மேலும் அறிய

மயிலாடுதுறை நகராட்சிக்கு எதிராக சாலை மறியல் - குப்பைகளை காவிரி ஆற்றில் கொட்டுவதாக புகார்

மயிலாடுதுறை நகராட்சி சார்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை, புறநகர் பகுதிகளில் காவிரி ஆற்றின் கரை ஓரத்தில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இங்கு வீடுகள், அலுவலகம், நிறுவனங்கள், கடைகள் என பல்வேறு வகைகளில் சேரும் குப்பைகளை மயிலாடுதுறை நகராட்சி சார்பில் சேகரிக்கப்படுகிறது. அவ்வாறு சேகரிக்கும் குப்பைகளை மயிலாடுதுறை அருகே ஆனந்ததாண்டவபுரம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள குப்பைக்கிடங்கில் கொட்டி, மறுசுழற்சி செய்வது வழக்கம். 


மயிலாடுதுறை நகராட்சிக்கு எதிராக சாலை மறியல் - குப்பைகளை காவிரி ஆற்றில் கொட்டுவதாக புகார்

அவ்வாறு செய்யும் வேலையில் அவ்வப்போது இந்த குப்பை கிடங்கில் தீ பற்றி எரிந்து சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் புகைமண்டலம் மாறி அப்பகுதி மக்களுக்கு சுவாச கோளாறுகளை ஏற்படுத்தி வருகிறது. மேலும் குடியிருப்புகள் மத்தியில் உள்ள இந்த குப்பை கிடங்கை வேறோரு இடத்திற்கு மாற்ற கோரி அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர். இருந்தபோதிலும் அந்த குப்பை கிடங்கு தொடர்ந்து அங்கேயே செயல்பாடு வருகிறது.


மயிலாடுதுறை நகராட்சிக்கு எதிராக சாலை மறியல் - குப்பைகளை காவிரி ஆற்றில் கொட்டுவதாக புகார்

இந்நிலையில் தற்போது வழக்கமாக குப்பைகளை சேமிக்கும் இந்த குப்பைக்கிடங்கு முழுவதுமாக நிரம்பி விட்ட காரணத்தால் கடந்த பல மாதங்களாக நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை அந்தந்த பகுதிகளில் கொட்டி கொளுத்துவதும், புறநகர் பகுதிகளில் கொட்டிவிட்டு செல்வதும் வாடிக்கையாகிவிட்டது.  இந்த சூழலில்  மயிலாடுதுறை இருந்து  மாப்படுகை செல்லும் சாலையில் கிட்டப்பா பாலம் காவிரி ஆற்றின் ஓரத்தில் கடந்த ஓராண்டாக நகராட்சி நிர்வாகத்தினர் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். 


மயிலாடுதுறை நகராட்சிக்கு எதிராக சாலை மறியல் - குப்பைகளை காவிரி ஆற்றில் கொட்டுவதாக புகார்

இதனால் அப்பகுதி மக்களுக்கு பல்வேறு சுகாதார பாதிப்புகள் ஏற்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் ஏற்கனவே ஒருமுறை சாலைமறியல் போராட்டம் நடத்தினர். அதனைத் அடுத்து குப்பைகளை இனி கொட்ட மாட்டோம் என நகராட்சி நிர்வாகத்தினர் உறுதி அளித்திருந்தனர். ஆனாலும் அதன் பின்னரும் தொடர்ந்து குப்பைகளைக் கொட்டி வந்தனர். இதுகுறித்து நான்கு நாட்களுக்கு முன்பு நகராட்சி நிர்வாகத்தில் புகார் மனு அளித்தும் குப்பைகள் கொட்டப்படுவது நிறுத்தப்படாததால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரைராஜ் தலைமையில், பல்வேறு அமைப்பினரும், பொதுமக்களும் இணைந்து மயிலாடுதுறை மாப்படுகை சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


மயிலாடுதுறை நகராட்சிக்கு எதிராக சாலை மறியல் - குப்பைகளை காவிரி ஆற்றில் கொட்டுவதாக புகார்

மேலும் அவர்கள்  நகராட்சி ஆணையர் நேரில் வந்து குப்பைகளை கொட்ட மாட்டோம் என எழுத்து பூர்வமாக  உறுதி அளிக்க வேண்டும் அதுவரை சாலை மறியல் போராட்டத்தை கைவிட மாட்டோம் என தெரிவித்தனர். இதனை அடுத்து அங்கு விரைந்த நகராட்சி ஆணையர் இனி வரும் காலங்களில் அங்கு குப்பைகளை கொட்டாமல் நடவடிக்கை எடுப்பதாகவும், தற்போது கொட்டப்பட்டுள்ள குப்பைகளை 10 நாட்களுக்குள் அகற்றி அந்த இடத்தை சுத்தம் செய்து சாலையில் மின் விளக்கு அமைத்து தருவதாக எழுத்து பூர்வமாக உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எங்க சார் எங்களுக்கு வேணும்; இல்லனா நாங்க ஸ்கூலுக்கு வரமாட்டோம்: தர்ணாவில் மாணவ, மாணவிகள்
எங்க சார் எங்களுக்கு வேணும்; இல்லனா நாங்க ஸ்கூலுக்கு வரமாட்டோம்: தர்ணாவில் மாணவ, மாணவிகள்
Breaking News LIVE:  ‘நீங்கள் நலமா’ திட்டம் : பயனாளிகள் கருத்தைக் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: ‘நீங்கள் நலமா’ திட்டம் : பயனாளிகள் கருத்தைக் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
ஆடி கார் விபத்து; இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனம்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
ஆடி கார் விபத்து; இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனம்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Cadre Murder  : EPS ஆதரவாளர் படு கொலை! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! பதற்றத்தில் சேலம்!Salem Jail Prisoners  : கைதிகளின் கைவண்ணம் மாளிகையான சேலம் ஜெயில்! ஜம்முனு இருங்க..Rahul Gandhi Slams Rajnath Singh : ”எங்கப்பா 1 கோடி? பொய் சொன்ன ராஜ்நாத் சிங்?World Records : 550 மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை..ஸ்ரீ ராமச்சந்திரா குழுமம் உலக சாதனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எங்க சார் எங்களுக்கு வேணும்; இல்லனா நாங்க ஸ்கூலுக்கு வரமாட்டோம்: தர்ணாவில் மாணவ, மாணவிகள்
எங்க சார் எங்களுக்கு வேணும்; இல்லனா நாங்க ஸ்கூலுக்கு வரமாட்டோம்: தர்ணாவில் மாணவ, மாணவிகள்
Breaking News LIVE:  ‘நீங்கள் நலமா’ திட்டம் : பயனாளிகள் கருத்தைக் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: ‘நீங்கள் நலமா’ திட்டம் : பயனாளிகள் கருத்தைக் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
ஆடி கார் விபத்து; இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனம்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
ஆடி கார் விபத்து; இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனம்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
Crime: மகளை ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் ஆத்திரம்: வாலிபரை கூலிப்படை வைத்து படுகொலை செய்த தந்தை!
Crime: மகளை ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் ஆத்திரம்: வாலிபரை கூலிப்படை வைத்து படுகொலை செய்த தந்தை!
2026ல் அண்ணாமலை முதல்வராவது நிச்சயம் - மடாதிபதி ஸ்ரீ சுந்தரவடிவேல் சுவாமிகள் பேட்டி
2026ல் அண்ணாமலை முதல்வராவது நிச்சயம் - மடாதிபதி ஸ்ரீ சுந்தரவடிவேல் சுவாமிகள் பேட்டி
Salem Prison: சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
Embed widget