மேலும் அறிய

தஞ்சாவூர்: மூடப்பட்ட மேட்டூர் அணை - காயும் சம்பா நெற்பயிர்கள்

மேட்டூர் அணை மூடப்பட்டதால் கல்லணை கால்வாயில் தண்ணீர் வருவதும் நின்றுவிட்டது. இதனால், இப்பகுதிகளில் சம்பா, தாளடி பருவ நெற்பயிர்கள் காய்ந்து வருகின்றன.

மேட்டூர் அணை வழக்கம்போல ஜனவரி 28ஆம் தேதி மூடப்பட்டது என்றாலும், டெல்டா மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பின்பட்ட சம்பா, தாளடி சாகுபடி நடைபெறுகிறது.  கடந்த ஜனவரி மாதம் விதை தெளித்து, நாற்றுக்களை பறித்து வயல்களில் நடவு செய்துள்ளனர். இவற்றில் பெரும்பாலும் அறுவடைக்கு தயாராகிவரும் நிலையில் உள்ளன.

இந்நிலையில், தஞ்சாவூர் அருகே மானோஜிப்பட்டி, வண்ணாரப்பேட்டை, சித்திரக்குடி, ஆலக்குடி உள்பட பல்வேறு கிராமங்களில் கல்லணை கால்வாய் தண்ணீரை நம்பி பல நூற்றுக்கணக்கான ஏக்கரில் சம்பா, தாளடி பருவ நெற்பயிர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது பயிர்கள் கதிர் விட்டு, 20 நாள்களில் அறுவடை செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. மேட்டூர் அணை மூடப்பட்டதால் கல்லணைக் கால்வாயில் தண்ணீர் வருவதும் நின்றுவிட்டது. இதனால், இப்பகுதிகளில் சம்பா, தாளடி பருவ நெற்பயிர்கள் காய்ந்து வருகின்றன. இதனால், விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.


தஞ்சாவூர்: மூடப்பட்ட மேட்டூர் அணை - காயும் சம்பா நெற்பயிர்கள்

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், “ஏற்கனவே நவம்பர் மாதத்தில் பெய்த தொடர் மழையால் பல ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. அதிலிருந்து மீண்டு வந்து மறு நடவு செய்தோம். நடவு செய்யப்பட்ட சம்பா, தாளடி பயிர்கள் அனைத்தும் பால் பருவம் எனும் சூல் பருவத்தில் இருப்பதால், பெரும்பாலான பயிர்கள் தற்போது சம்பா, தாளடி பயிர்கள் அறுவடைக்குத் தயார் நிலையில் உள்ளன.

விவசாயிகள் கல்லணை கால்வாய் தண்ணீரை நம்பி சாகுபடி செய்துள்ள இந்த நேரத்தில் மேட்டூர் அணை மூடப்பட்டதால், தண்ணீரின்றி பயிர்கள் காய்ந்துவருகின்றன. இதனால்,  கதிர்களில் உள்ள நெல் மணிகள் வீணாகிவிடும் அபாய நிலை உள்ளது. தற்போது தண்ணீர் இல்லாததால், சாகுபடி செய்யப்பட்ட நெற்கதிர்களை என்ன செய்வது என தெரியவில்லை.  


தஞ்சாவூர்: மூடப்பட்ட மேட்டூர் அணை - காயும் சம்பா நெற்பயிர்கள்

மின் மோட்டார், இலவச மோட்டார் வைத்திருப்பவர்களிடம் வாடகைக்கு தண்ணீர் வாங்கி நெற்பயிருக்கு பாய்ச்சினாலும், அவர்களுக்கு தண்ணீர் தேவை என்பதால், வயல்களில் தண்ணீர் விடுவது சிரமமாகியுள்ளது. நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளதால், சில மோட்டார்களில் தண்ணீர் சொற்ப அளவில்தான் வருகிறது.

சம்பா, தாளடி பயிர்களை சாகுபடி செய்வதற்காக நகைகளை அடகு வைத்தும், வெளியில் கடன்களை வாங்கியம் சாகுபடி செய்துள்ள நிலையில், போதுமான தண்ணீர் இல்லாததால், அனைத்தும் வீணாகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் நிலையை உணர்ந்து மேட்டூர் அணையை 15 நாள்களுக்கு திறந்து, கல்லணைக் கால்வாயில் தண்ணீர் விட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், தவறும் பட்சத்தில் பல நுாற்றுக்கணகாகன ஏக்கரில் சாகுபடிசெய்த நெற்பயிர்களின் நிலை கேள்வி குறியாகும்” என்றனர்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.!  தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.! தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.!  தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.! தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Top 10 News Headlines: ஸ்டாலின் அட்வைஸ், இந்தியா வரும் ஜெலன்ஸ்கி, அத்துமீறிய பேராசிரியர்கள்  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ஸ்டாலின் அட்வைஸ், இந்தியா வரும் ஜெலன்ஸ்கி, அத்துமீறிய பேராசிரியர்கள் - 11 மணி வரை இன்று
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
அறை எண் 305 ஞாபகம் இருக்கா... பிளாஷ்பேக்கை சொல்லி நாஞ்சில் சம்பத்தை கதறவிடும் திமுக நிர்வாகி
அறை எண் 305 ஞாபகம் இருக்கா... பிளாஷ்பேக்கை சொல்லி நாஞ்சில் சம்பத்தை கதறவிடும் திமுக நிர்வாகி
Embed widget