மேலும் அறிய

தொழில்நுட்ப ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கணும்: அரியலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு எதற்காக? 

சிறுகளத்தூரில் ஒரு ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த முந்திரி தோட்டத்தை பார்வையிட்ட அவர், கடந்த ஆண்டுகளின் மகசூல் நிலவரம் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

அரியலூர்:  அரியலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகள், அரசின் நலத்திட்டங்கள் மற்றும் விவசாய விளைபொருட்களின் சந்தைப்படுத்தல் தொடர்பான வழிகாட்டுதல்களை தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ந. மிருணாளினி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

செந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிறுகளத்தூர் ஊராட்சி மற்றும் உடையார்பாளையம் பேரூராட்சியில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


தொழில்நுட்ப ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கணும்: அரியலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு எதற்காக? முந்திரி தோட்டத்தில் ஆய்வு

சிறுகளத்தூரில் ஒரு ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த முந்திரி தோட்டத்தை பார்வையிட்ட அவர், கடந்த ஆண்டுகளின் மகசூல் நிலவரம் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து தோட்டங்களை முறையாக பராமரித்து, நவீன தொழில்நுட்பங்களை பின்பற்றி அதிக மகசூல் பெற வேண்டும் என அறிவுறுத்தினார்.

வாழை, கொய்யா சாகுபடிக்கும் ஆலோசனை

0.810 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழை மற்றும் கொய்யா தோட்டங்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர், மரங்களின் வளர்ச்சி, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை நடவடிக்கைகள் குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடினார். அரசு வழங்கும் மானியத் திட்டங்கள் மற்றும் தொழில்நுட்ப சேவைகளை முழுமையாக பயன்படுத்தி, ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலைகள் ஆய்வு

ரூ.12.25 லட்சம் மானியத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் முந்திரி கொட்டை உடைக்கும் தொழிற்சாலையையும், உடையார்பாளையத்தில் ரூ.78.05 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மதிப்புக்கூட்டு மையத்தையும் பார்வையிட்டார். உற்பத்தித் திறன், தரக் கட்டுப்பாடு, சந்தைப்படுத்தல், தொழிலாளர்களின் பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்து, உற்பத்தியை மேலும் மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

தொழில்நுட்ப ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கணும்: அரியலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு எதற்காக? 

சம்பங்கி சாகுபடியை விரிவுபடுத்த அழைப்பு

0.960 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பங்கி மலர் தோட்டத்தையும் பார்வையிட்ட அவர், மலரின் தரம், சந்தை வாய்ப்புகள் மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து கேட்டறிந்தார். தோட்டக்கலைப் பயிர்களில் நல்ல வருமானம் தரக்கூடிய சம்பங்கி சாகுபடியை மேலும் விரிவுபடுத்த விவசாயிகள் முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அரசுத் திட்டங்கள் முழுமையாக சென்றடைய வேண்டும்

வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறைகள் செயல்படுத்தி வரும் அனைத்து திட்டங்களின் பயன்களும் தகுதியான விவசாயிகளை முழுமையாக சென்றடைய வேண்டும் என்றும், தொழில்நுட்ப ஆலோசனைகள், நலத்திட்டங்கள் மற்றும் சந்தைப்படுத்தல் குறித்த வழிகாட்டுதல்கள் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ந. மிருணாளினி உத்தரவிட்டார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

தொழில்நுட்ப ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கணும்: அரியலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு எதற்காக? 
தொழில்நுட்ப ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கணும்: அரியலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு எதற்காக? 
விதிமீறி வண்டல் மண் அள்ளியவர்கள் மீது அரியலூர் கலெக்டர் அதிரடி:11 டிராக்டர்கள், 3 ஜேசிபி பறிமுதல்
விதிமீறி வண்டல் மண் அள்ளியவர்கள் மீது அரியலூர் கலெக்டர் அதிரடி:11 டிராக்டர்கள், 3 ஜேசிபி பறிமுதல்
தஞ்சாவூரில் வெப்பம் தீவிரம்... மேகமூட்டம் நீடித்தாலும் மழைக்கு வாய்ப்பு இல்லை
தஞ்சாவூரில் வெப்பம் தீவிரம்... மேகமூட்டம் நீடித்தாலும் மழைக்கு வாய்ப்பு இல்லை
பாசன வாய்க்கால் கரையில் குவியும் குப்பைகள்... தஞ்சாவூர் அருகே தொற்றுநோய் அபாயம்!
பாசன வாய்க்கால் கரையில் குவியும் குப்பைகள்... தஞ்சாவூர் அருகே தொற்றுநோய் அபாயம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay warning : தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
TASMAC: குடிமகன்களுக்கு இனி ஜாலி.! தமிழகம் முழுவதும் Resto - Bar - புதிய பிளான் போட்ட டாஸ்மாக்
குடிமகன்களுக்கு இனி ஜாலி.! தமிழகம் முழுவதும் உணவகத்துடன் கூடிய Resto - Bar - புதிய பிளான் போட்ட டாஸ்மாக்
US Iran Tensions: “உலகில் எந்த சக்தியாலும் ஹார்முஸை எங்களிடமிருந்து பறிக்க முடியாது“; ட்ரம்ப்புக்கு ஈரான் நேரடி வார்னிங்
“உலகில் எந்த சக்தியாலும் ஹார்முஸை எங்களிடமிருந்து பறிக்க முடியாது“; ட்ரம்ப்புக்கு ஈரான் நேரடி வார்னிங்
125 சிசியா 350 சிசியா? தினசரி ஓட்டுவோருக்கு எந்த பைக் பெஸ்ட், எதில் மைலேஜ் அதிகம்? ஒப்பீடு
125 சிசியா 350 சிசியா? தினசரி ஓட்டுவோருக்கு எந்த பைக் பெஸ்ட், எதில் மைலேஜ் அதிகம்? ஒப்பீடு
TN Govt: குட்டீஸ்களுக்கு வார்னிங்..! முக்கிய உணவு பொருளுக்கு தடை விதித்த தமிழ்நாடு அரசு - காரணம் என்ன?
குட்டீஸ்களுக்கு வார்னிங்..! முக்கிய உணவு பொருளுக்கு தடை விதித்த தமிழ்நாடு அரசு - காரணம் என்ன?
TET 2026: ஆசிரியர் தகுதித் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு- காண்பது எப்படி? ஆட்சேபிக்க கடைசி வாய்ப்பு!
TET 2026: ஆசிரியர் தகுதித் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு- காண்பது எப்படி? ஆட்சேபிக்க கடைசி வாய்ப்பு!
Heatwave Orange Alert : வீட்டை விட்டு வெளியே வந்துடாதீங்க.! இந்த 15 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- வானிலை மையம் எச்சரிக்கை
வீட்டை விட்டு வெளியே வந்துடாதீங்க.! இந்த 15 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- வானிலை மையம் எச்சரிக்கை
Medical Admissions Reservation : மாணவர்களுக்கு குஷி.! மருத்துவ உள் இட ஒதுக்கீடு 10 % அதிகரிக்கப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மாணவர்களுக்கு குஷி.! மருத்துவ உள் இட ஒதுக்கீடு 10 % அதிகரிக்கப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
Embed widget