மேலும் அறிய

கடத்தப்பட்ட 5 மாத குழந்தை: இரண்டே மணிநேரத்தில் மீட்ட போலீசார்: எப்படி? குவியும் பாராட்டு!

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் அதிகாலையில் பெற்றோருடன் பாதுகாப்பில் தூங்கி கொண்டிருந்த 5 மாத குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் அதிகாலையில் பெற்றோருடன் பாதுகாப்பில் தூங்கி கொண்டிருந்த 5 மாத குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் குழந்தை கடத்தப்பட்ட சில மணி நேரத்திலேயே போலீசார் விரைவாக செயல்பட்டு மீட்டுள்ளனர்.

மிக முக்கியமான பகுதியான பூதலூர்

தஞ்சை மாவட்ட பூதலூர் மிகவும் முக்கியமான பகுதியாகும். சாலை போக்குவரத்து மற்றும் ரயில் போக்குவரத்து உள்ளது. பூதலூரில் ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளது. ரயிலில் வரும் சுற்றுலாப்பயணிகள் பூதலூர் வழியாக பிரபலமான பூண்டி புதுமை மாதா ஆலயத்திற்கு செல்வது வழக்கம். இதனால் எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும். 

ஆந்திர தம்பதியின் குழந்தை மணிகண்டா

இந்த பூதலூர் ரயில்வே ஸ்டேஷனில் ஆந்திராவைச் சேர்ந்த திலீப், அவரது மனைவி ஷோபா ஆகியோர் தங்களின் 5 மாத குழந்தை மணிகண்டாவுடன் ரயிலில் கீ செயின் விற்பனை செய்து வருகின்றனர். இவர்கள் இதே ரயில்வே ஸ்டேஷன் ப்ளாட்பார்மில் படுத்து உறங்குவது வழக்கம். பின்னர் காலையில் எழுந்து வழக்கம் போல் ரயிலில் கீ செயின் விற்பனை செய்து வந்தனர்.

குழந்தையை காணாமல் பெற்றோர் அதிர்ச்சி

இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் ஸ்டேஷனில் பிளாட்பார்மில் படுத்து உறங்கினர். அருகில் தங்களின் குழந்தை மணிகண்டாவையும் படுக்க வைத்து இருந்தனர். இந்நிலையில் அதிகாலை 3: 30 மணியளவில் ஷோபா எழுந்து பார்த்தபோது அருகில் படுக்க வைத்திருந்த மணிகண்டாவை காணவில்லை. இதனால் பதறிப்போன அவர் தனது கணவர் திலீப்பை எழுப்பி விபரம் சொல்லியுள்ளார். இதையடுத்து இருவரும் ரயில்வே ஸ்டேஷனில் பல பகுதிகளில் அழுது கொண்டே குழந்தையை தேடியுள்ளனர். ஆனால் குழந்தை எங்குமே காணவில்லை.

பூதலூர் போலீசில் புகார்

அனைத்து இடங்களிலும் தேடிப் பார்த்தும் குழந்தை கிடைக்காதால் உடனடியாக இதுகுறித்து பூதலூர் போலீசில் திலீப் புகார் தெரிவித்தார். உடன் சம்பவ இடத்திற்கு பூதலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் மற்றும் போலீசார் சரவணன், தனசேகரன், தியானேஸ்வரன் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து பல பகுதிகளுக்கும் சென்று பூதலூர் போலீசார் குழந்தையை தேடி பார்த்தனர். இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் பல இடங்களிலும் தேடி பார்த்தபோது ரயில்வே ஸ்டேஷனிலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் மேற்கு பகுதியில் குழந்தை அழும் சப்தம் கேட்டுள்ளது. 

2 மணிநேரத்தில் குழந்தை மீட்பு

உடன் அந்த இடத்திற்கு இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் மற்றும் போலீசார் சென்று பார்க்கும் பொழுது குழந்தை அங்கு கிடந்துள்ளது தெரிய வந்தது. ஆனால் குழந்தைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. உடனடியாக குழந்தையை மீட்டு பெற்றோரிடம் காலை 6 மணி அளவில் போலீசார் ஒப்படைத்தனர். தொடர்ந்து குழந்தையை அந்த பகுதிக்கு யார் தூக்கி சென்றது. ஏன் இதை செய்தார்கள்? எதற்காக செய்தார்கள்? குழந்தை கடத்தலில் ஈடுபட்டுள்ளவர்கள் செய்தார்களா? 

திலீப்- ஷோபாவை பிடிக்காதவர்கள் யாராவது கோபத்தில் இதுபோன்று செய்தார்களா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சுமார் 2 மணி நேரத்திலேயே கடத்தப்பட்ட குழந்தையை மீட்டுக் கொடுத்த போலீசாரை பூதலூர் மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
KKR IPL: சீன் போட்ட வெங்கடேஷ் அய்யர்? கொல்கத்தா அணியில் ஒப்பந்தம்? பயிற்சியாளர் உடைத்த உண்மைகள்
KKR IPL: சீன் போட்ட வெங்கடேஷ் அய்யர்? கொல்கத்தா அணியில் ஒப்பந்தம்? பயிற்சியாளர் உடைத்த உண்மைகள்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
KKR IPL: சீன் போட்ட வெங்கடேஷ் அய்யர்? கொல்கத்தா அணியில் ஒப்பந்தம்? பயிற்சியாளர் உடைத்த உண்மைகள்
KKR IPL: சீன் போட்ட வெங்கடேஷ் அய்யர்? கொல்கத்தா அணியில் ஒப்பந்தம்? பயிற்சியாளர் உடைத்த உண்மைகள்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Embed widget