மேலும் அறிய

வளர்த்தவரை காப்பாற்ற கண்ணாடி விரியன் பாம்புடன் சண்டையிட்டு இறந்த செல்ல நாய்.. நாகையில் சோகம்..

கண்ணாடி விரியன் பாம்புடன் கடும் சண்டை வளர்த்த எஜமானை காப்பாற்ற வீட்டுக்குள் நுழைய முயன்ற பாம்பை கடித்து கொன்று உயிரைவிட்ட வளர்ப்பு நாய்க்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி அடக்கம் செய்யப்பட்டது.

கண்ணாடி விரியன் பாம்புடன் கடும் சண்டை வளர்த்த எஜமானை காப்பாற்ற வீட்டுக்குள் நுழைய முயன்ற பாம்பை கடித்து கொன்று உயிரைவிட்ட வளர்ப்பு நாய்க்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி அடக்கம் செய்யப்பட்டது. 

 
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனம் கிராமத்தை சேர்ந்தவர் காளிமுத்து. இவருடைய மனைவி கலைமணி. இவர்கள் தங்கள் வீட்டில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ‘டைகர்’ என்ற நாயை வளர்த்து வந்தனர். நேற்று நள்ளிரவு 2 மணியளவில் கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு காளிமுத்து வீட்டுக்குள் செல்ல முயன்றுள்ளது. அப்போது வீட்டு வாசலில் படுத்திருந்த நாய் டைகர், பாம்பை பார்த்து குறைத்துள்ளது. நள்ளிரவு நேரம் என்பதால் நாய் குறைத்த சத்தம் வீட்டுக்குள் தூங்கிக்கொண்டு இருந்த காளிமுத்துவுக்கும், அவரது மனைவிக்கும் கேட்கவில்லை.
 

வளர்த்தவரை காப்பாற்ற கண்ணாடி விரியன் பாம்புடன் சண்டையிட்டு இறந்த செல்ல நாய்.. நாகையில் சோகம்..
 
கடித்து கொன்ற நாயும் செத்தது
 
வீட்டுக்குள் செல்ல முயன்ற பாம்புடன் நாய் தொடர்ந்து போராடி உள்ளது. ஒரு கட்டத்தில் அந்த பாம்பை நாய் கடித்து குதறியது. இதில் பாம்பு செத்தது. இதேபோல பாம்பு கடித்ததில் விஷம் ஏறி நாயும் பரிதாபமாக உயிரிழந்தது.நடந்த சம்பவம் எதுவும் தெரியாமல் நேற்று காலை வழக்கம்போல் காளிமுத்துவும், அவருடைய மனைவியும் எழுந்து வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தனர்.
 
அப்போது வீட்டு வாசலில் 6½ அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பும், அதன் அருகில் நாய் டைகரும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தனது உயிரை கொடுத்து டைகர்(நாய்) எங்களது உயிரை காப்பாற்றி விட்டதாக கூறி காளிமுத்துவும், கலைமணியும் கதறி அழுதனர்.
 

வளர்த்தவரை காப்பாற்ற கண்ணாடி விரியன் பாம்புடன் சண்டையிட்டு இறந்த செல்ல நாய்.. நாகையில் சோகம்..
 
இதுகுறித்து காளிமுத்து கூறியதாவது:-
 
பிள்ளையைப்போல் வளர்த்தேன். கடந்த 10 ஆண்டுகளாக இந்த நாயை பெற்ற பிள்ளையைப்போல் வளர்த்து வந்தேன். இரவு நேரத்தில் எனது வீட்டு வாசலில் நாய் படுத்திருந்து காவல் காக்கும். இந்த பாம்பு வீட்டுக்குள் வந்திருந்தால் என்னையோ, அல்லது எனது மனைவியையோ கடித்து இருக்கும். பிள்ளையைபோல் வளர்ந்து வந்த டைகர் (நாய்) எங்களை பாம்பிடம் இருந்து காப்பாற்றி விட்டு, அது தனது உயிரை விட்டுள்ளது என கண்ணீர் மல்க கூறினார். இதையடுத்து நாய்க்கு மாலை அணிவித்து மரியாதை செய்து அடக்கம் செய்தனர். இந்த நாய்க்கு கிராமக்கள் திரளானோர் அஞ்சலி செலுத்தினர். வீட்டுக்குள் செல்ல முயன்ற கொடிய விஷமுள்ள பாம்பை கடித்து கொன்று தனது எஜமானரின் குடும்பத்தை காப்பாற்றி விட்டு நாய் தனது உயிரை விட்ட சம்பவம் அந்த பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget