மேலும் அறிய

தஞ்சை: விவசாயிகளிடம் ரூ.40 லட்சம் மோசடி?! தொடர் காத்திருப்பு போராட்டம் அறிவித்த விவசாயிகள்!

பயிர்க் கடன் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 14ம் தேதி காலை 9 மணி முதல் தஞ்சாவூர் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறும்

மீட்ட பணத்தை விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும். தகுதியானவர்கள் என்று கூறி நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களின் நகைகளை வழங்க வேண்டும் என்று பல கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் வரும் 14ம் தேதி தஞ்சையில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம் ரெட்டவயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், விவசாயிகளிடம் மோசடி செய்யப்பட்ட ரூ.40 லட்சத்தை விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், வரும் 14ம் தேதி தஞ்சாவூரில் கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: "தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் ரெட்டவயல் (டி-1472) தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், விவசாயிகள் பெற்ற கரும்பு பயிர்க் கடன் தள்ளுபடித் தொகை  ரூ.40 லட்சத்தை சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் வழங்காமல், சங்கச் செயலாளர் மோசடி செய்து விட்டார்.

இது குறித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு, மாவட்ட கலெக்டர்,  கூட்டுறவுத் துறை உயர் அதிகாரிகள் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து சங்கச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, பணம் மீட்கப்ப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அந்தப் பணம் விவசாயிகள் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. எனவே மீட்கப்பட்ட பணத்தை, சம்பந்தப்பட்ட விவசாயிகள் கணக்கில் வரவு வைக்க வேண்டும்.இதே போல், சில ஆண்டுகளுக்கு முன்பு, தள்ளுபடி செய்யப்பட்ட பயிர்க் கடன், கரும்பு விதைக்கான பணம் விவசாயிகளுக்கு வழங்காமல், மோசடி செய்துள்ளதாகவும் புகார்கள் உள்ளன. இது குறித்து, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் முழுமையாக விசாரணை நடத்த வேண்டும்.  

இதேபோல், குருவிக்கரம்பை (டி-1230) தொடக்க வேளாண் கடன் சங்கத்தில், தமிழக அரசு அறிவித்த 2020ம் ஆண்டுக்கான விவசாய நகைக் கடன் தள்ளுபடி திட்டத்தில், தகுதியுடைய விவசாயிகள் என்று கூட்டுறவு சங்க இணைப் பதிவாளரால் பரிந்துரை செய்யப்பட்டு, விவசாய நகைக் கடன் பெற்ற 39 விவசாயிகளுக்கு ஓராண்டு காலமாக நகைகளை திரும்ப வழங்காததை கண்டித்தும், இந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் பயிர்க் கடன் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 14ம் தேதி காலை 9 மணி முதல் தஞ்சாவூர் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறும்.

இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்பார்கள்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

 
 

தலைப்பு செய்திகள்

தஞ்சை பெரிய கோயில் பகுதியில் ரூ.25 கோடியில் மேம்பாட்டு பணிகள்: விரைவில் டெண்டர்: எம்.பி. முரசொலி மகிழ்ச்சி தகவல்
தஞ்சை பெரிய கோயில் பகுதியில் ரூ.25 கோடியில் மேம்பாட்டு பணிகள்: விரைவில் டெண்டர்: எம்.பி. முரசொலி மகிழ்ச்சி தகவல்
தஞ்சாவூருக்கு இன்று மதியம் துணை குடியரசுத் தலைவர் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் ஹெலிகாப்டரில் ஒத்திகை
தஞ்சாவூருக்கு இன்று மதியம் துணை குடியரசுத் தலைவர் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் ஹெலிகாப்டரில் ஒத்திகை
தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Embed widget