மேலும் அறிய

மயிலாடுதுறை: திட்டமிடாத நகராட்சி நிர்வாகத்தை திட்டித்தீர்த்த பொதுமக்கள்!

மழைக்காலத்திற்கு முன்னதாக வடிகால் வாய்க்கால்களை சீரமைக்காமல், தற்போது அவசர அவசரமாக வடிகால் வாய்க்கால்களை ஜேசிபி இயந்திரம் கொண்டு இடித்து தள்ளிய நகராட்சி நிர்வாகத்தை பொதுமக்கள் திட்டித்தீர்த்தனர்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த இருபத்தி எட்டாம் தேதி தொடங்கி தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து வருகிறது. அதன் ஒன்றாக மயிலாடுதுறை மாவட்டத்திலும் கடந்த 12 நாட்களுக்கு மேலாக தொடர் மழை பெய்து வந்த நிலையில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது இதனால் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளித்து வருகிறது.


மயிலாடுதுறை: திட்டமிடாத நகராட்சி நிர்வாகத்தை திட்டித்தீர்த்த பொதுமக்கள்!

இந்நிலையில் மயிலாடுதுறை நகராட்சிக்கு உள்பட்ட கச்சேரி சாலை, கண்ணாரத்தெரு, சேந்தங்குடி, புதுத்தெரு, கால்டெக்ஸ், பூம்புகார் சாலை போன்ற பல்வேறு பகுதிகளில் வடிகால் வாய்க்கால்கள் முழுமையாக சரிசெய்யப்படாததால் மழைக்காலங்களில் இப்பகுதிகளில் மழைநீர் வெள்ளம் என தேங்கி நிற்பது வாடிக்கையாக உள்ளது. 


மயிலாடுதுறை: திட்டமிடாத நகராட்சி நிர்வாகத்தை திட்டித்தீர்த்த பொதுமக்கள்!

இதுகுறித்து, பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டால்கூட வடிகால் வாய்க்கால்களை சரிசெய்யாமல், சம்பந்தப்பட்ட பகுதியில் நகராட்சி வாகனங்கள் மூலம் மோட்டார் கொண்டு தற்காலிகமாக உறிஞ்சி செல்கின்றனர். இரண்டு மாதங்களுக்கு முன்னர் கண்ணாரத்தெரு பகுதியில் மாவட்ட ஆட்சியர் தொடக்கி வைத்து மாபெரும் வடிகால் வாய்க்கால் சீரமைப்புப் பணி நடைபெற்றது. ஆனால் அதனை ஒட்டியே உள்ள கச்சேரி சாலையில் வடிகால் வாய்க்கால்கள் கண்டுகொள்ளப்படவில்லை. இதன்காரணமாக மழைநீர் பாதாள சாக்கடை ஆள்நுழைவுத் தொட்டியில் புகுந்து கழிவுநீரோடு சேர்ந்து வெளியேறி சாலையில் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.


மயிலாடுதுறை: திட்டமிடாத நகராட்சி நிர்வாகத்தை திட்டித்தீர்த்த பொதுமக்கள்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

 

கடந்த 13 நாட்களாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக கச்சேரி சாலையில் மழைநீர் தேங்கி வடியாமல் நின்றது. இதையடுத்து, நகராட்சி நிர்வாகத்தினர் ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டுவந்து, வடிகால் வாய்க்கால்களை மூடி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அமைத்திருந்த 2 அடி அகல சிமெண்ட் பலகைகளை இடித்து அகற்றினர். மழைக்காலம் என்பதால் அப்பள்ளத்தில் யாரேனும் விழுந்து உயிரிழக்கக்கூடிய அபாயம் உள்ளதாகவும், இத்தனைக்காலம் இந்த வேலைகளை செய்யாமல் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்றும் பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்தினரை வெளுத்து வாங்கினர். ஆனால், நகராட்சியினரோ அதனைக் கண்டுகொள்ளாததுபோல் மழைநீரை வடியவைக்கும் முயற்சியிலேயே கவனமாக இருந்தனர். நகராட்சி ஆணையரின் வீட்டுக்கு அருகிலேயே பூம்புகார் சாலையில் வெள்ளம்போல் மழைநீர் தேங்கி நிற்பதாகவும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாகவே கழிவுநீர் வழிந்தோடி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டிய பொதுமக்கள், அதனையே கண்டுகொள்ள நகராட்சி நிர்வாகத்தினர் தங்கள் பகுதியை எவ்வாறு கண்டுகொள்வார்கள் என்று புலம்பினர்.

IPL 2022 : சிஎஸ்கேவுக்கு வருகிறதா "சாம்சன்" புயல்...! இது அதிர்ச்சியல்ல... மகிழ்ச்சி...!

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

பயணிகள் கவனத்திற்கு... நெல்லை - சென்னை சூப்பர் ஃபாஸ்ட் சிறப்பு ரயில்: இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!
பயணிகள் கவனத்திற்கு... நெல்லை - சென்னை சூப்பர் ஃபாஸ்ட் சிறப்பு ரயில்: இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!
சேதமான பாசன வாய்க்கால் படித்துறையால் சோகம்: உடன் சீரமைக்க ஆலக்குடி பொதுமக்கள் வலியுறுத்தல்
சேதமான பாசன வாய்க்கால் படித்துறையால் சோகம்: உடன் சீரமைக்க ஆலக்குடி பொதுமக்கள் வலியுறுத்தல்
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை: கும்பகோணம் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை: கும்பகோணம் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை
பம்பர் ஆஃபர்! 'உத்யமி மித்ரா' திட்டத்தில் ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம்... யாரெல்லாம் பெறலாம்?
பம்பர் ஆஃபர்! 'உத்யமி மித்ரா' திட்டத்தில் ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம்... யாரெல்லாம் பெறலாம்?

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாளை 10ஆம் வகுப்பு மறுகூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?  அசல் மார்க்‌ஷீட் எப்போ?
நாளை 10ஆம் வகுப்பு மறுகூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?  அசல் மார்க்‌ஷீட் எப்போ?
மனைவியை சமாதானப்படுத்த சென்ற கணவன்.. தீ வைத்து கொளுத்திய மைத்துனர் - வீடியோ வைரல்
மனைவியை சமாதானப்படுத்த சென்ற கணவன்.. தீ வைத்து கொளுத்திய மைத்துனர் - வீடியோ வைரல்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
659 கி.மீட்டர் மைலேஜ்.. 52 ஆயிரம் ஆஃபர்! 4 லட்சம் ரூபாய்க்கும் கம்மி விலையில் Maruti Alto K10
659 கி.மீட்டர் மைலேஜ்.. 52 ஆயிரம் ஆஃபர்! 4 லட்சம் ரூபாய்க்கும் கம்மி விலையில் Maruti Alto K10
TN Weather Update: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
கஞ்சா போதையில் வெறிச் செயல் ; தனியாக இருந்த 60 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்
கஞ்சா போதையில் வெறிச் செயல் ; தனியாக இருந்த 60 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்
Passport Ranking: மீண்டும் மீண்டுமா? முதல் 100 இடங்களில் கூட இந்தியா இல்லை? டாப் 10 பாஸ்போர்ட் ரேங்கிங்
மீண்டும் மீண்டுமா? முதல் 100 இடங்களில் கூட இந்தியா இல்லை? டாப் 10 பாஸ்போர்ட் ரேங்கிங்
Renault Kwid: நாட்டின் மலிவான CNG SUV, 32KM மைலேஜ், ரேட்டிங் எப்படி? ரூ.3,700 போதுமே -EMI விவரங்கள்
நாட்டின் மலிவான CNG SUV, 32KM மைலேஜ், ரேட்டிங் எப்படி? ரூ.3,700 போதுமே -EMI விவரங்கள்
Embed widget