மேலும் அறிய

பாராளுமன்ற தேர்தலில் விவசாயிகளின் கொள்கைகளுக்கு ஆதரவாக இருக்கும் கட்சிகளுக்கே ஆதரவு: பி.ஆர்.பாண்டியன் திட்டவட்டம்

தமிழக அரசு தன்னை மாற்றிக் கொள்ளாவிட்டால் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.,வுக்கு எதிராக விவசாயிகளின் நடவடிக்கை தீவிரமடையும் என்று காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பிஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

தஞ்சாவூர்: தமிழக அரசு தன்னை மாற்றிக் கொள்ளாவிட்டால் வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.,வுக்கு எதிராக விவசாயிகளின் நடவடிக்கை தீவிரமடையும். விவசாயிகளின் கொள்கைக்கு ஆதரவாக இருக்கும் கட்சிகளுக்கு தான் ஆதரவு அளிக்க உள்ளோம் என்று தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பிஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடைபெறாத விவசாயிகள் மீதான தாக்குதல், தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக நிலங்களை அபகரித்து, கார்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைப்பதில் தீவிர நவடிக்கை எடுத்து வருகிறது. பரந்துார் விமான நிலையம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் போராடி வருகிறார்கள். 


பாராளுமன்ற தேர்தலில் விவசாயிகளின் கொள்கைகளுக்கு ஆதரவாக இருக்கும் கட்சிகளுக்கே ஆதரவு: பி.ஆர்.பாண்டியன் திட்டவட்டம்

மூத்த ஐ.ஏ.எஸ்., மச்சேந்திரநாதன் தலைமையில் குழு அமைத்துள்ளோம். அந்த குழு எடுக்கும் நடவடிக்கையின் அடிப்படையில்  விமான நிலையம் அமைப்பது குறித்து, முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு கூறியது. ஆனால், விவசாயிகள் குழுவிடம் முறையிட்டனர். குழு அறிக்கையை வெளியிடாமல் தமிழக அரசு விமான நிலையத்திற்கான நிலம் கையகப்படுத்துவதற்கு நிர்வாக அனுமதி வழங்கியது கண்டிக்கத்தக்கது.

சிப்காட்டிற்கு நிலம் எடுக்கிறோம் என்ற பெயரில் சட்ட விரோதமாக தி.மு.க., அரசு போலீசாரை பயன்படுத்தி விவசாயிகள் அச்சுறுத்தி வருகிறது.  குண்டாஸ் வழக்கு போட்டு மிரட்டுகிறது. விவசாயிகளை சிறையில் வைத்து கொடுமைப்படுத்துகிறது. இதற்கு அடிப்படை நிலம் ஒருங்கிணைப்பு சட்டம் 2023 என்ற பெயரில் ஒட்டுமொத்தமாக விளைநிலங்களை அபரிக்க போலீசாரை பயன்படுத்துகிறது.

பா.ஜ.,வுக்கு எதிர் அரசியல் என்ற பெயரால் பல அரசியல் கட்சிகளை தி.மு.க., ஒருங்கிணைத்து உள்ள நிலையில், அந்த கட்சி விவசாயிகளுக்காக போராட்டங்களை அறிவிக்க முன்வராதது வேதனையளிக்கிறது.  

தி.மு.க., அரசின் கொடுமையை எதிர்ப்பது என்ற கொள்கையை விவசாயிகள் எடுத்துள்ளோம். விவசாயிகளான எங்களுக்கு அரசியல், கொள்கை கிடையாது. எங்களின் வாழ்க்கை மண்ணையும், விவசாயத்தை நம்பி இருக்கிறது. தமிழக அரசு தன்னை மாற்றிக் கொள்ளாவிட்டால் வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.,வுக்கு எதிராக விவசாயிகளின் நடவடிக்கை தீவிரமடையும். விவசாயிகளின் கொள்கைக்கு ஆதரவாக இருக்கும் கட்சிகளுக்கு தான் ஆதரவு அளிக்க உள்ளோம். தி.மு.க., தனது தேர்தல் அறிக்கையில், நெல் குவிண்டால் ஒன்றுக்கு 2,500 ரூபாயும், கரும்பு டன் ஒன்றுக்கு 4 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவித்தது. ஆனால் இன்று வரை வழங்காமல் விவசாயிகளை ஏமாற்றி வருகிறது.

வரும் கொள்முதல் பருவத்தில் நெல் குவிண்டால் ஒன்றுக்கு 3,500 ரூபாயும், கரும்பு டன் ஒன்றுக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசின் நில ஒருங்கிணைப்பு சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.  டெல்டாவில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுக்க நிறுவனங்களுக்கு தி.மு.க., அரசு இடம் அளிக்கிறது. இதை நிறுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைளை வலியுறுத்தி வரும் ஜனவரி 1ம் தேதி பிரச்சார இயக்கத்தை துவங்க உள்ளோம். வரும் ஜனவரி 5ம் தேதி திருவாரூரில் பிரச்சார பயணம் நிறைவு பெறுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை  அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
Embed widget