மேலும் அறிய

தஞ்சை: விவசாயிகளிடம் ரூ.40 லட்சம் மோசடி?! தொடர் காத்திருப்பு போராட்டம் அறிவித்த விவசாயிகள்!

பயிர்க் கடன் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 14ம் தேதி காலை 9 மணி முதல் தஞ்சாவூர் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறும்

மீட்ட பணத்தை விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும். தகுதியானவர்கள் என்று கூறி நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களின் நகைகளை வழங்க வேண்டும் என்று பல கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் வரும் 14ம் தேதி தஞ்சையில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம் ரெட்டவயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், விவசாயிகளிடம் மோசடி செய்யப்பட்ட ரூ.40 லட்சத்தை விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், வரும் 14ம் தேதி தஞ்சாவூரில் கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: "தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் ரெட்டவயல் (டி-1472) தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், விவசாயிகள் பெற்ற கரும்பு பயிர்க் கடன் தள்ளுபடித் தொகை  ரூ.40 லட்சத்தை சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் வழங்காமல், சங்கச் செயலாளர் மோசடி செய்து விட்டார்.

இது குறித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு, மாவட்ட கலெக்டர்,  கூட்டுறவுத் துறை உயர் அதிகாரிகள் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து சங்கச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, பணம் மீட்கப்ப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அந்தப் பணம் விவசாயிகள் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. எனவே மீட்கப்பட்ட பணத்தை, சம்பந்தப்பட்ட விவசாயிகள் கணக்கில் வரவு வைக்க வேண்டும்.இதே போல், சில ஆண்டுகளுக்கு முன்பு, தள்ளுபடி செய்யப்பட்ட பயிர்க் கடன், கரும்பு விதைக்கான பணம் விவசாயிகளுக்கு வழங்காமல், மோசடி செய்துள்ளதாகவும் புகார்கள் உள்ளன. இது குறித்து, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் முழுமையாக விசாரணை நடத்த வேண்டும்.  

இதேபோல், குருவிக்கரம்பை (டி-1230) தொடக்க வேளாண் கடன் சங்கத்தில், தமிழக அரசு அறிவித்த 2020ம் ஆண்டுக்கான விவசாய நகைக் கடன் தள்ளுபடி திட்டத்தில், தகுதியுடைய விவசாயிகள் என்று கூட்டுறவு சங்க இணைப் பதிவாளரால் பரிந்துரை செய்யப்பட்டு, விவசாய நகைக் கடன் பெற்ற 39 விவசாயிகளுக்கு ஓராண்டு காலமாக நகைகளை திரும்ப வழங்காததை கண்டித்தும், இந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் பயிர்க் கடன் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 14ம் தேதி காலை 9 மணி முதல் தஞ்சாவூர் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறும்.

இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்பார்கள்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 RCB vs GT: சீறிய சிராஜ்! காப்பாற்றிய லிவிங்ஸ்டன், ஜிதேஷ், டேவிட்! 170 ரன்களை அடிக்குமா குஜராத்?
IPL 2025 RCB vs GT: சீறிய சிராஜ்! காப்பாற்றிய லிவிங்ஸ்டன், ஜிதேஷ், டேவிட்! 170 ரன்களை அடிக்குமா குஜராத்?
நித்தியானந்தா உயிரோடு இருக்கிறாரா? நாளை உடையும் உண்மை! வெளியான முக்கிய அறிவிப்பு!
நித்தியானந்தா உயிரோடு இருக்கிறாரா? நாளை உடையும் உண்மை! வெளியான முக்கிய அறிவிப்பு!
வீட்டைவிட்டு வெளியே வராதீங்க! இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு!
வீட்டைவிட்டு வெளியே வராதீங்க! இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு!
Stalin Vs EPS: ஏங்க.. நாங்க பண்றது இருக்கட்டும், நீங்க என்ன பண்ணீங்க.? இபிஎஸ்-ஐ வெளுத்த ஸ்டாலின்...
ஏங்க.. நாங்க பண்றது இருக்கட்டும், நீங்க என்ன பண்ணீங்க.? இபிஎஸ்-ஐ வெளுத்த ஸ்டாலின்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தங்கை ஆணவக்கொலை?அண்ணன் செய்த கொடூரம் நாடகம் ஆடிய குடும்பம்BJP Posters In Ramanathapuram: ”அதிமுக கூட்டணி வேண்டாம் அண்ணாமலையே போதும்” பாஜக போஸ்டரால் பரபரப்புAnnamalai BJP: தேசிய அரசியலில் அண்ணாமலை.. மாநில அரசியலுக்கு ஆப்பு? சீனியர்ஸ் பக்கா ஸ்கெட்ச்Irfan Controversy | சமாதான கொடி தூக்கிய இர்பான் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்” ESCAPE ஆகுறது வேலையா”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 RCB vs GT: சீறிய சிராஜ்! காப்பாற்றிய லிவிங்ஸ்டன், ஜிதேஷ், டேவிட்! 170 ரன்களை அடிக்குமா குஜராத்?
IPL 2025 RCB vs GT: சீறிய சிராஜ்! காப்பாற்றிய லிவிங்ஸ்டன், ஜிதேஷ், டேவிட்! 170 ரன்களை அடிக்குமா குஜராத்?
நித்தியானந்தா உயிரோடு இருக்கிறாரா? நாளை உடையும் உண்மை! வெளியான முக்கிய அறிவிப்பு!
நித்தியானந்தா உயிரோடு இருக்கிறாரா? நாளை உடையும் உண்மை! வெளியான முக்கிய அறிவிப்பு!
வீட்டைவிட்டு வெளியே வராதீங்க! இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு!
வீட்டைவிட்டு வெளியே வராதீங்க! இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு!
Stalin Vs EPS: ஏங்க.. நாங்க பண்றது இருக்கட்டும், நீங்க என்ன பண்ணீங்க.? இபிஎஸ்-ஐ வெளுத்த ஸ்டாலின்...
ஏங்க.. நாங்க பண்றது இருக்கட்டும், நீங்க என்ன பண்ணீங்க.? இபிஎஸ்-ஐ வெளுத்த ஸ்டாலின்...
BJP TN New Leader: பாஜக தமிழ்நாடு புதிய தலைவர் யார்.? ரேஸில் குதித்த கருப்பு முருகானந்தம்.. புதிய அப்டேட்...
பாஜக தமிழ்நாடு புதிய தலைவர் யார்.? ரேஸில் குதித்த கருப்பு முருகானந்தம்.. புதிய அப்டேட்...
கூப்பிட்றப்ப எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணனும்.. இன்ஸ்டா பிரபலத்துக்கு நிகழ்ந்த கொடுமையை பாருங்க
கூப்பிட்றப்ப எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணனும்.. இன்ஸ்டா பிரபலத்துக்கு நிகழ்ந்த கொடுமையை பாருங்க
TNPSC: மாஸ் காட்டும் டிஎன்பிஎஸ்சி; 3 மாதங்களில் 7557 பேர் செலக்ட்- ஜெட் வேகத்தில் செய்த சீர்திருத்தங்கள் தெரியுமா?
TNPSC: மாஸ் காட்டும் டிஎன்பிஎஸ்சி; 3 மாதங்களில் 7557 பேர் செலக்ட்- ஜெட் வேகத்தில் செய்த சீர்திருத்தங்கள் தெரியுமா?
Irfan Controversy: மனுஷனாவும் இல்ல..! இஸ்லாத்தையும் மதிக்கில - காசுக்காக அலையும் இர்ஃபான் - வேடிக்கை பார்க்கும் அரசு
Irfan Controversy: மனுஷனாவும் இல்ல..! இஸ்லாத்தையும் மதிக்கில - காசுக்காக அலையும் இர்ஃபான் - வேடிக்கை பார்க்கும் அரசு
Embed widget