிகள் அதிர்ச்சி
ரேஷன் அரிசி கடத்தினால் கைது மட்டும் இல்லை... குண்டர் சட்டமும் பாயும்!
ரேஷன் அரிசி கடத்தினால் கைது மட்டும் இல்லை... குண்டர் சட்டமும் பாயும்!
பயமுறுத்தும் பட்டுப்போன மரம்... பள்ளி மாணவர்களுக்கு அபாயம்: வெட்டி அகற்ற வலியுறுத்தல்
பயமுறுத்தும் பட்டுப்போன மரம்... பள்ளி மாணவர்களுக்கு அபாயம்: வெட்டி அகற்ற வலியுறுத்தல்
சாலையை இரண்டாகப் பிரிக்கும் பள்ளம்! சித்திரக்குடி – ஆலக்குடி சாலையில் விபத்து அபாயம்
சாலையை இரண்டாகப் பிரிக்கும் பள்ளம்! சித்திரக்குடி – ஆலக்குடி சாலையில் விபத்து அபாயம்

வீடியோ

CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்
Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs Manickam Tagore: கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
TVK vs ADMK:
TVK vs ADMK: "திமுக-வுடன் கூட்டுக்களவாணி ஆட்சி.. கொடநாடைப் பேசினால் நடுங்குபவர்.." இபிஎஸ்-ஐ விளாசிய தவெக!
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!
NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!
India Condemn Hormuz Attack: ஹார்முஸில் டேங்க்கரை தாக்கிய ஈரான்; பலியான இந்திய மாலுமி; தாக்குதலை நிறுத்தக்கூறி இந்தியா கண்டனம்
ஹார்முஸில் டேங்க்கரை தாக்கிய ஈரான்; பலியான இந்திய மாலுமி; தாக்குதலை நிறுத்தக்கூறி இந்தியா கண்டனம்
Nissan Tekton Review: மாஸா களமிறங்கியிருக்குற நிசானோட புதிய டெக்டான வாங்குறது ஒர்த்தா.? இதோ ஃபர்ஸ்ட் லுக் ரிவ்யூவ்
மாஸா களமிறங்கியிருக்குற நிசானோட புதிய டெக்டான வாங்குறது ஒர்த்தா.? இதோ ஃபர்ஸ்ட் லுக் ரிவ்யூவ்
இனி சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளில் மூன்றாம் மொழி கட்டாயம்: வெளியான புதிய அறிவிப்பு
இனி சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளில் மூன்றாம் மொழி கட்டாயம்: வெளியான புதிய அறிவிப்பு
Senthil Balaji: விசாரணைக்கு வந்தா என்னை கைது செய்யக்கூடாது.! போலீசாருக்கு செந்தில் பாலாஜி பரபரப்பு கடிதம்
விசாரணைக்கு வந்தா என்னை கைது செய்யக்கூடாது.! போலீசாருக்கு செந்தில் பாலாஜி பரபரப்பு கடிதம்
Embed widget