மேலும் அறிய

நாகை மீனவர்களை இரும்பு பைப்பை கொண்டு தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்

புஷ்பவனம் மீனவர்களை வீச்சருவாளின் பின்புறத்தால் தாக்கி ரூ 4 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் ஜிபிஎஸ்கருவி பேட்டரி ஆகியவற்றை பறித்து கொண்டு இலங்கை கடற்கொள்ளையர்கள மீனவர்களை விரட்டியடித்தனர்

நாகை மாவட்டம்,  கோடியக்கரை அருகே கிழக்கே  நடுக்கடலில் இரண்டு படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 11 புஷ்பவனம் மீனவர்களை ரப்பர்கட்டை, இரும்புபைப் வீச்சருவாளின் பின்புறத்தால் தாக்கி 4 லட்சம் மதிப்புள்ள  மீன்பிடி வலைகள் ஜிபிஎஸ்கருவி பேட்டரி ஆகியவற்றை பறித்து கொண்டு இலங்கை கடற்கொள்ளையர்கள மீனவர்களை விரட்டியடித்ததாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாகை மீனவர்களை இரும்பு பைப்பை கொண்டு தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்
 
நாகை மாவட்டத்தில் உள்ள 27 மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் கடலுக்குச் சென்று பிடித்து வரும் மீன்களை விற்பனை செய்வது வழக்கம். வழக்கம்போல புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த நாகமணி என்பவருடைய பைபர் படகில் பன்னீர்செல்வம் நாகமுத்து ராசேந்திரன் ஆகிய மூன்று மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க சென்று  உள்ளனர்.இவர்கள் நேற்று இரவு   நடுக்கடலில் வலையை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அதிவேக என்ஜின் பொருத்தப்பட்ட படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 3 பேர்; படகில் ஏறி புஷ்பவனம்; மீனவர்களை ரப்பர்கட்டை, இரும்புபைப் மற்றும் வீச்சருவாளின் பின்புறத்தால் தாக்கினர்.

நாகை மீனவர்களை இரும்பு பைப்பை கொண்டு தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்
 
300 கிலோ எடையுள்ள மீன்பிடி வலைகளை அறுத்துக் கொண்டு ஜிபிஎஸ் கருவி, பேட்டரி, கடலில் மீன்இருக்கும் இடத்தை காண்பிக்;கும் கருவி பறித்துக்கொண்டு, படகில் இருந்து டீசல் கேன்களை கடலில் தூக்கி வீசிவிட்டு மூன்று மீனவர்களையும் இலங்கை கடற்கொள்ளையர்கள் விரட்டி அடித்தனர். காயமடைந்த மூன்று மீனவர்களும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  மேலும் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ், உதயகுமார், தமிழ்ச்செல்வன், புவனேஸ்வரன், ஜெகதீஸ்வரன், கபிலன், சுகன், ஹாரூன் ஆகிய 8 மீனவர்கள் மீது நான்கு படகுகளில் வந்த 9 இலங்கை கடற் கொள்ளையர்கள் படகை சூழ்ந்துகொண்டு வீச்சருவாள் கட்டை போன்ற ஆயுதங்களால் மீனவர்களை தாக்கி மீன்பிடி வலைகள் ஜிபிஎஸ் கருவி உள்ளிட்ட பொருட்களை பறித்துக் கொண்டு விரட்டி அடித்தனர்.உடைமைகளை பறிகொடுத்து ஆபத்தின் விளிம்பில் இருந்து தப்பித்து வந்த புஷ்பவனம் மீனவர்கள் பஞ்சாயத்தார் மற்றும் மீன்வளத் துறையின் இடம் இது குறித்து புகார் தெரிவித்தனர்.
 

நாகை மீனவர்களை இரும்பு பைப்பை கொண்டு தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்
இச்சம்பவம் குறித்து கடலோர காவல் குழும போலீசாரும் மீன்வளத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மீனவர்களை வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஒ.எஸ்.மணியன் எம்எல்ஏ தெரிவித்தது. மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை நடுக்கடலில் இலங்கை கடற்கொள்ளை தாக்கி உடமைகளை பறித்து செல்லும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த சம்பவங்களை தடுத்து நிறுத்த மத்திய மாநில அரசுகள்  நிரந்தர தீர்வு காண வேண்டும். 
நாகை மீனவர்களை இரும்பு பைப்பை கொண்டு தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்
 
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கை அரசுடன் பேசி இந்த சம்பவங்கள் நடைபெறுவதை தடுத்து நிறுத்த வேண்டும். இந்திய எல்லையில் இந்திய கப்பற்படை மூலம் மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் மத்திய மாநில அரசுகள் உடனடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படை தன்மையை தெரிவிக்க வேண்டும் என முன்னாள் அதிமுக அமைச்சரும் வேதாரணியம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Election Commission: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Top 5 Cars India: டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
ABP Premium

வீடியோ

LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Election Commission: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Top 5 Cars India: டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Embed widget