மேலும் அறிய

கும்பகோணத்தில் 63 நாயன்மார்களில் ஒருவரான மூர்க்க நாயனார் குரு பூஜை விழா

’’சூதாட்டம் மூலம் கிடைத்த பொருட்களைக் கொண்டு சிவனடியார்களுக்கு திருவமுது படைக்கும் தொண்டினைத் மூர்க்க நாயனார் செய்து வந்தார்’’

பண்டைய தொண்டை நாட்டில் பாலாற்றின் வடக்குக் கரையில் அமைந்திருந்தது திருவேற்காடு என்னும் ஊரில், வேளாளர்களில் ஒருவர் சிறந்த சிவனடியாராகத் திகழ்ந்தார். திருநீற்றை தன்னுடைய பெருஞ்செல்வமாகக் கருதிய அவர் சிவபிரானிடத்தும் அவர்தம் அடியார்களிடத்தும் பேரன்பு கொண்டிருந்தார். நாள்தோறும் சிவனடியார்களுக்கு அறுசுவையுடன் திருவமுது படைத்து பின்னர் தான் உண்ணும் வழக்கத்தை மேற்கொண்டு வந்தார்.  அவர் அடியவர்களுக்கு திருவமுது படைக்கும் செய்தி நாடு எங்கும் பரவியது. ஆதலால் திருவமுது செய்வதற்தாக அவரை நாடி வரும் சிவனடியார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது. தன்னை நாடி வந்த சிவனடியார்கள் எல்லோருக்கும் முகம் கோணாது, திருவமுது படைக்கும் பணியினை தவறாது செய்து எஞ்சியதை தான் உண்ணும் வழக்கத்தை நாள்தோறும் செய்து வந்தார் மூர்க்க நாயனார். நாளடைவில் அவருடைய செல்வ வளம் குன்றத் தொடங்கியது.ஆதலால் தம்முடைய பொருட்கள், நிலங்கள் ஆகியவற்றை விற்று திருவமுது படைக்கும் தொண்டினை தவறாது தொடர்ந்தார்.  சில காலம் கழித்து மூர்க்க நாயனாரிடம் விற்க பொருட்கள் ஏதும் இல்லாத நிலை ஏற்பட்டது. எனவே அடியார்களுக்கு திருவமுது படைக்கும் தொண்டினை எப்படியாவது தொடர வேண்டும் என்று மனதில் உறுதி பூண்டார் மூர்க்க நாயனார்.அப்போது அவருக்கு தம்முடைய இளம் பருவத்தில் கற்றிருந்த சூது விளையாட்டு நினைவில் வந்தது. 


கும்பகோணத்தில் 63 நாயன்மார்களில் ஒருவரான மூர்க்க நாயனார் குரு பூஜை விழா

சூது விளையாட்டில் வல்லவரான அவர், இறையடியார்களுக்கு திருவமுது படைக்கும் பொருட்டு பொருளீட்ட சூது விளையாட்டில் ஈடுபடலானார். சூதின் மூலம் கிடைத்த பொருட்களைக் கொண்டு சிவனடியார்களுக்கு திருவமுது படைக்கும் திருத்தொண்டினைத் தொடர்ந்தார். அவ்வூரில் இருந்தவர்கள் எல்லோரும் சூது விளையாட்டில் மூர்க்க நாயனாரிடம் தோற்றனர். அவருடன் சூது விளையாட அவ்வூரில் யாரும் முன் வரவில்லை. ஆதலால் இவ்வூரில் இனி இருந்து பயனில்லை என்று எண்ணிய அவர், இறைவனின் திருக்கோவில்கள் இருக்கும் திருத்தலங்களுக்குச் செல்லலானார்.ஒரு திருத்தலத்திற்குச் சென்று இறைவனாரை வழிபட்டு, அவ்வூரில் உள்ளோரிடம் சூது விளையாடி பொருளீட்டி, அங்கே சிவனடியார்களுக்கு திருவமுது செய்வித்து எஞ்சியதை உண்டு, சில நாட்கள் தங்கியிருந்து சூது விளையாட யாரும் என்றபோது அடுத்த தலத்திற்குச் செல்லலானார்.இவ்வாறு செல்லுகையில் திருக்குடந்தை எனப்படும் கும்பகோணத்தை அடைந்து தங்கினார். இவ்வூரில் எவ்வளவு நாட்கள் இருந்தாலும் சூது விளையாடி பொருளீட்டி அடியார் தொண்டினைத் தொடரலாம் என்று எண்ணினார்.  ஆதலால் அவர் ஒரு தந்திரத்தைக் கையாண்டார். அதாவது சூது விளையாடும்போது முதல் ஆட்டத்தில் எதிராளியை வெல்ல விடுவார். இதனால் எதிராளிக்கு நம்பிக்கை ஏற்படும்.  ஆதலால் அடுத்த முறை பெரும் பணயத்தை வைப்பார். இந்த ஆட்டத்தில் வென்று விடுவார். இவ்வாறாக பொருளீட்டி அடியார் தொண்டினைத் தொடர்ந்தார்.  சூது விளையாட்டில் எதிராளி முறை தவறி ஆடினால் தன்னிடம் இருக்கும் உடைவாளால் எதிராளியைத் தாக்குவார்.


கும்பகோணத்தில் 63 நாயன்மார்களில் ஒருவரான மூர்க்க நாயனார் குரு பூஜை விழா

இவருடைய இத்தகைய மூர்க்க குணத்தால் எல்லோரும் அவரை மூர்க்கர் என்றழைக்க தொடங்கினர். சூதினால் பெற்ற பொருளின் மேல் ஆசை கொள்ளாமல், அப்பொருளை அடியார்களுக்கு திருவமுது செய்யும் பணிக்காக மட்டும் பயன்படுத்தி திருவமுது திருத்தொண்டினை தவறாது கடைப்பிடித்த மூர்க்க நாயனார் இறுதியில் இறைபதம் பெற்றார். இத்தகைய சிவனடியார்களுக்கு திருவமுத படைத்த மூர்க்க நாயானார் 63 நாயன்மார்களில் ஒருவரானார். இவரது குரு பூஜை விழா கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் நடைபெற்றது. இதனை முன்னிட்டு, மூர்க்க நாயனாருக்கு சிறப்பு அபிஷேகம், வீதியூலா, திருமுறை பாராயணம் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டத்தில் செய்திருந்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
பலமுறை மிஸ் ஆன தந்தை.. காதலனுடன் சேர்ந்து பக்கா ப்ளான் போட்ட சிறுமி - நள்ளிரவில் கொடூரம்
பலமுறை மிஸ் ஆன தந்தை.. காதலனுடன் சேர்ந்து பக்கா ப்ளான் போட்ட சிறுமி - நள்ளிரவில் கொடூரம்
Maruti Suzuki: பட்ஜெட்டில் கார் வேண்டுமா? 5+ புது மாடல்களுக்கு ப்ளூ-ப்ரிண்ட் ரெடி - மாருதி அதிரடி, ரெண்டே வருஷம்
Maruti Suzuki: பட்ஜெட்டில் கார் வேண்டுமா? 5+ புது மாடல்களுக்கு ப்ளூ-ப்ரிண்ட் ரெடி - மாருதி அதிரடி, ரெண்டே வருஷம்
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
பலமுறை மிஸ் ஆன தந்தை.. காதலனுடன் சேர்ந்து பக்கா ப்ளான் போட்ட சிறுமி - நள்ளிரவில் கொடூரம்
பலமுறை மிஸ் ஆன தந்தை.. காதலனுடன் சேர்ந்து பக்கா ப்ளான் போட்ட சிறுமி - நள்ளிரவில் கொடூரம்
Maruti Suzuki: பட்ஜெட்டில் கார் வேண்டுமா? 5+ புது மாடல்களுக்கு ப்ளூ-ப்ரிண்ட் ரெடி - மாருதி அதிரடி, ரெண்டே வருஷம்
Maruti Suzuki: பட்ஜெட்டில் கார் வேண்டுமா? 5+ புது மாடல்களுக்கு ப்ளூ-ப்ரிண்ட் ரெடி - மாருதி அதிரடி, ரெண்டே வருஷம்
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
ஒரே வாரத்தில் பல்டி அடித்த தக்காளி, வெங்காயம்.! ஒரு கிலோ இவ்வளவா.? எப்போ தான் விலை குறையும்.?
ஒரே வாரத்தில் பல்டி அடித்த தக்காளி, வெங்காயம்.! ஒரு கிலோ இவ்வளவா.? எப்போ தான் விலை குறையும்.?
Embed widget