மேலும் அறிய

வெளிநாட்டில் இருந்து தஞ்சைக்கு வந்த இளைஞருக்கு ஒமிக்ரான் தொற்றா?

’’ஒமிக்ரான் பரிசோதனைக்காக ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகளுக்கு பின்னரே அவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உள்ளதா என்பது தெரியவரும்’’

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால், நாடு முழுவதுமுள்ள பொது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் பொருளாதார நிலையை கொரோனா தொற்று வைரஸ் வெகுவாக பாதித்துள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு கொரோனா உருமாறி பரவ தொடங்கியது. இதற்கு டெல்டா வகை கொரோனா என்று உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டியது. இதன் தாக்கம் அதிகளவில் இருந்தது. தென் ஆப்பிரிக்காவில் தற்போது இது மீண்டும் உருமாற்றம் அடைந்தது. இதற்கு ஒமிக்ரான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.


வெளிநாட்டில் இருந்து தஞ்சைக்கு வந்த இளைஞருக்கு ஒமிக்ரான் தொற்றா?

டெல்டா வகை கொரோனாவை விட ஒமிக்ரான் தொற்று,  பல்வேறு நாடுகளில் பரவத் தொடங்கி விட்டது. இந்த ஒமிக்ரான் வகை வைரஸ் ஆனது வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்தியாவிலும் இதன் தாக்கம் மெல்ல மெல்ல பரவி வருகிறது.தமிழகத்திலும் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது கடந்த சில நாட்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டது. தற்போது அவர் குணமடைந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருமங்கலகுடி பகுதியை சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர் சார்ஜாவில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 19 ஆம் தேதி அவர் அங்கிருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் வெளிநாட்டில் இருந்து வந்ததால் ஒமிக்ரான் பரிசோதனை செய்யப்பட்டு அவரது ரத்த, சளி மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் வருவதற்கு நான்கு முதல் ஏழு நாட்கள் வரை ஆகும் என்பதால் அந்த வாலிபர் முழு பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் வாயிலாக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அறிவுறுத்தப்பட்டார்.


வெளிநாட்டில் இருந்து தஞ்சைக்கு வந்த இளைஞருக்கு ஒமிக்ரான் தொற்றா?

பரிசோதனை முடிவுகள் வராத நிலையில் அந்த வாலிபர் டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார். பரிசோதனை முடிவு வந்த பிறகுதான் அவர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பது தெரியவரும். இதே போல் பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 56 வயதுடையவர், லண்டனில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார்,  அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவரை தஞ்சை மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளளனர். மேலும் அவருக்கு ஒமிக்ரான் தொற்று உள்ளதா என கண்டறிய, அவரது மாதிரியை பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரவிக்குமார் கூறுகையில், அந்த வாலிபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்தவர் என்பதால் ஒமிக்ரான் பரிசோதனைக்காக ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகளுக்கு பின்னரே அவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உள்ளதா என்பது தெரியவரும் என்றார்.இந்நிலையில் தஞ்சையை சேர்ந்தவர்களுக்கு ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக வதந்தி பரவியதால், தஞ்சையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Embed widget