மேலும் அறிய

கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி - 3 பேரை தட்டித் தூக்கிய தஞ்சை போலீசார்

கத்தியை காட்டி பணம் பறித்த மர்ம நபர்கள் மற்றும் பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் ஆகியோரை தஞ்சாவூர் போலீசார் தட்டித் தூக்கி சிறையில் அடைத்தனர்.

தஞ்சாவூர்: தஞ்சையில் பல்வேறு இடங்களில் பொதுமக்களிடம் கத்தியை காட்டி பணம் பறித்த மர்ம நபர்கள் மற்றும் பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் ஆகியோரை தஞ்சாவூர் போலீசார் தட்டித் தூக்கி சிறையில் அடைத்தனர். போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கைகள் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்களை குவித்து வருகிறது. 

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு

தஞ்சை டவுன் கரம்பை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (40). இவர் நேற்று முன்தினம் கல்லணை கால்வாய் சாலை சுற்றுலா மாளிகை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் திடீரென்று சுரேஷ்குமாரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.300ஐ பறித்து சென்றார். இதனால் வெகுவாக அதிர்ச்சி  அடைந்த சுரேஷ்குமார் இதுகுறித்து தஞ்சை தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் தெற்கு போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சுரேஷ்குமாரிடம் பணம் பறித்தவர் தஞ்சை மானம்புச்சாவடியை சேர்ந்த உத்தமநாதன் (52) என்பதும், கத்தியை காட்டி பணத்தை பறித்ததும் தெரியவந்தது.

நடந்து சென்றவரிடம் பணம் பறித்த 2 பேர்

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இதேபோல் தஞ்சை விளார் சாலை ஜெகநாதன்நகரை சேர்ந்தவர் ராஜா (27). இவர் நேற்று முன்தினம் வடக்குவாசல் சுடுகாடு அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 2 பேர் ராஜாவை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.200ஐ பறித்து சென்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் மேற்கு போலீசார் நடத்திய விசாரணையில், மேலவீதியை சேர்ந்த கார்த்திகேயன் (48), வீரராகவன் (55) ஆகியோர்தான் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். இப்படி வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரையும் தஞ்சாவூர் போலீசார் தட்டி தூக்கி சிறையில் அடைத்தனர்.

Pushpa 2 Review: அல்லு அர்ஜூனின் புஷ்பா 2! நெருப்பா? வெறுப்பா? ரசிகனின் முழு திரைவிமர்சனம்!

பைக்கை திருடிய வாலிபர் வசமாக சிக்கினார்

இதேபோல் தஞ்சையில் வீட்டின் வாசலில் நிறுத்தப்பட்டு இருந்த பைக்கை  லாவகமாக லவட்டி சென்ற வாலிபரையும் போலீசார் கைது செய்துள்ளனர். தஞ்சை விளார் சாலை அண்ணாநகரை சேர்ந்தவர் பசுபதி மகன் மணிகண்டன் (21). கூலி தொழிலாளி. இவர் நேற்று தனது வீட்டு வாசலில் பைக்கை நிறுத்தி வீட்டிற்குள் சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது பைக்கை காணவில்லை. உடன் அக்கம்பக்கத்தில் மணிகண்டன் தன் பைக்கை தேடிப்பார்த்தார். ஆனால் பைக் கிடைக்கவில்லை. மர்மநபர் யாரோ திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து மணிகண்டன் தஞ்சை தெற்கு போலீசில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அருகில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். அதில் அதே பகுதியை சேர்ந்த மூங்கில்குமார் என்பவரின் மகன் சந்திரமோகன் (19) தான் பைக்கை திருடியவர் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரமோகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர் திருடிய பைக்கையும் பறிமுதல் செய்தனர். போலீசாரின் இந்த உடனுக்குடான நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பாராட்டுக்களை குவித்து வருகிறது. இதேபோல் பல குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களையும் போலீசார் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

ஓட்டுநரின் தூக்கக் கலக்கம் தந்த சோகம்: சென்டர் மீடியனில் மோதி வேன் கவிழ்ந்த விபத்தில் பெண் பலி
ஓட்டுநரின் தூக்கக் கலக்கம் தந்த சோகம்: சென்டர் மீடியனில் மோதி வேன் கவிழ்ந்த விபத்தில் பெண் பலி
விழி கவரும் இயற்கை விசித்திரம்: தஞ்சை அருகே பூத்துக் குலுங்கும் 'கூந்தல் பனை'!
விழி கவரும் இயற்கை விசித்திரம்: தஞ்சை அருகே பூத்துக் குலுங்கும் 'கூந்தல் பனை'!
எங்கள் உயிரை கூட விடுவோம்...மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம்: நலிவுற்ற விவசாயிகள் சங்கம் திட்டவட்டம்
எங்கள் உயிரை கூட விடுவோம்...மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம்: நலிவுற்ற விவசாயிகள் சங்கம் திட்டவட்டம்
தானியங்கள் சேமிப்பில் தகுந்த பாதுகாப்பு முறைகள்: வேளாண் துறை அட்வைஸ்
தானியங்கள் சேமிப்பில் தகுந்த பாதுகாப்பு முறைகள்: வேளாண் துறை அட்வைஸ்

வீடியோ

BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: புதிய கட்சியை நாளை அறிவிக்கிறார் அண்ணாமலை.? மதியம் 12 மணிக்கு மக்களுடன் பேசுவதாக பதிவு
புதிய கட்சியை நாளை அறிவிக்கிறார் அண்ணாமலை.? மதியம் 12 மணிக்கு மக்களுடன் பேசுவதாக பதிவு
Udhayanidhi Vs CM Vijay : “அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
“அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
Edappadi Palanisamy: “தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
“தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
TN Govt., Vs Ration Workers: ‘தாயுமானவர் திட்டம்‘; அரசுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை; என்ன பிரச்னை தெரியுமா.?
‘தாயுமானவர் திட்டம்‘; அரசுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை; என்ன பிரச்னை தெரியுமா.?
Hyundai i20 Facelift: டக்கரான ஒரு கார் விரைவில் டாப் டக்கரா வரப் போகுது; தரமான ஐ20 ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஹூண்டாய்
டக்கரான ஒரு கார் விரைவில் டாப் டக்கரா வரப் போகுது; தரமான ஐ20 ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஹூண்டாய்
TN Govt MoU: அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
Maruti Flex Fuel Car: பெட்ரோல், டீசல் பத்தின கவலைய விட்டுடுங்க; வந்துடுச்சு நாட்டின் முதல் Flex Fuel கார்; அசத்திய மாருதி
பெட்ரோல், டீசல் பத்தின கவலைய விட்டுடுங்க; வந்துடுச்சு நாட்டின் முதல் Flex Fuel கார்; அசத்திய மாருதி
Embed widget