மேலும் அறிய

ஆச்சர்யம்... ஆனால் உண்மை... திறந்த முதல்நாளே காற்று வாங்கிய மயிலாடுதுறை டாஸ்மாக் கடைகள்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 102 டாஸ்மாக் கடைகளிலும் இன்று திறக்கப்பட்டு கூட்டம் இன்றி மது விற்பனை மந்தமாகவே நடைபெற்றது.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்தது. இதனால் கொரோனா வைரஸ் தாக்கம் குறைய தொடங்கியதை அடுத்து, தமிழ்நாட்டில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் சிறுகச்சிறுக தளர்த்தப்பட்டு வருகிறது. முன்னதாக கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தைப் பொறுத்து மாவட்டங்களை வகை பிரித்து கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தது.


ஆச்சர்யம்... ஆனால் உண்மை... திறந்த முதல்நாளே காற்று வாங்கிய மயிலாடுதுறை டாஸ்மாக் கடைகள்!

இன்று முதல் தளர்வுகள் பாகுபாடு இன்றி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகளை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது. கடந்த வாரங்களில் ஒரு சில மாவட்டத்திற்கு கோவில்கள் மதுபான கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக காணப்பட்ட மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு மதுபான கடைகள் மற்றும் கோவில்கள் திறக்க தடை நீடித்து வந்தது. 


ஆச்சர்யம்... ஆனால் உண்மை... திறந்த முதல்நாளே காற்று வாங்கிய மயிலாடுதுறை டாஸ்மாக் கடைகள்!

இந்நிலையில் இன்று முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகளை தமிழ்நாடு அரசு அறிவித்ததை அடுத்து கடந்த 71 நாட்களுக்குப் பிறகு மூடப்பட்டிருந்த  டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் மகிழ்ச்சியில் திளைத்த ஒருசில மது பிரியர்கள், சில மாவட்டங்களில் மதுபான கடை முன்பு பட்டாசு வெடித்தும், கற்பூரம் ஏந்தி தேங்காய் உடைத்தும் கொண்டாடி தங்கள் 2 மாத தவத்தை கலைத்துக்கொண்டனர்.


ஆச்சர்யம்... ஆனால் உண்மை... திறந்த முதல்நாளே காற்று வாங்கிய மயிலாடுதுறை டாஸ்மாக் கடைகள்!

கடந்த இரண்டு மாதங்களாக மதுக்கடைகள் மூடப்பட்டதால் மது கிடைக்காத மது பிரியர்கள் தங்களை மது போதையில் வைத்துக்கொள்ள கள்ளச்சாராயத்தை நாடுவதும், தாங்களாகவே யூடியூப் பார்த்து சாராயம் காய்ச்சுவது, பெயிண்ட் உள்ளிட்ட ரசாயன வேதி பொருட்களை தண்ணீரில் கலந்து குடிப்பது போன்ற பல்வேறு வகையான பாதைகளை குறுக்குவழியில் தேடி தங்கள் உயிர்களை இழந்த சம்பவம் நடந்தேறியுள்ளது. மேலும் அண்டை மாநிலமான புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கும் சென்று மதுபானங்கள் வாங்கி வந்தனர்.


ஆச்சர்யம்... ஆனால் உண்மை... திறந்த முதல்நாளே காற்று வாங்கிய மயிலாடுதுறை டாஸ்மாக் கடைகள்!

இந்த சூழலில், அனைத்து மாவட்டங்களுக்கும் இன்று முதல் ஒரே மாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மயிலாடுதுறை உட்பட 11 மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகள் செயல்படத் தொடங்கியுள்ளன. மதுபானக் கூடங்கள் இயங்காது என்று ஏற்கனவே தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த நிலையில், அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 102 டாஸ்மாக் கடைகளிலும் இன்று திறக்கப்பட்டு மது விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மதுக்கடைகள் திறப்பை கொண்டாடும் வகையில் மயிலாடுதுறை நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு சில மது பிரியர்கள் தேங்காயில் கற்பூரம் வைத்து கடைக்கு சுற்றி தேங்காய் உடைத்து, வழிபட்டு மது பானங்களை  ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.


ஆச்சர்யம்... ஆனால் உண்மை... திறந்த முதல்நாளே காற்று வாங்கிய மயிலாடுதுறை டாஸ்மாக் கடைகள்!

இந்த சூழலில் இரண்டு மாதங்களை கடந்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், அதிக கூட்டம் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெரும்பாலான கடைகளும் எந்த வித ஆரவாரமின்றி காலியாக காணப்பட்டு வருகிறது. ஓரிருவர் மட்டுமே மதுபானங்களை வாங்க வந்து செல்கின்றனர். அனைத்து கடைகளிலும் குறைந்த அளவிலான கூட்டமே காணப்படுகிறது. கூட்டத்தை ஒழுங்குபடுத்தி சமூக விலகலை பின்பற்ற டாஸ்மார்க் கடை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட கொடைகள் அனைத்தும் வைத்தது வைத்தது போல் உள்ளது. கூட்டத்தை கட்டுப்படுத்த வரவழைக்கப்பட்ட காவலர்களும் கூட்டம் இல்லாததால் பணிச்சுமை இன்றி காணப்பட்டனர். வாரத்தின் முதல் நாள் என்பதால், கூட்டம் குறைவாக இருப்பதாகவும், மாலையில் கூட்டம் வரும் என எதிர்பார்ப்பதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2 மாதத்திற்கு மேலாக மது பானம் அருந்தாத பலர் மது பழக்கத்தை விட்டு விட்டதாகவும். அதனால் தான் கூட்டம் இல்லை என பரவலாக பேசப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே 803 கிலோ கஞ்சா தீயில் அழிப்பு! ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே காக்கும் நடவடிக்கை
தஞ்சாவூர் அருகே 803 கிலோ கஞ்சா தீயில் அழிப்பு! ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே காக்கும் நடவடிக்கை
தஞ்சையின் “வியூ”வை ரசித்து பார்க்க இந்த ஸ்பாட் சூப்பர் ஹாட் ஸ்பாட் நண்பாஸ்
தஞ்சையின் “வியூ”வை ரசித்து பார்க்க இந்த ஸ்பாட் சூப்பர் ஹாட் ஸ்பாட் நண்பாஸ்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Embed widget