மேலும் அறிய

திருக்குவளை அருகே திடுக்கென்று இடிந்து விழுந்த வெள்ளையாற்று பாலம்

10 ஆண்டுகளுக்கும் மேலாக சேதமடைந்த பாலத்தை புதுப்பித்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வந்த நிலையில் தற்போது இந்த பாலத்தின் நடுவே இரண்டு இடங்களில் இடிந்து விழுந்தது

நாகை மாவட்டம் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்த ஊரான திருக்குவளையில்  இருந்து 3 கிலோமீட்டர் தூரத்திலுள்ள உள்ளது தெற்குபனையூர் ஊராட்சி இந்த ஊராட்சிக்கு உட்பட்ட 15 கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய கூலித் தொழிலாள மக்கள் வசித்து வருகின்றனர். இந்த 15 கிராம மக்களின் வசதிக்காக தெற்கு பனையூரில் ஒரு துவக்கப்பள்ளி, வல்லபவிநாயகர் கோட்டத்தில் ஒரு நடுநிலைப் பள்ளி  செயல்பட்டு வருகிறது. மேற்படிப்புக்காக நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் 3 கிலோமீட்டர் தூரமுள்ள திருக்குவளைக்கு ஆற்றை கடந்து நடந்தே செல்ல வேண்டிய நிலை உள்ளது.
 
திருக்குவளை அருகே திடுக்கென்று இடிந்து விழுந்த வெள்ளையாற்று பாலம்
 
இது மட்டுமல்லாமல் கிராம மக்கள்மருத்துவமனை கால்நடை மருத்துவமனை தாலுகா அலுவலகம் பதிவாளர் அலுவலகம் விவசாயத்திற்குத் தேவையான இடு பொருட்கள் என  அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக அவசர மருத்துவ தேவைக்காகவும் திருக்குவளை தான் செல்ல வேண்டும். இவர்களின் சிரமத்தை உணர்ந்து அரசு கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளாற்றின் குறுக்கே 3 அடி அகலத்தில் 50 அடி நீளத்தில் கான்கிரீட் நடைபாலம் கட்டி கொடுத்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சேதமடைந்த பாலத்தை புதுப்பித்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வந்த நிலையில் தற்போது இன்று இந்த பாலத்தின் நடுவே இரண்டு இடங்களில் இடிந்து விழுந்தது.பழுதடைந்த பாலத்தில் மற்ற பகுதிகளில் எந்நேரம் ஆற்றுக்குள் இடிந்து விழும் அபாயம் உள்ளதால் கிராம மக்கள் சார்பில் பாலத்தின் இருபுறமும் கருவேல முட்களை வெட்டிப்போட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

திருக்குவளை அருகே திடுக்கென்று இடிந்து விழுந்த வெள்ளையாற்று பாலம்
 
இதனால் எவ்வித போக்கு வசதி இல்லாமல் உள்ள கிராம மக்கள் மற்றும் மாணவிகள் 15 கிலோமீட்டர் தூரம் சுற்றி நடந்து திருக்குவளை செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. புதிய பாலம் கட்டுவதற்கு தெற்குபனையூர் ஊராட்சி சேர்ந்த மக்கள் கோரிக்கை வைத்தும் அரசு இதுவரை செவிசாய்க்கவில்லை என குற்றம் சாட்டும் இப்பகுதி மக்கள் உடனடியாக அவசர கால ஊர்தி மற்றும் தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட கனரக வாகனங்கள் வந்து செல்லும் அளவிற்கு புதிய பாலம் கட்டி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜிடம் கேட்டபோது நபார்டு திட்டம் மூலம் 2.80 கோடி உத்தேச திட்ட மதிப்பீடு செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசு ஆணை பிறப்பித்ததும் உடனடியாக பாலம் கட்டுமான பணி தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தெரிவித்தார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fact Check : அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசப்பட்டதா? தீயாய் பரவும் வீடியோ உண்மையா?
அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசப்பட்டதா? தீயாய் பரவும் வீடியோ உண்மையா?
Breaking News LIVE: யூ ட்யூபர் சவுக்கு சங்கருக்கு மே 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நீதிமன்ற காவல்
Breaking News LIVE: யூ ட்யூபர் சவுக்கு சங்கருக்கு மே 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நீதிமன்ற காவல்
TN Weather Update: கன்னியாகுமரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை ?
கன்னியாகுமரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை ?
GOAT : கோட் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கிவிட்டது!
GOAT : கோட் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கிவிட்டது!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Muttukadu Boat House : முட்டுக்காடு SUMMER SPECIAL 1 DAY PLAN-க்கு ரெடியா? இவ்வளவு OFFER இருக்கா?Suchitra interview  : ”ஐஸ்வர்யா நல்ல அம்மாவா? என் சப்போர்ட் தனுஷூக்கு தான்” பகீர் கிளப்பிய சுச்சிGV Prakash Saindhavi Divorce : ”ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்”  எமோஷனலான GV, சைந்தவிVenkatesh Bhat : SUN TV vs VIJAY TV வெங்கடேஷ் பட் பதிலடி போட்டியில் முந்துவது யார்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fact Check : அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசப்பட்டதா? தீயாய் பரவும் வீடியோ உண்மையா?
அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசப்பட்டதா? தீயாய் பரவும் வீடியோ உண்மையா?
Breaking News LIVE: யூ ட்யூபர் சவுக்கு சங்கருக்கு மே 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நீதிமன்ற காவல்
Breaking News LIVE: யூ ட்யூபர் சவுக்கு சங்கருக்கு மே 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நீதிமன்ற காவல்
TN Weather Update: கன்னியாகுமரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை ?
கன்னியாகுமரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை ?
GOAT : கோட் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கிவிட்டது!
GOAT : கோட் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கிவிட்டது!
Yellow Fever: தடுப்பூசி இல்லை என்றால் இந்தியாவுக்கு நோ எண்ட்ரி.. மஞ்சள் காய்ச்சல் அலர்ட்..
தடுப்பூசி இல்லை என்றால் இந்தியாவுக்கு நோ எண்ட்ரி.. மஞ்சள் காய்ச்சல் அலர்ட்..
PM Modi's Nomination: நாடாளுமன்ற தேர்தல் - வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி!
PM Modi's Nomination: நாடாளுமன்ற தேர்தல் - வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி!
11th Supplementary Exam: பிளஸ் 1 தேர்வு; ஜூலை 2 முதல் துணைத்தேர்வு- மே 15 முதல் மறுகூட்டல் / விடைத்தாள் நகல்
11th Supplementary Exam: பிளஸ் 1 தேர்வு; ஜூலை 2 முதல் துணைத்தேர்வு- மே 15 முதல் மறுகூட்டல் / விடைத்தாள் நகல்
Cow Theft:
"பீப் கடைக்கு " மாடுகளை திருடிய பார்ட் டைம் திருடர்கள் ..! ஜெயிலுக்கு அனுப்பிய போலீஸ் ..!
Embed widget