மேலும் அறிய

ஈரப்பதத்தை பெரியதாக கணக்கில் எடுத்து கொள்ளாமல் கொள்முதல் செய்ய வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்

’’மழைக்காலம் என்பதால் நெல் ஈரப்பதத்துடன் தான் இருக்கும்; நெல்லின் ஈரப்பதம் அதிகமாக இருக்கிறது என விவசாயிகள் நெல்லை புறக்கணிக்க கூடாது’’

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு கீழையூரில் 1969ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் கருணாநிதி ஒக்கநாடு கீழையூர், காரப்பட்டு, கீழவன்னிப்பட்டு , கருவாக்குறிச்சி, பேரையூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சுமார் 2500 ஏக்கர்கள் விவசாயம் செய்வதற்கு அன்றைய பொதுப்பணித்துறை அமைச்சர் சாதிக்பாட்சா, ஒரத்தநாடு முன்னாள் எம்.எல்.ஏ. எல்.கணேசன் ஆகியோரின் பரிந்துரையின்படி அப்போதைய முதல்வர் கருணாநிதி இறவை பாசன நீரேற்று நிலையம் திறக்கப்பட்டது.


ஈரப்பதத்தை பெரியதாக கணக்கில் எடுத்து கொள்ளாமல் கொள்முதல் செய்ய வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்

சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல், ஆட்சி மாற்றத்தாலும், அதிகாரிகளின் அலட்சியத்தால், இறவை பாசன நீரேற்று நிலையம் சரியான பராமரிப்பின்றி பழுதடைந்து உள்ளதால். அப்பகுதி பொதுமக்கள் விவசாயம் செய்வதில் பெரிதும் பாதித்து உள்ளனர்.  இதனால் தண்ணீர் இல்லாமல் பல வருடங்களாக விவசாயிகள் பாதிப்புக்குள்ளானார்கள்.  இது குறித்து தமிழக அரசிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை விடுத்தும், கண்டு கொள்ளாமல் இருந்து விட்டனர். இந்நிலையில் ஒக்கநாடு கீழையூர் கிராமத்திற்கு வருகை தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்து நிருபர்களிடம்    கூறுகையில்,

சுமார் 2500 ஏக்கருக்கு மேல் பாசனம் பெறும் இறவை நீரூற்று நிலையத்தை தமிழக முதல்வர்  உடனடியாக தலையிட்டு சீரமைக்க வேண்டும். இப்பகுதியில் உள்ள வாரிகள், வாய்க்கால்கள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்டவற்றை சீரமைத்து தரவும் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் திறக்கப்பட்ட இந்த இறவை பாசன நீரேற்று நிலையத்தை உடனடியாக சீரமைக்க தற்போதைய முதல்வர்  முக.ஸ்டாலின், நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக முதல்வரையும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனனையும் சந்தித்து கோரிக்கை விடுக்கவுள்ளோம்.

மேலும், மத்திய அரசு, அதிகாரிகள்,  ஒரத்தநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்தது வரவேற்கத்தக்கது. தமிழக முதல்வர்  அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மூலம் நேரடியாக ஆய்வு செய்து வருவதாகவும் உடனடியாக விவசாயிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் இன்றி உடனடியாக நெல்லை கொள்முதல் செய்ய உத்தரவிட்டுள்ளார். தற்பொழுது மழைக்காலம் என்பதால் நெல் ஈரப்பதத்துடன் தான் இருக்கும்; நெல்லின் ஈரப்பதம் அதிகமாக இருக்கிறது என விவசாயிகள் நெல்லை புறக்கணிக்க கூடாது.

விவசாயிகள் நெல்லை காய வைப்பதற்கு இயற்கை ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. ஆகவே ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையங்களிலும் உடனடியாக நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். இதை கிடப்பில் போடாமல் உடனடியாக மத்திய  அரசிடம் வழங்கி நெல்லை விவசாயிகளிடமிருந்து ஈரப்பதத்தை பெரிதாக கணக்கில் எடுக்காமல் உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்றார். இந்த ஆய்வின் போது ஒரத்தநாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார், ஊராட்சிமன்ற தலைவர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள்  கலந்து கொண்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
ABP Premium

வீடியோ

Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Smriti Mandhana Wedding Cancelled: ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
Smriti Mandhana: ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Embed widget