மேலும் அறிய

ஆற்றில் மிதக்கும் ரூ.31 கோடி; இனிமேலாவது வருமா ஆற்றுப்பாலம்!

சீர்காழி அருகே இணைப்பு சாலை அமைக்காததால் 31 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாலம் அந்தரத்தில் பயன்பாடு  இன்றி மிதந்து வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள துறைமுக கிராமமான பழையார் முதல் கீழமூவர்கரை கிராமம் வரை மீனவர் கிராமங்களை இணைக்கும் இணைப்புச்சாலை திட்டம் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. அதனைத் தொடர்ந்து பழையாறு முதல் கொட்டாயமேடு வரை சாலை அமைக்கபட்டது. மேலும் திருமுல்லைவாசல் கிராமத்தில் இருந்து கீழமூவர்கரை கிராமத்தை இணைக்க திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் கடலுடன் இணையும்  உப்பனாற்றில் பாலம் தேவைபட்டத்து, அதனையடுத்து  திருமுல்லைவாசல்  கிராமத்தில் உள்ள உப்பனாற்றில்  31 கோடியே 44 லட்சம் ரூபாய்  மதிப்பீட்டில் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் பிரமாண்டமான பாலம் கட்டபட்டது. ஆனால், பன்னிரண்டு ஆண்டுகள் கடந்தும் அப்பாலத்திற்கு இன்றுவரை இணைப்புச்சாலை அமைக்கபடாமல் அந்தரத்தில் நிற்கிறது.



ஆற்றில் மிதக்கும் ரூ.31 கோடி; இனிமேலாவது வருமா ஆற்றுப்பாலம்!

மேலும், பழையார் முதல் கொட்டாய் மேடு கிராம் வரை போடப்பட்ட சாலையும் கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் சாலைகள் கரைந்தும் உடைந்தும் பாழாய் போய் காணப்படுகிறது. இந்நிலையில் உப்பனாற்று பாலத்திற்கு இணைப்புச்சாலை அமைத்து, சாலைகளை சீரமைக்கபட்டால், கடலோர கிராமமக்கள் மீன் விற்பனை மற்றும் அத்தியாவசிய பணிகளுக்கு எளிதாக சென்று வர முடியும்.இதனால் நேரவிரையத்தையும், பொருட் செலவும் பல மடங்கும் குறையும் என்பதால் உடனே சாலை அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மீனவ கிராம மீனவர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கையை கடந்த பத்தாண்டு ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


ஆற்றில் மிதக்கும் ரூ.31 கோடி; இனிமேலாவது வருமா ஆற்றுப்பாலம்!

இந்த சூழலில் பாலம் இணைப்பு சாலை அமைக்கும் இடத்தில் பல வீடுகள் உள்ளதால் வீட்டின் உரிமையாளர்கள் பலரும் உரிய இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  இதனையடுத்து தமிழ்நாடு அரசு தரப்பில் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுத்த நிலையில், அரசு வழங்கும் இழப்பீட்டு தொகை மிகவும் குறைவாக உள்ளதாகவும், தங்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் மேல் முறையீடு செய்துள்ளனர். இதனால்   பாலத்திற்கு இணைப்பு சாலை அமைக்க முடியாமல் பன்னிரெண்டு ஆண்டுகளாக 31 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம் பயனற்று அந்தரத்தில் நிற்கிறது. 


ஆற்றில் மிதக்கும் ரூ.31 கோடி; இனிமேலாவது வருமா ஆற்றுப்பாலம்!

கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இத்திட்டம் மீண்டும் தற்போது ஆளுங்கட்சியாக திமுக வந்துள்ள நிலையில் இத்திட்டம் நிறைவு பெற இடையூறாக உள்ள பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கண்டு, இணைப்பு சாலை அமைக்கும் இடத்திலுள்ள வீடுகளுக்கும், நிலங்களுக்கும் உரிய  நிவாரணம் வழங்க உத்தரவிட்டு, பாலத்திற்கான இணைப்பு சாலையினை விரைவில் அமைக்க நடவடிக்கை எடுத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என அப்பாலத்தால் பயன் பெற போகும் மீனவ கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

பாடாலூரில் பரபரப்பு: பள்ளி, கல்லூரி மாணவிகள் 2 பேர் மாயம்: போலீசார் தீவிர விசாரணை
பாடாலூரில் பரபரப்பு: பள்ளி, கல்லூரி மாணவிகள் 2 பேர் மாயம்: போலீசார் தீவிர விசாரணை
டெல்லி தடியடி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து போராட்டம்... தஞ்சையில் 39 பேர் கைது
டெல்லி தடியடி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து போராட்டம்... தஞ்சையில் 39 பேர் கைது
தஞ்சாவூரில் அதிர்ச்சி... பட்டதாரி வாலிபரிடம் இருந்து ரூ.1லட்சம் மதிப்பு கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்
தஞ்சாவூரில் அதிர்ச்சி... பட்டதாரி வாலிபரிடம் இருந்து ரூ.1லட்சம் மதிப்பு கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்
உள்ளிருப்பு போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு: தஞ்சையில் ஏற்பட்ட பரபரப்பு
உள்ளிருப்பு போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு: தஞ்சையில் ஏற்பட்ட பரபரப்பு

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cauvery Water: ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
“மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Trump Warns Iran: “இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
“இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
Best SUVs for Young Buyers: ஜென் Z-க்கு ஏத்த ஸ்டைலான, கெத்தான SUV கார்கள் எவை.? இந்த லிஸ்ட்ட பார்த்து தேர்ந்தெடுத்துக்கோங்க
ஜென் Z-க்கு ஏத்த ஸ்டைலான, கெத்தான SUV கார்கள் எவை.? இந்த லிஸ்ட்ட பார்த்து தேர்ந்தெடுத்துக்கோங்க
Trump Tariff Vs India: திடீரென ட்ரம்ப் விதித்த 200% வரி; கடுமையான பாதிப்பை சந்திக்கப் போகும் இந்தியா; என்ன காரணம்.?
திடீரென ட்ரம்ப் விதித்த 200% வரி; கடுமையான பாதிப்பை சந்திக்கப் போகும் இந்தியா; என்ன காரணம்.?
Cheapest EV Car Blinq RYDE: வெறும் ரூ.4.5 லட்சம்; 250 கி.மீ ரேஞ்ச்; டாடா டியாகோ EV-க்கு தலைவலியாக வரும் பிளிங்க் ரைடு EV கார்
வெறும் ரூ.4.5 லட்சம்; 250 கி.மீ ரேஞ்ச்; டாடா டியாகோ EV-க்கு தலைவலியாக வரும் பிளிங்க் ரைடு EV கார்
Embed widget