மேலும் அறிய

பல்நோக்கு மருத்துவ பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் போராட்டம்

பணி நிரந்தரம் காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளில் தீர்வு காண வலியுறுத்தி சுகாதாரப்பணிகள் இயக்குனருக்கு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள காலமுறை ஊதிய நிரந்தர பணியிடங்களில் தினக்கூலி அடிப்படையில் அரசு விதிகளின்படி பணி நியமனம் செய்யப்பட்டு கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டி கடந்த 29 .11.2021  அன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் முன்னிலையில் முதன்மைச் செயலாளர் மனு அளிக்கப்பட்டது.


பல்நோக்கு மருத்துவ பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் போராட்டம்

அமைச்சரும், முதன்மை செயலாளரும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் கோரிக்கை நியாயமானது  விரைவில் பணி நியமனம் ஆணை வெளியிடப் படும் என்று உறுதி அளித்தார்கள்.  ஆனால் இதுநாள் வரை அவர்கள் அளித்த உறுதி மொழி படி எந்தவித நடவடிக்கையும் இல்லை. உடனடியாக பணி நிரந்தரம் ,காலமுறை ஊதியம் வழங்கிட வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் இயக்குனர்களுக்கு அந்தந்த மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மூலம் கோரிக்கை விண்ணப்பம் அளிக்கும்  இயக்கம்  சார்பில் நடைபெற்றது.

தஞ்சாவூரிலுள்ள சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஜி. சுரேஷ்குமார், சந்தித்து சென்னை சுகாதார பணிகள் இயக்குனருக்கும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. சுகாதார பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து  வரும் பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதிக்குள் தீர்வு காணப்படாவிட்டால் சென்னை  சுகாதார இயக்குனர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.


பல்நோக்கு மருத்துவ பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் போராட்டம்

இந்த நிகழ்வில்  தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கத்தின் தஞ்சை மாவட்ட தலைவர் பி.சுந்தரலிங்கம்  தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.புருஷோத்தமன், மாவட்ட பொருளாளர் ஜி.கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் தி.திருநாவுக்கரசு. மாவட்ட செயலாளர் த.பாஸ்கரன், ஏஐடியூசி மாவட்ட செயலாளர் ஆர்.தில்லைவனம், அரசு போக்குவரத்து சங்க துணை தலைவர்      துரைமதிவாணன் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை சங்க நிர்வாகிகள்  எஸ். கணேஷ் குமார், டி.காயத்திரி , எம்.வினோத்,எஸ். துர்கா, டி.சச்சிதானந்தம், என்.வினோத், பி.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து பணியாளர்கள் கூறுகையில், சுகாதார பணியாளர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா  தொற்று போன்ற கொடூரமாக நோய்களிலிருந்து மக்களை காப்பாற்றும் பணியில் தங்களது உயிரை கூட கவலைப்படாமலும், குடும்பத்தாரை பற்றியும் எந்த அக்கறை இல்லாமல் பணியாற்றி வருகின்றனர். இதே போல் தமிழகத்தில் எந்த விதமான நோய்கள் உருவானாலும் சுகாதார பணியாளர்களின் பங்கு அதிகளவில் உள்ளது.  தமிழகத்தில் காலிப்பணியிடங்கள் அதிகளவில் இருப்பதால் வேலைப்பளுகாரணமாக சுகாதார பணியாளர்கள் மன உளைச்சலில் ஆளாகி வருகின்றனர். இது குறித்து பல முறை தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தும் பலனில்லாமல் இருந்து வருகிறது. இதனையடுத்து, காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை வரும் பிப்ரவரி மாதம் 3 ந்தேதிக்குள் நிறைவேற்றாவிட்டால், சென்னையில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

 

தலைப்பு செய்திகள்

டிஸ்மிஸ் ஆனவர் பணி செய்ததால் பரபரப்பு... தஞ்சை மாவட்ட கலெக்டர் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்?
டிஸ்மிஸ் ஆனவர் பணி செய்ததால் பரபரப்பு... தஞ்சை மாவட்ட கலெக்டர் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்?
அரசாணை எண் 187-ஐ திரும்பப் பெறுங்கள்... வணிகவியல் பள்ளிகள் சங்கம் வலியுறுத்தல்
அரசாணை எண் 187-ஐ திரும்பப் பெறுங்கள்... வணிகவியல் பள்ளிகள் சங்கம் வலியுறுத்தல்
தென் மாவட்ட ரயில்களில் பாதுகாப்பு குறைவு? அச்சத்துடன் பயணிப்பதாக குற்றச்சாட்டு
தென் மாவட்ட ரயில்களில் பாதுகாப்பு குறைவு? அச்சத்துடன் பயணிப்பதாக குற்றச்சாட்டு
ஜூலை 31-க்குள் பயிர் காப்பீடு செய்யுங்கள்.. விவசாயிகளுக்கு தஞ்சை கலெக்டர் அழைப்பு
ஜூலை 31-க்குள் பயிர் காப்பீடு செய்யுங்கள்.. விவசாயிகளுக்கு தஞ்சை கலெக்டர் அழைப்பு

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
Iran Vs Trump: ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
EPS ADMK : அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
Embed widget