மேலும் அறிய

நோயாளிகளை நிற்க வைத்து ட்ரிப்ஸ் ஏற்றிய செவிலியர்: பணியிலிருந்து நிரந்தரமாக நீக்கி நடவடிக்கை

இங்கு பணியாற்றும் செவிலியர்கள் நோயாளிகளிடம் அலட்சியமாகவும், கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துவதாகவும் அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

தஞ்சாவூர்: நோயாளிகளை நிற்க வைத்து ட்ரிப்ஸ் ஏற்றிய செவிலியர் குறித்த வீடியோ வைரலான நிலையில் அவரை பணியிலிருந்து விடுவித்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். இது நோயாளிகள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும் மருத்துவமனையின் பல்வேறு பிரிவுகளில் நோயாளிகளை இவ்வாறுதான் ஊழியர்கள் நடத்துகின்றனர் என்றும் குற்றச்சாட்டை எழுப்பி உள்ளனர்.

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு நிற்க வைத்து ட்ரிப்ஸ் ஏற்றிய செவிலியர் பணியிலிருந்து விடுவித்து மருத்துவமனை முதல்வர் பூவதி உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், டெல்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் வெளி மற்றும் உள் நோயாளிகளாக சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். விபத்துக்களில் சிக்குபவர்கள், இதய நோயாளிகள் உட்பட அனைத்து நோய்களுக்கும் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குதான் பொதுமக்கள் வருகின்றனர். 

இங்கு பணியாற்றும் செவிலியர்கள் நோயாளிகளிடம் அலட்சியமாகவும், கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துவதாகவும் அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. மேலும் அவசர சிகிச்சைக்காக வருபவர்கள் ஸ்கேன் எடுத்துவிட்டு ரிசல்ட்டை வாங்க படாதபாடு படும் நிலைதான் இருக்கிறது. உள்நோயாளிகளுக்கு எடுக்கப்படும் ஸ்கேன் மறுநாள் காலையில் தரப்படும். காலை 8 மணியிலிருந்து ஸ்கேன் ரிப்போர்ட்டை வாங்க நோயாளிகளின் உறவினர்கள் வரிசையில் வெகுநேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. ஸ்கேன் ரிப்போர்ட்டை தருபவர்கள் சாவகாசமாக 10 மணி அளவில்தான் வருகின்றனர். இதனால் டாக்டர்கள் கடுமையாக சத்தம் போடுகின்றனர் என்று நோயாளிகள் தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர். இது ஒருபுறம் இருந்தால், இங்குள்ள பன்னோக்கு சிறப்பு சிகிச்சை மைய கட்டிடத்தில், புற்றுநோய்க்கான சிகிச்சைப்பிரிவில், பெண் செவிலியர் ஒருவர், சிகிச்சை பெறும் நோயாளிகளை அலட்சியமாக கையாளுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், நோயாளிகளை செவிலியர் தனது இருக்கையில் உட்கார்ந்து கொண்டு, நோயாளிகளை வரவழைத்து, அவர்களை நிற்கவைத்தப்படி, குளுக்கோஸ் (ட்ரிப்ஸ்) செலுத்தி அனுப்பியுள்ளார். அதில்  குளுக்கோஸ் ஏற்றிக்கொண்ட பிறகு, நோயாளிககளை, அவர்களின் உறவினர் கையில் குளுக்கோஸ் பாட்டிலை சுமந்து செல்லும் அவலம் ஏற்பட்டது. அத்துடன் குளுக்கோஸ் போட்டுள்ள நோயாளி ஒருவர், பாட்டிலில் பிரச்னை இருப்பதாக கூறிய போது, செவிலியர் அவரை சரமாரியாக திட்டி அனுப்பியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் நேற்று வெளியாகி வைரலானது.
 
இதுகுறித்து தகவல் அறிந்ததும், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் பூவதி விசாரணை நடத்தினார். விசாரணையில்,  புற்றுநோய் சிகிச்சை பிரிவில், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ், தற்காலிகமாக பணியாற்றும் செவிலியர் ஆர்.ரஞ்சிதா என்பவர்தான் இவ்வாறு நோயாளிகளிடம் கடுமையாக நடந்து கொண்டவர் என்பது தெரிந்தது. இதையடுத்து அவரை பணியில் இருந்து நிரந்தரமாக விடுவித்து மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி நேற்று உத்தரவிட்டார்.

இதுகுறித்து நோயாளிகள் தரப்பில் கூறுகையில், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். உடல் வலியுடன் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு மனவேதனையை அளிக்கும் மருத்துவமனையாக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. ஸ்கேன் ரிப்போர்ட் மட்டுமின்றி பல்வேறு சிகிச்சைகளுக்கான சோதனைகள் வாங்குவதற்குள் பெரும் பாடாகி விடுகிறது. இதுகுறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நோயாளிகளையும், அவர்களுடன் வரும் உறவினர்களையும் தரக்குறைவாக பேசுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இவ்வாறு நோயாளிகள் தரப்பில் குற்றச்சாட்டை எழுப்பி உள்ளனர். இதுகுறித்தும் மருத்துவமனை முதல்வர் பூவதி நடவடிக்கை எடுப்பாரா? என்பதுதான் மக்கள் மனதில் எழுந்துள்ள எதிர்பார்ப்பு.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Embed widget