மேலும் அறிய

திருவாரூரில் 25 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கப்பட்ட சிறப்பு ரயில் - பயணிகள் உற்சாக வரவேற்பு

ரயில்வே அறிவிப்பின்படி நேற்று முன்தினம் இரவு செகந்திரபாத்தில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு காலை வந்தடைந்தது. இதனையடுத்து சென்னையில் இருந்து  9.45 மணிக்கு புறப்பட்டு திருவாரூருக்கு மதியம் 3.15க்கு வந்தது.

25 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் இருந்து திருவாரூர் வழியாக ராமேஸ்வரத்திற்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயிலுக்கு பயணிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழகத்தில் மிகவும் பழமையான மீட்டர்கேஜ் பாதையாக சென்னை-காரைக்குடி-ராமேஸ்வரம் வழி பாதையாக இருந்தது. இந்த வழிபாதையில் ராமேஸ்வரம், காரைக்குடி வரையில் ஜனதா, கம்பன் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த வழிபாதை அகல ரயில் பாதை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு செகந்திரபாத்திலிருந்து சென்னை, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, காரைக்குடி வழியாக ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில் இயங்கப்பட உள்ளதாக ரயில்வேதுறை அறிவித்தது. அந்த ரயில் வியாழன் தோறும் காலை 9.45 மணிக்கு சென்னை எக்மோரில் புறப்பட்டு திருவாரூர் 3.15 மணிக்கு வந்து சேர்கிறது. பின்பு 3.25-க்கு திருவாரூரில் இருந்து புறப்பட்டு ராமேஸ்வரத்திற்கு இரவு 11.40-க்கு சென்றடைகிறது. மறுநாள் வெள்ளிக்கிழமை ராமேஸ்வரத்தில் 8.50 மணிக்கு புறப்பட்டு திருவாரூர் மதியம் 3.15 மணிக்கு வந்து, அங்கிருந்து 3.25-க்கு புறப்பட்டு சென்னைக்கு இரவு 9.50-க்கு சேர்கிறது.  பின்னர் செகந்தராபாத்க்கு பயணத்தை தொடர்கிறது. 


திருவாரூரில் 25 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கப்பட்ட சிறப்பு ரயில் - பயணிகள் உற்சாக வரவேற்பு

இந்த சிறப்பு ரெயில் அறிவிப்பு பயணிகள் இடையே வரவேற்பையும், மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ரயில்வே துறையின் அறிவிப்பின்படி நேற்று முன்தினம் இரவு செகந்திரபாத்தில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு காலை வந்தடைந்தது. இதனையடுத்து சென்னையில் இருந்து  9.45 மணிக்கு புறபட்டு திருவாரூருக்கு மதியம் 3.15 மணிக்கு வந்தது. இந்த சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு திருவாரூர் ரயில் உபயோகிப்போர் சங்க செயலாளர் பாஸ்கரன், துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் பாரதி, இலியாஸ், அக்பர் பாட்ஷா ஆகியோர் இனிப்புகள் வழங்கி வரவேற்பு அளித்தனர். இதில் திருச்சி கோட்ட இயக்குதல் மேலாளர் வெங்கட்டராகவன் கலந்து கொண்டார். ரயில் உபயோகிப்போர் சங்க செயலாளர் பாஸ்கரன் கூறுகையில், செகந்திராபாத்- சென்னை-திருவாரூர்-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. பஸ் பயணத்தை விட பயண நேரமும், கட்டணமும் குறைந்த அளவில் சிறப்பு ரயில் மூலம் கிடைப்பதால் மிகுந்த பயனை பயணிகளுக்கு அளிக்கும். இந்த வழிதடத்தில் தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும் என்றார்.


திருவாரூரில் 25 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கப்பட்ட சிறப்பு ரயில் - பயணிகள் உற்சாக வரவேற்பு

மேலும் அவர் கூறுகையில், திருவாரூர் ரயில் நிலையம் முன்மாதிரி ரயில் நிலையமாக அறிவிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை ஏடிஎம் வசதி,  தொடுதிரை வசதி,  முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளை அழைத்துச் செல்ல வாகனம், உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் இருப்பது பயணிகளிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பலமுறை ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் ஒரு சில வசதிகளை தவிர பிரதான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. குறிப்பாக திருவாரூரில் இருந்து மதுரை மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்வதற்கு ரயில் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம் ஆனால் அந்த ரயில் வசதியும் இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது உடனடியாக மத்திய அரசு ரயில்வே துறை ரயில் வசதிகளை அதிகப்படுத்தி தர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுகிறோம் என தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

கண்ணீர் வடிக்கும் காவிரி டெல்டா: குறுவை சாகுபடி கைநழுவுகிறது; சம்பா சாகுபடியாவது தப்புமா?
கண்ணீர் வடிக்கும் காவிரி டெல்டா: குறுவை சாகுபடி கைநழுவுகிறது; சம்பா சாகுபடியாவது தப்புமா?
92-வது ஆண்டு '27 கருட சேவை' வைபவம்… ஒரே இடத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்: எங்கு தெரியுங்களா?
92-வது ஆண்டு '27 கருட சேவை' வைபவம்… ஒரே இடத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்: எங்கு தெரியுங்களா?
திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் குரு பெயர்ச்சி சிறப்பு பரிகார ஹோமம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!
திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் குரு பெயர்ச்சி சிறப்பு பரிகார ஹோமம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!
400 ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரம்! ஆசியாவின் மிகப்பெரிய திருப்பாலைத்துறை நெற்களஞ்சியம் 
400 ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரம்! ஆசியாவின் மிகப்பெரிய திருப்பாலைத்துறை நெற்களஞ்சியம் 

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cooking Gas Price Hike : காலையிலேயே ஷாக்.! அதிரடியாக உயர்ந்தது வீட்டு சமையல் சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
காலையிலேயே ஷாக்.! அதிரடியாக உயர்ந்தது வீட்டு சமையல் சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
Senthil Balaji: நள்ளிரவில் திமுக ஷாக்..! செந்தில் பாலாஜி வழக்கு, அமலாக்கத்துறைக்கு ஓகே சொன்ன ஆளுநர்?
Senthil Balaji: நள்ளிரவில் திமுக ஷாக்..! செந்தில் பாலாஜி வழக்கு, அமலாக்கத்துறைக்கு ஓகே சொன்ன ஆளுநர்?
TN Weather Update: இடி, மின்னல் மிரட்ட..! 14 மாவட்டங்களில் இன்று கனமழை, சென்னை? தமிழக வானிலை வார்னிங்
இடி, மின்னல் மிரட்ட..! 14 மாவட்டங்களில் இன்று கனமழை, சென்னை? தமிழக வானிலை வார்னிங்
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
1 லட்சம் மாத்திரைகள் பறிமுதல்- போதைப்பொருள் விற்பனை- 79 பேர் குண்டர் சட்டத்தில் கைது- எங்கே தெரியுமா?
1 லட்சம் மாத்திரைகள் பறிமுதல்- போதைப்பொருள் விற்பனை- 79 பேர் குண்டர் சட்டத்தில் கைது- எங்கே தெரியுமா?
CPI Mutharasan : தவெகவுக்கு கொள்கை கோட்பாடு என ஒரு கத்திரிக்காயும், மண்ணாங்கட்டியும் இல்லை- வெளுத்தெடுத்த முத்தரசன்
தவெகவுக்கு கொள்கை கோட்பாடு என ஒரு கத்திரிக்காயும், மண்ணாங்கட்டியும் இல்லை- வெளுத்தெடுத்த முத்தரசன்
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
Trump Vs Mojtaba: மொஜ்தபா கமேனியை சந்திப்பாரா ட்ரம்ப்.? உண்மையை போட்டு உடைத்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி
மொஜ்தபா கமேனியை சந்திப்பாரா ட்ரம்ப்.? உண்மையை போட்டு உடைத்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி
Embed widget