மேலும் அறிய

இன்று சென்னை திரும்புவோருக்கு நிம்மதி... ரயில்வே நிர்வாகம் சூப்பர் அறிவிப்பு

தஞ்சாவூரில் இரவு 11.46 மணிக்கு வந்து 11.48 மணிக்கு புறப்படும் இந்த ரயில், தொடர்ந்து அதிகாலை நேரங்களில் மற்ற ரயில் நிலையங்களை கடந்து செல்லும்.

தஞ்சாவூர்: வாக்களிக்க வந்தவர்கள், சுற்றுலா வந்தவர்கள் இன்று சென்னைக்கு திரும்ப இருக்கீங்களா... அப்போ உங்களுக்குதான் இந்த ‘குட் நியூஸ்’ 

கோடைகால சீசன் மற்றும் வாக்களிக்க சென்று சென்னை திரும்பக் கூடிய பயணிகளுக்கு ஏதுவாக சிறப்பு ரயில் இன்று இரவு இயக்கப்பட உள்ளது என்பதுதான் அந்த இனிப்பான செய்தி. இன்று ஏப்.26 இரவு 10.45 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம் வழியாக காலை 6.15 மணிக்கு சிறப்பு ரயில் தாம்பரம் வருகிறது. இந்த ரயிலில் 6 ஸ்லீப்பர் கோச், 12 ஜெனரல் கோச், 2 செகண்ட் கிளாஸ் கோச் உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கடந்த 23 -ம் தேதி தமிழகம் முழுக்க ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதனை ஒட்டி பல லட்சக்கணக்கான மக்கள் தேர்தலில் வாக்களிக்க தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் சென்றனர். மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக 11,300 -க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த சூழலில் கூடுதல் பொது பயண சேவைகளுக்கான தேவை அதிகளவு எழுந்துள்ளது. இதனால் இன்று இரவு திருச்சி - தாம்பரம் சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இன்றைய தினம் திருச்சிராப்பள்ளி முதல் தாம்பரம் வரை இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 06192 என்ற எண் கொண்ட இந்த ஒன் வே எக்ஸ்பிரஸ் ஸ்பெஷல் ரயில், இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 10.45 க்கு திருச்சிராப்பள்ளியில் இருந்து புறப்படுகிறது.

இந்த ரயில் தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் நின்று பயணிக்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தஞ்சாவூரில் இரவு 11.46 மணிக்கு வந்து 11.48 மணிக்கு புறப்படும் இந்த ரயில், தொடர்ந்து அதிகாலை நேரங்களில் மற்ற ரயில் நிலையங்களை கடந்து செல்லும். மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம் போன்ற பகுதிகளில் பயணிகளுக்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் விழுப்புரம் வழியாக செங்கல்பட்டு சென்றடையும் இந்த ரயில்,நாளை  திங்கட்கிழமை காலை 6. 15 மணிக்கு தாம்பரத்தை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு ரயில் சேவை சொந்த ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளுக்கு கூடுதல் வசதியை வழங்கும் என ரயில்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனர். வாக்களிக்க வந்தவர்கள், சுற்றுலாவாக வந்தவர்கள் என அனைவரும் மீண்டும் சென்னை திரும்ப இந்த சிறப்பு ரயில் மிகவும் உதவியாக இருக்கும். மேலும் பெண்கள், வயதானவர்கள் என அனைவரும் பஸ்சில் செல்ல முடியாத நிலையை போக்கி இந்த சிறப்பு ரயில் உதவும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கியமாக அனைத்து தரப்பு மக்களும் ரயில் பயணத்தைதான் அதிகம் விரும்புவார்கள். அந்த வகையில் இந்த ரயில் பயணிகள் கூட்டத்தால் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெகுநேரம் உட்கார்ந்து செல்ல பெண்களுக்கு ரயில் மிகவும் வசதியான ஒன்றாக இருக்கும். அதனால் சொந்த ஊருக்கு வந்தவர்கள் இந்த ரயிலை நிச்சயம் பயன்படுத்திக் கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு சென்னை திரும்புபவர்களுக்கு கோடை காலத்தில் ஜில்லுன்னு ஜிகர்தண்டா சாப்பிட்டது போல் இருக்கிறது.

Advertisement

தலைப்பு செய்திகள்

பாசன வாய்க்கால் கரையில் குவியும் குப்பைகள்... தஞ்சாவூர் அருகே தொற்றுநோய் அபாயம்!
பாசன வாய்க்கால் கரையில் குவியும் குப்பைகள்... தஞ்சாவூர் அருகே தொற்றுநோய் அபாயம்!
தஞ்சை மாவட்டத்தில் நிர்வாக அதிரடி! 7 தாசில்தார்களுக்கு பணியிட மாற்றம்... கலெக்டர் ரேவதி உத்தரவு
தஞ்சை மாவட்டத்தில் நிர்வாக அதிரடி! 7 தாசில்தார்களுக்கு பணியிட மாற்றம்... கலெக்டர் ரேவதி உத்தரவு
“தஞ்சையை தூய்மையான மாநகரமாக மாற்றுவோம்”... இணைந்து செயல்பட மேயர் பொறுப்பு அஞ்சுகம் பூபதி அறிவுறுத்தல்
“தஞ்சையை தூய்மையான மாநகரமாக மாற்றுவோம்”... இணைந்து செயல்பட மேயர் பொறுப்பு அஞ்சுகம் பூபதி அறிவுறுத்தல்
தஞ்சையில் இஞ்சி விலை கிடுகிடு உயர்வு! வரத்து குறைந்ததால் உச்சம்: இல்லத்தரசிகள் அதிர்ச்சி
தஞ்சையில் இஞ்சி விலை கிடுகிடு உயர்வு! வரத்து குறைந்ததால் உச்சம்: இல்லத்தரசிகள் அதிர்ச்சி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
TTV Dhinakaran :
"தொட்டால் விடமாட்டேன்" சொன்ன விஜய்.! சொந்தக் கட்சி ஊழல்வாதிய என்ன செய்யப்போறீங்க.? டிடிவி கேள்வி
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Embed widget