மேலும் அறிய

தஞ்சையில் வெளுத்தெடுத்த மழை... சம்பா, தாளடி பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை!

தஞ்சாவூரில் நேற்று மாலை முதல் இரவு வரை வெளுத்த வாங்கிய மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் நீரில் மூழ்கின.

தஞ்சாவூரில் நேற்று மாலை முதல் இரவு வரை வெளுத்த வாங்கிய மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வடகிழக்கு பருவமழை துவங்கியது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று மாலை தொடங்கிய மழை இரவு 8 மணிவரை சுமார் மூன்று மணி நேரத்துக்கு மேலாக வெளுத்து வாங்கியது. இதனால் அதிகபட்சமாக தஞ்சாவூரில் 177.50 மி.மீட்டர் அளவிற்கும், குறைந்த பட்சமாக என மாவட்டம் முழுவதும் 409.90 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தஞ்சை நகர் மட்டுமின்றி சுற்றுப்பகுதிகளான வல்லம், செங்கிப்பட்டி, ஆலக்குடி, சித்திரக்குடி, பூதலூர், திருக்காட்டுப்பள்ளி, தோகூர் என்று அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்தது.

தஞ்சையில் பெய்த கனமழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இருசக்கர வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டுனர்கள் வெகுவாக திணறினர். பஸ் போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டது. தஞ்சையில் தெற்குவீதி, கீழவீதி, மேலவீதி உட்பட பல பகுதிகளிலும் மழை நீர் தேங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. இதேபோல் ரயில்வே கீழ்பாலம் பகுதியிலும் தண்ணீர் தேங்கியது.

பணி முடித்து வீட்டுக்கு திரும்ப இயலாமல் பெண்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். இதேபோல் நேற்று முன்தினம் விடுமுறை அளிக்கப்பட்டு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவ, மாணவிகளும் இந்த மழையால் நனைந்து கொண்டே பஸ்களில் செல்லும் நிலை உருவானது. மேலும் சில கிராமங்களில் கனமழையால் மின்சாரமும் தடைப்பட்டது. இந்த தொடர்மழை காரணமாக குளிச்சப்பட்டு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு நடவு செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. மேலும், நேற்று மதியம் முதல் பெய்த மழையால், வயல்களில் இருந்து தண்ணீர் வடியதால், இளம் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.


தஞ்சையில் வெளுத்தெடுத்த மழை... சம்பா, தாளடி பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை!

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் தரப்பில் கூறியதாவது; குளிச்சப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில், வடிகால் வாய்க்கால் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக துார்வாரப்படாமல் உள்ளதால், ஒவ்வொரு முறையும் மழையின் போது, தண்ணீரில் பயிர்கள் மூழ்கி இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் தற்போது அரசு இப்பகுதியில் கணக்கெடுப்பு நடத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும்,வடிகால் வாய்க்காலை முறையாக துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு தெரிவித்தனர்.


தஞ்சையில் வெளுத்தெடுத்த மழை... சம்பா, தாளடி பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை!

கனமழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார். பின்னர், விவசாயிகளிடம் தண்ணீர் வடிய நடவடிக்கை எடுக்க விரைவாக நடவடிக்கை என வேண்டும் என நீர்வளத் துறை மற்றும் வேளாண் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதேபோல் கும்பகோணம், திருவிடைமருதூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை உட்பட பகுதிகளிலும் கனமழை பெய்தது. மேலும் தஞ்சை மாவட்டம் ஆலக்குடி, 8 கரம்பை உட்பட பகுதிகளில் ஒரு போக சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் தேங்கியிருந்த தண்ணீரை விரைந்து வடிக்க செய்தனர். மழை நின்றவுடன் நாற்றங்கால் வயல்களில் தண்ணீரை வடித்து நாற்றுக்களை பறித்து கட்டு கட்டும் பணியிலும் மும்முரம் காட்டினர். 30 நாட்கள் வயதான நாற்றுக்களை பறித்து கட்டாக கட்டி சாகுபடி வயலில் நாளை நடவுப்பணி மேற்கொள்ளும் பணிகளில் இறங்கினர்.

தலைப்பு செய்திகள்

மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
அட்டகாச ஆஃபரு... ஒரு ரூபாய்க்கு சிம்மு! அதிரடிக்குது பிஎஸ்என்எல்லு சுதந்திர தின ஆஃபர்... ஒரு மாத ரீசார்ஜ் உடன் புதிய சலுகைகள் அறிவிப்பு
அட்டகாச ஆஃபரு... ஒரு ரூபாய்க்கு சிம்மு! அதிரடிக்குது பிஎஸ்என்எல்லு சுதந்திர தின ஆஃபர்... ஒரு மாத ரீசார்ஜ் உடன் புதிய சலுகைகள் அறிவிப்பு
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
வெயிலா... மேகமா... மழையா? “குடை எடுத்துச் செல்வோமா... வேண்டாமா?” தஞ்சை மக்கள் குழம்பும் இன்றைய வானிலை
வெயிலா... மேகமா... மழையா? “குடை எடுத்துச் செல்வோமா... வேண்டாமா?” தஞ்சை மக்கள் குழம்பும் இன்றைய வானிலை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Gold Silver Rate Aug. 14th: தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Embed widget