மேலும் அறிய

தஞ்சை மாவட்டத்தில் களைகட்டத் தொடங்கிய காணும் பொங்கல்... காலை முதல் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள்

காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். இப்பண்டிகையின் நிகழ்வுகளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும்.

பொங்கல் பண்டிகையின் நான்காவது நாளாக இன்று காணும் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிராமங்களில் காணும் பொங்கலுக்கு தனியிடம் உண்டு. தஞ்சை மாவட்டத்தில் அனைத்து கிராமப் பகுதிகளிலும் காணும் பொங்கலை ஒட்டி கணுப்பிடி வைத்து இளம் பெண்கள் வழிப்பட்டனர். காணும் பொங்கலின் சிறப்பு இது. உடன்பிறந்த சகோதரர்களுக்காக பெண்கள் செய்யும் ஒருவகை நோன்புதான். உடன்பிறந்த சகோதரர்கள் நலமும் வளமுமாய் வாழ சகோதரிகள் பிரார்த்தித்தனர்.

காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா ஆகும். காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். இப்பண்டிகையின் நிகழ்வுகளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டிமன்றம், உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் போன்ற வீர சாகசப் போட்டிகள் உட்படப் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறும்.

இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள் கொத்தினை கட்டி அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில், முகத்தில் பூசிக்கொள்வார்கள். கணுப்பிடி இந்நாளின் சிறப்பு. இது ஒருவகை நோன்பு. உடன்பிறந்த சகோதரர்களுக்காக பெண்கள் செய்யும் நோன்பு. உடன்பிறந்த சகோதரர்கள் நலமும் வளமுமாய் வாழ சகோதரிகள் பிரார்த்திப்பது

காணும் பொங்கலையொட்டி தஞ்சை பெரியகோவிலில் காலை முதல் சுற்றுலாப்பயணிகளும், பக்தர்களும் குவிந்த வண்ணம் இருந்தனர். மக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் தஞ்சை மாவடடத்தின் பல சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பொங்கல், மாட்டுப் பொங்கலை தொடர்ந்து காணும் பொங்கல் பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காணும் பொங்கல் என்றாலே சுற்றுலா தலங்களுக்கு சென்று உற்றார், உறவினர்களுடன் பேசி பொழுது போக்குவது வழக்கம். இதையொட்டி தஞ்சையில் முக்கிய சுற்றுலா தலங்களான பெரியகோவில், மணிமண்டப பூங்கா, அரண்மனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மக்கள் காலை முதலே வரத் தொடங்கினர். காணும் பொங்கலை கொண்டாட தஞ்சையை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வேன்கள், கார்கள், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் மூலம் ஆயிரக்கணக்கானோர் குடும்பத்தோடு தஞ்சைக்கு வந்திருந்தனர்.


தஞ்சை மாவட்டத்தில் களைகட்டத் தொடங்கிய காணும் பொங்கல்... காலை முதல் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தஞ்சைக்கு வந்திருந்தவர்கள் தங்கள் உறவினர்கள், நண்பர்களுடன் பெரிய கோவிலில் குவிந்தனர். இதேபோல் மணிமண்டப பூங்காக்களில் குடும்பத்தோடு அதிகமானோர் வந்திருந்தனர். அங்குள்ள ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு பொருட்களில் தங்களது குழந்தைகளை வைத்து அவர்களும் விளையாடி மகிழ்ந்தனர்.

மக்களின் கூட்டத்தால் சுற்றுலாத் தலங்கள் காலை முதல் களைக் கட்டத் தொடங்கியது. காணும் பொங்கலை ஒட்டி சுற்றுலாத்தலங்களுக்கு மக்கள் அதிகம் வருவார்கள் என்பதால் தற்காலிக கடைகள் ஏராளமாக முளைத்தன. தஞ்சையில் மக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் பெரிய கோவில், பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. திரையரங்குகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. தஞ்சை முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.

கூட்ட நெரிசலை பயன்படுத்தி பொதுமக்களின் செயின், பணத்தை சமூக விரோதிகள் திருடும் வாய்ப்பு இருப்பதால் அதனை தடுக்க போலீசார் மக்கள் கூடும் இடங்களில் ரோந்து சென்றனர். மப்டியிலும் கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஒலி பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு செய்யப்பட்டது.

காணும் பொங்கலை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து தஞ்சைக்கு கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டன. கிராமப்புறங்களில் காலை முதல் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. மேலும் சிறுவர், சிறுமிகளுக்காக பல்வேறு போட்டிகளும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
ABP Premium

வீடியோ

Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Smriti Mandhana Wedding Cancelled: ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
Smriti Mandhana: ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Embed widget