மேலும் அறிய

ரேஷன் அரிசி கடத்தினால் கைது மட்டும் இல்லை... குண்டர் சட்டமும் பாயும்!

அத்தியாவசியப் பொருட்களை சட்டவிரோதமாக கடத்துதல், பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

தஞ்சாவூர்: ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும். கடத்தல், பதுக்கல், கள்ளச்சந்தை விற்பனைக்கு எதிராக தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. இதுகுறித்து புகார் அளிக்க பொதுமக்களுக்கு இலவச உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு அரசால் மானிய விலையில் வழங்கப்படும் ரேஷன் அரிசி, பருப்பு, வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை சட்டவிரோதமாக கடத்துதல், பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தஞ்சாவூர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரி ஜெகதீஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், தொடர்ந்து குற்றங்களில் ஈடுபடுவோரின் சொத்துக்களையும் பறிமுதல் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு

பொதுமக்களின் நலனுக்காக அரசு வழங்கும் ரேஷன் பொருட்கள் முறைகேடாக வேறு வழிகளில் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.

மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரியும், காவல் ஆய்வாளருமான ஜெகதீஸ்வரன் தலைமையில் சிறப்பு காவல் குழுக்கள் பல்வேறு இடங்களில் திடீர் சோதனைகளை நடத்தி வருகின்றன.

அதிரடி ஆய்வில் அதிகாரிகள்

அதிகாரிகள் ரேஷன் கடைகள், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், நெல் சேமிப்பு கிடங்குகள், பெட்ரோல் மற்றும் டீசல் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதுமட்டுமல்லாமல், இரவு நேரங்களிலும் சிறப்பு ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சட்டவிரோதமாக கடத்தப்படும் ரேஷன் அரிசி மற்றும் பதுக்கி வைக்கப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் பொதுமக்களுக்கு உரிய முறையில் சென்றடைவதை உறுதி செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடுமையான சட்ட நடவடிக்கை

இதுகுறித்து மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர் ஜெகதீஸ்வரன் கூறுகையில், "ரேஷன் பொருட்களை சட்டவிரோதமாக கடத்துதல், பதுக்குதல் அல்லது கள்ளச்சந்தையில் விற்பனை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது பொருட்களின் அளவுக்கு ஏற்ப வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் மற்றும் கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தொடர்ந்து இதே குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். தேவையானால் அவர்களின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும்," என்று எச்சரித்தார்.

பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்

ரேஷன் பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் எளிதாக தெரிவிக்கும்படி, மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், முக்கிய சந்தைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இலவச புகார் எண் இடம்பெற்ற விழிப்புணர்வு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

ரேஷன் அரிசி கடத்தல், சிலிண்டர் பதுக்கல் அல்லது இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் குறித்து தகவல் தெரிந்தால், பொதுமக்கள் 1800 599 5950 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புகார் அளிப்பவர்களின் விவரம் ரகசியம்

பொதுமக்கள் அளிக்கும் அனைத்து புகார்களும் முழுமையான ரகசியத்துடன் கையாளப்படும் என்றும், தகவல் அளிப்பவர்களின் அடையாளம் எந்த நிலையிலும் வெளியிடப்படாது என்றும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை உறுதியளித்துள்ளது.

இதன் மூலம் பொதுமக்கள் அச்சமின்றி சட்டவிரோத செயல்கள் குறித்து தகவல் வழங்க முன்வர வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். அரசின் மானியப் பொருட்கள் மக்களுக்கே சென்றடைய வேண்டும். அரசு மானியத்தில் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் உண்மையான பயனாளிகளுக்கே சென்றடைய வேண்டும் என்பதே இந்த நடவடிக்கைகளின் முக்கிய நோக்கமாகும்.

எனவே, ரேஷன் பொருட்களை முறைகேடாக பயன்படுத்துபவர்கள் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொதுமக்களின் ஒத்துழைப்புடன் இந்த சட்டவிரோத செயல்களை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

தென் மாவட்ட ரயில்களில் பாதுகாப்பு குறைவு? அச்சத்துடன் பயணிப்பதாக குற்றச்சாட்டு
தென் மாவட்ட ரயில்களில் பாதுகாப்பு குறைவு? அச்சத்துடன் பயணிப்பதாக குற்றச்சாட்டு
ஜூலை 31-க்குள் பயிர் காப்பீடு செய்யுங்கள்.. விவசாயிகளுக்கு தஞ்சை கலெக்டர் அழைப்பு
ஜூலை 31-க்குள் பயிர் காப்பீடு செய்யுங்கள்.. விவசாயிகளுக்கு தஞ்சை கலெக்டர் அழைப்பு
குடிநீர் இணைப்பில் மோட்டார்... தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ரேவதியின் கடும் எச்சரிக்கை
குடிநீர் இணைப்பில் மோட்டார்... தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ரேவதியின் கடும் எச்சரிக்கை
பலருக்கு மறுவாழ்வு அளித்த சுரேந்தரின் மனிதநேயம்: மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்
பலருக்கு மறுவாழ்வு அளித்த சுரேந்தரின் மனிதநேயம்: மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Covai Madurai Metro: கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
MBBS Apply: டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
TN Weather News: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Maruti Grand Vitara: மலிவான, வலுவான ஹைப்ரிட் கார் - க்ராண்ட் விட்டாராவின் குறைகள் என்ன? மாற்றுகள், யாருக்கு செட் ஆகாது?
மலிவான, வலுவான ஹைப்ரிட் கார் - க்ராண்ட் விட்டாராவின் குறைகள் என்ன? மாற்றுகள், யாருக்கு செட் ஆகாது?
Education Minister: புதிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி படித்தது என்ன? - கல்வித் தகுதி விவரங்கள் - புதிய சவால்கள்
புதிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி படித்தது என்ன? - கல்வித் தகுதி விவரங்கள் - புதிய சவால்கள்
TASMAC bars : தவெக அரசின் அடுத்த அதிரடி.! டாஸ்மாக் பார்களை டெண்டர் எடுக்க புது ரூல்ஸ்- என்னென்ன தெரியுமா.?
தவெக அரசின் அடுத்த அதிரடி.! டாஸ்மாக் பார்களை டெண்டர் எடுக்க புது ரூல்ஸ்- என்னென்ன தெரியுமா.?
CM Vijay Office: உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
MK Stalin: “கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
“கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
Embed widget