மேலும் அறிய

பல்நோக்கு மருத்துவ பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் போராட்டம்

பணி நிரந்தரம் காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளில் தீர்வு காண வலியுறுத்தி சுகாதாரப்பணிகள் இயக்குனருக்கு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள காலமுறை ஊதிய நிரந்தர பணியிடங்களில் தினக்கூலி அடிப்படையில் அரசு விதிகளின்படி பணி நியமனம் செய்யப்பட்டு கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டி கடந்த 29 .11.2021  அன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் முன்னிலையில் முதன்மைச் செயலாளர் மனு அளிக்கப்பட்டது.


பல்நோக்கு மருத்துவ பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் போராட்டம்

அமைச்சரும், முதன்மை செயலாளரும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் கோரிக்கை நியாயமானது  விரைவில் பணி நியமனம் ஆணை வெளியிடப் படும் என்று உறுதி அளித்தார்கள்.  ஆனால் இதுநாள் வரை அவர்கள் அளித்த உறுதி மொழி படி எந்தவித நடவடிக்கையும் இல்லை. உடனடியாக பணி நிரந்தரம் ,காலமுறை ஊதியம் வழங்கிட வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் இயக்குனர்களுக்கு அந்தந்த மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மூலம் கோரிக்கை விண்ணப்பம் அளிக்கும்  இயக்கம்  சார்பில் நடைபெற்றது.

தஞ்சாவூரிலுள்ள சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஜி. சுரேஷ்குமார், சந்தித்து சென்னை சுகாதார பணிகள் இயக்குனருக்கும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. சுகாதார பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து  வரும் பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதிக்குள் தீர்வு காணப்படாவிட்டால் சென்னை  சுகாதார இயக்குனர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.


பல்நோக்கு மருத்துவ பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் போராட்டம்

இந்த நிகழ்வில்  தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கத்தின் தஞ்சை மாவட்ட தலைவர் பி.சுந்தரலிங்கம்  தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.புருஷோத்தமன், மாவட்ட பொருளாளர் ஜி.கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் தி.திருநாவுக்கரசு. மாவட்ட செயலாளர் த.பாஸ்கரன், ஏஐடியூசி மாவட்ட செயலாளர் ஆர்.தில்லைவனம், அரசு போக்குவரத்து சங்க துணை தலைவர்      துரைமதிவாணன் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை சங்க நிர்வாகிகள்  எஸ். கணேஷ் குமார், டி.காயத்திரி , எம்.வினோத்,எஸ். துர்கா, டி.சச்சிதானந்தம், என்.வினோத், பி.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து பணியாளர்கள் கூறுகையில், சுகாதார பணியாளர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா  தொற்று போன்ற கொடூரமாக நோய்களிலிருந்து மக்களை காப்பாற்றும் பணியில் தங்களது உயிரை கூட கவலைப்படாமலும், குடும்பத்தாரை பற்றியும் எந்த அக்கறை இல்லாமல் பணியாற்றி வருகின்றனர். இதே போல் தமிழகத்தில் எந்த விதமான நோய்கள் உருவானாலும் சுகாதார பணியாளர்களின் பங்கு அதிகளவில் உள்ளது.  தமிழகத்தில் காலிப்பணியிடங்கள் அதிகளவில் இருப்பதால் வேலைப்பளுகாரணமாக சுகாதார பணியாளர்கள் மன உளைச்சலில் ஆளாகி வருகின்றனர். இது குறித்து பல முறை தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தும் பலனில்லாமல் இருந்து வருகிறது. இதனையடுத்து, காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை வரும் பிப்ரவரி மாதம் 3 ந்தேதிக்குள் நிறைவேற்றாவிட்டால், சென்னையில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ajit Doval: இந்தியாவின் ஜேம்ஸ் பாண்ட் எங்கே? அடங்காத தீவிரவாதிகள், யாருக்கு தோல்வி? மோடி ஆக்‌ஷன் எடுப்பாரா?
Ajit Doval: இந்தியாவின் ஜேம்ஸ் பாண்ட் எங்கே? அடங்காத தீவிரவாதிகள், யாருக்கு தோல்வி? மோடி ஆக்‌ஷன் எடுப்பாரா?
PTR TN Cabinet: பிடிஆர்-க்கு தண்டனை ரெடி..! பேச்சால் கடுப்பான ஸ்டாலின் - ஆட்டம் போட்டவர்களுக்கு ஆப்பு?
PTR TN Cabinet: பிடிஆர்-க்கு தண்டனை ரெடி..! பேச்சால் கடுப்பான ஸ்டாலின் - ஆட்டம் போட்டவர்களுக்கு ஆப்பு?
Vice Chancellors meeting: கிளம்பிய சர்ச்சைகள்! ஊட்டியில் தொடங்கும் துணைவேந்தர்களுக்கான மாநாடு
Vice Chancellors meeting: கிளம்பிய சர்ச்சைகள்! ஊட்டியில் தொடங்கும் துணைவேந்தர்களுக்கான மாநாடு
Pahalgam kashmir: மோடி வரல.. ”ஆமா, பாதுகாப்பு குறைபாடு தான்..” - உண்மையை ஒப்புக்கொண்ட மத்திய அரசு
Pahalgam kashmir: மோடி வரல.. ”ஆமா, பாதுகாப்பு குறைபாடு தான்..” - உண்மையை ஒப்புக்கொண்ட மத்திய அரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kashmir Terror Attack | பாகிஸ்தான் தூதரகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்? | Pakistan Embassy  | PM ModiSengottaiyan vs EPS: அடங்க மறுக்கும் செங்கோட்டையன்! கலக்கத்தில் எடப்பாடி! சீனுக்கு வந்த அமித்ஷா!Sengottaiyan: ”EPS இல்லனா அதிமுக இல்ல” செங்கோட்டையன் 360 டிகிரி பல்டி! நள்ளிரவில் முடிந்த DEAL!Annamalai BJP: மத்திய அமைச்சராகும் அண்ணாமலை? கறார் காட்டிய எடப்பாடி! சீனுக்கு வந்த சந்திரபாபுநாயுடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ajit Doval: இந்தியாவின் ஜேம்ஸ் பாண்ட் எங்கே? அடங்காத தீவிரவாதிகள், யாருக்கு தோல்வி? மோடி ஆக்‌ஷன் எடுப்பாரா?
Ajit Doval: இந்தியாவின் ஜேம்ஸ் பாண்ட் எங்கே? அடங்காத தீவிரவாதிகள், யாருக்கு தோல்வி? மோடி ஆக்‌ஷன் எடுப்பாரா?
PTR TN Cabinet: பிடிஆர்-க்கு தண்டனை ரெடி..! பேச்சால் கடுப்பான ஸ்டாலின் - ஆட்டம் போட்டவர்களுக்கு ஆப்பு?
PTR TN Cabinet: பிடிஆர்-க்கு தண்டனை ரெடி..! பேச்சால் கடுப்பான ஸ்டாலின் - ஆட்டம் போட்டவர்களுக்கு ஆப்பு?
Vice Chancellors meeting: கிளம்பிய சர்ச்சைகள்! ஊட்டியில் தொடங்கும் துணைவேந்தர்களுக்கான மாநாடு
Vice Chancellors meeting: கிளம்பிய சர்ச்சைகள்! ஊட்டியில் தொடங்கும் துணைவேந்தர்களுக்கான மாநாடு
Pahalgam kashmir: மோடி வரல.. ”ஆமா, பாதுகாப்பு குறைபாடு தான்..” - உண்மையை ஒப்புக்கொண்ட மத்திய அரசு
Pahalgam kashmir: மோடி வரல.. ”ஆமா, பாதுகாப்பு குறைபாடு தான்..” - உண்மையை ஒப்புக்கொண்ட மத்திய அரசு
TNSTC Special bus: தொடர் விடுமுறை... ஊருக்கு போறீங்களா! உங்களுக்கான அப்டேட் இதுதான்...
TNSTC Special bus: தொடர் விடுமுறை... ஊருக்கு போறீங்களா! உங்களுக்கான அப்டேட் இதுதான்...
CSK Vs SRH: மோசமானவர்களில் முக்கியமானவர்கள் யார்? ஐதராபாத்தை சாய்க்குமா சென்னை? சாதனையை தொடருமா தோனி படை?
CSK Vs SRH: மோசமானவர்களில் முக்கியமானவர்கள் யார்? ஐதராபாத்தை சாய்க்குமா சென்னை? சாதனையை தொடருமா தோனி படை?
IPL 2025 RCB vs RR: சொந்த மண் சோகத்திற்கு முடிவு கட்டிய குருணல், ஹேசில்வுட்! த்ரில் போட்டியில் ஆர்சிபி அபார வெற்றி!
IPL 2025 RCB vs RR: சொந்த மண் சோகத்திற்கு முடிவு கட்டிய குருணல், ஹேசில்வுட்! த்ரில் போட்டியில் ஆர்சிபி அபார வெற்றி!
Sindhu River: சிந்து நதிநீர் ஏன் பாகிஸ்தானுக்கு இவ்வளவு முக்கியம்? அடிமடியிலே கை வைத்த இந்தியா!
Sindhu River: சிந்து நதிநீர் ஏன் பாகிஸ்தானுக்கு இவ்வளவு முக்கியம்? அடிமடியிலே கை வைத்த இந்தியா!
Embed widget