மேலும் அறிய

Pongal 2024: பொங்கல் பண்டிகையை ஒட்டி தஞ்சையில் கிலோ ரூ.3 ஆயிரத்திற்கு உயர்ந்த மல்லிகைப்பூ

தமிழகம் முழுவதும் நாளை பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்காக விற்பனைக்கு வந்துள்ள பூக்களின் விலை கிடுகிடுவென்று உயர்ந்துள்ளது.

தஞ்சாவூர்: தமிழகம் முழுவதும் நாளை பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்காக விற்பனைக்கு வந்துள்ள பூக்களின் விலை கிடுகிடுவென்று உயர்ந்துள்ளது. எத்தனை விலையாக இருந்தாலும் மக்கள் ஆர்வத்துடன் பூக்களை வாங்கினர். பொங்கல் பண்டிகை தற்போதே களை கட்ட ஆரம்பித்துள்ளது.

தஞ்சை பூக்கார தெருவில் பூச்சந்தை அமைந்துள்ளது. இங்கு ஏராளமான கடைகள் உள்ளன. தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகள் மற்றும் திண்டுக்கல், ஓசூர், நிலக்கோட்டை உட்பட பல்வேறு இடங்களில் இருந்து தினமும் பூக்கள் விற்பனைக்காக வருகிறது. இதே போல் இங்கிருந்து வெளி மாவட்டங்களுக்கும் பூக்கள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும்.

திருமண நாட்கள், பண்டிகை காலங்கள், விழா நாட்கள் ஆகியவற்றின் போது பூக்களின் விலை கணிசமாக அதிகரிக்கும். இதேபோல் பூக்களின் வரத்து குறைவாக இருந்தாலும் விலை அதிகரிக்கும். இந்நிலையில் நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் முக்கிய பண்டிகைகளுள் பொங்கல் பண்டிகையும் ஒன்றாகும். தமிழர்களின் பாரம்பரியமிக்க பண்டிகைகளில் ஒன்று பொங்கல் விழா. தமிழ்நாடு முழுவதும் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த பண்டிகை விவசாயிகள் இயற்கைக்கு நன்றி கூறும் விழாவாகும். 4 நாட்கள் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. 


Pongal 2024: பொங்கல் பண்டிகையை ஒட்டி தஞ்சையில் கிலோ ரூ.3 ஆயிரத்திற்கு உயர்ந்த மல்லிகைப்பூ

முதல் நாள் போகிப் பண்டிகை, மறு நாள் பொங்கல், மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல், 4ம் நாள் காணும் பொங்கல் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சிறப்புடன் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழாவின் போது தேவையான பொருட்களை பொதுமக்கள் மூன்று நாட்களுக்கு முன்பே வாங்க தொடங்குவர். கரும்பு, வாழை, மஞ்சள், இஞ்சிக் கொத்து என்று தேவையான பொருட்களை கிராமங்களில் சந்தையிலும், நகர் பகுதியில் மார்க்கெட்டிலும் வாங்குவர்.

தமிழர்களின் பாரம்பரியமிக்க பொங்கல் விழாவிற்கு கரும்பு, வாழைப்பழங்களின் தேவைப்போல் பூக்களின் தேவையும் அதிகம். இதனால் பூக்களின் விலையும் கிடுகிடுவென அதிகரித்து உள்ளது. அதன்படி சாதாரண நாட்களில் கிலோ ரூ.500 முதல் ரூ.800 வரை விற்பனையான மல்லிகைப்பூ கிடுகிடுவென்று விலை உயர்ந்து நேற்று ரூ.3 ஆயிரத்திற்கு விற்பனையானது.

இதேபோல் முல்லைப் பூ விலையும் உயர்ந்து கிலோ ரூ.2 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. கனகாம்பரம் ரூ.ஆயிரம், செவ்வந்தி இருவகை ரூ.200, ரூ.100, அரளி பாக்கெட் ரூ.400, ஆப்பிள் ரோஸ் ரூ.300-க்கும் விற்பனையானது. இதேபோல் சம்பங்கி ரூ.200 வரையும், செண்டிப்பூ ரூ.150க்கும் விற்பனையானது. பூக்களின் விலை உயர்ந்து இருந்தாலும் பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை ஒட்டி பூக்கள் வாங்க பூச்சந்தையில் குவிந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் பூச்சந்தையில் பூக்களின் விற்பனை களைக்கட்டியது. பொங்கல் பண்டிகை மற்றும் மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என்று அடுத்தடுத்த நாட்களுக்கு பூக்களின் தேவை அதிகம் என்பதால் பொதுமக்கள் விலையை பற்றி யோசிக்காமல் பூக்களை வாங்கி சென்றனர்.

இது குறித்து பூ வியாபாரி ஏ.சி. சேகர் கூறுகையில், பொங்கல் பண்டிகை என்பதால் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. வரத்து அதிகம் உள்ளது. இருப்பினும் விலையை பற்றி யோசிக்காமல் பொதுமக்களும் ஆர்வத்துடன் பூக்கள் வாங்கி செல்கின்றனர். நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இதுவரை தட்டுப்பாடின்றி பூக்கள் வரத்து வந்தபடியே உள்ளது. அதிகாலை 2 மணிக்கு ஆரம்பித்த மொத்த விற்பனை மற்றும் சில்லரை விற்பனையும் நன்றாக உள்ளது என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
அதிமுக ஆர்ப்பாட்டம்: திமுக அரசின் மடிக்கணினி திட்டம் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு- பாரபட்சமின்றி வழங்க கோரிக்கை!
அதிமுக ஆர்ப்பாட்டம்: திமுக அரசின் மடிக்கணினி திட்டம் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு- பாரபட்சமின்றி வழங்க கோரிக்கை!
Virugampakkam DMK Candidate: விருகம்பாக்கம் தொகுதி: திமுகவில் யாருக்கு.? பிரபாகர் ராஜாவா.? தனசேகரனா.? காத்திருக்கும் ட்விஸ்ட்
விருகம்பாக்கம் தொகுதி: திமுகவில் யாருக்கு.? பிரபாகர் ராஜாவா.? தனசேகரனா.? காத்திருக்கும் ட்விஸ்ட்
ABP Premium

வீடியோ

கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike
Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
அதிமுக ஆர்ப்பாட்டம்: திமுக அரசின் மடிக்கணினி திட்டம் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு- பாரபட்சமின்றி வழங்க கோரிக்கை!
அதிமுக ஆர்ப்பாட்டம்: திமுக அரசின் மடிக்கணினி திட்டம் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு- பாரபட்சமின்றி வழங்க கோரிக்கை!
Virugampakkam DMK Candidate: விருகம்பாக்கம் தொகுதி: திமுகவில் யாருக்கு.? பிரபாகர் ராஜாவா.? தனசேகரனா.? காத்திருக்கும் ட்விஸ்ட்
விருகம்பாக்கம் தொகுதி: திமுகவில் யாருக்கு.? பிரபாகர் ராஜாவா.? தனசேகரனா.? காத்திருக்கும் ட்விஸ்ட்
DMK Election Manifesto: காத்திருக்கும் கவர்ச்சி வாக்குறுதிகள்! குழுவை அமைத்தது திமுக - கனிமொழி தலைமையில் யார்? யார்?
DMK Election Manifesto: காத்திருக்கும் கவர்ச்சி வாக்குறுதிகள்! குழுவை அமைத்தது திமுக - கனிமொழி தலைமையில் யார்? யார்?
RM 003 V2 Watch: மெஸ்ஸிக்கு ஆனந்த் அம்பானி பரிசளித்த ரூ.10 கோடி வாட்ச்; RM 003-V2 GMT-ன் சிறப்பு என்ன.?
மெஸ்ஸிக்கு ஆனந்த் அம்பானி பரிசளித்த ரூ.10 கோடி வாட்ச்; RM 003-V2 GMT-ன் சிறப்பு என்ன.?
போட்டித் தேர்வர்கள் கவனத்திற்கு! ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு: ஒன்றுக்கு மட்டுமே அனுமதி!
போட்டித் தேர்வர்கள் கவனத்திற்கு! ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு: ஒன்றுக்கு மட்டுமே அனுமதி!
MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
Embed widget