மேலும் அறிய

‛உழைங்க... படிங்க... உண்மையா இருங்க...’ -ஆளுநர் தமிழிசை பேச்சு!

காவிரியானாலும், எந்த நதியின் நீரானாலும் மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டிய பங்கு சரியாக கிடைக்க வேண்டும் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஆதீன கலைக்கல்லூரியின் பவளவிழா 75வது ஆண்டு துவக்க விழா இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்க வருகை புரிந்த  புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜனுக்கு தருமபுரம் ஆதீனம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் லலிதா மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுகுணா சிங் ஆகியோர் மலர் கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து ஆதீனத்தில் நடைபெற்ற விழாவில் ஆதீன 27 வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தலைமை தாங்கினார். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று விழாவை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம், திருப்பனந்தாள் ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமாரசாமி தம்பிரான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்,


‛உழைங்க... படிங்க... உண்மையா இருங்க...’ -ஆளுநர் தமிழிசை பேச்சு!

‛‛உண்மையாக, கடுமையாக உழைத்தால் யார் வேண்டுமேனாலும் ஆளுனராக முடியும் என்பதை இந்து சமயம் எனக்கு சொல்லிகொடுத்தது, உழைக்க வேண்டும், படிக்க வேண்டும், உண்மையாக இருக்க வேண்டும் என்பதை இறைவழிபாடுதான் சொல்லிக் கொடுத்தது. எனவே மாணவிகள் நமது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பின்பற்றி உண்மையாக உழைத்தால் வாழ்வில் பெரிய இடத்தை அடைவதற்கு பலமாக இருக்கும். தமிழ் என்றாலே சமயத்தமிழ், ஆன்மீகத்தமிழ் தழைத்து ஓங்கவேண்டும் அதற்கு தமிழகமும், புதுச்சேரியும் விளங்க வேண்டும். தமிழும், சமயமும் சேர்ந்து விளையாடிகொண்டு இருக்கிறது. இது இறைமண் உலகத்தில் வளர்ந்த நாடுகளால் கூட கொரோனாவிற்கு தடுப்பூசி தயாரிக்க முடியாதபோது இந்தியா தாம்தயாரித்த தடுப்பூசியை மக்களுக்கு கொடுத்தது என்றால் இந்தியாவும், தமிழகமும் இறைபூமி. நமக்கு தேவையானதை இறைவன்கொடுப்பான். கொரோனாவில் இருந்து நாம் பாதுகாத்துகொள்ள எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இறைவன் அருள் இருந்தாலும் சமூக இடைவெளியை கடைபிடித்து 3வது அலையில் இருந்து நம்மை பாதுகாத்துகொள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றார். 


‛உழைங்க... படிங்க... உண்மையா இருங்க...’ -ஆளுநர் தமிழிசை பேச்சு!

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்,  புதுச்சேரி மாநிலத்தில் 50 சதவீதம் மக்கள் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவிப்பதாகவும், மாணவ, மாணவிகள் வீட்டிலேயே இருப்பதால் அனைவரும் ஆன்லைன் கல்வியை கற்க முடியவில்லை, ஆசிரியர்கள் தடுப்பூசி முழுமையாக போட்டுக் கொள்ள வேண்டும், மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்கும் என்பதால், சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள்  பள்ளிகளைத் திறக்க வேண்டாம் என்கிறார்கள், ஆனால் குழந்தைகளின் எதிர் காலத்தை முன்னிட்டு பள்ளிகளை திறக்க வேண்டும் என்று ஒரு சிலர் கேட்கிறார்கள். விரைவில் பள்ளிகள் திறப்பதற்கு வாய்ப்பு உள்ளது. மேகதாட்டு பிரச்சனை பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த  தமிழிசை சௌந்தர்ராஜன், ஆளுநர் என்பதால் அரசியல் பேச விரும்பவில்லை, ஆனால் காவிரியானாலும் எந்த நதியின் நீரானாலும் மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டிய பங்கு சரியாக கிடைக்க வேண்டும் என்பதே என்பதே எனது விருப்பம் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

EPS:
EPS: "நாளொரு நாடகம்.." மு.க.ஸ்டாலினை மக்கள் நம்ப வாய்ப்பே இல்லை - எடப்பாடி பழனிசாமி
பொங்கல் ஸ்பெஷல்: கோவை, நெல்லை உட்பட 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
பொங்கல் ஸ்பெஷல்: கோவை, நெல்லை உட்பட 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
ABP Premium

வீடியோ

DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS:
EPS: "நாளொரு நாடகம்.." மு.க.ஸ்டாலினை மக்கள் நம்ப வாய்ப்பே இல்லை - எடப்பாடி பழனிசாமி
பொங்கல் ஸ்பெஷல்: கோவை, நெல்லை உட்பட 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
பொங்கல் ஸ்பெஷல்: கோவை, நெல்லை உட்பட 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
Pongal Gift 2026: பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
போடு.. 1.76 லட்சம் ரூபாய் ஆஃபர்.. Honda Elevate கார் வாங்க ரெடியா?
போடு.. 1.76 லட்சம் ரூபாய் ஆஃபர்.. Honda Elevate கார் வாங்க ரெடியா?
கிரெடிட் ஸ்கோரை உயர்த்தி, குறைந்த வட்டியில் கடன் பெற வேண்டுமா? 3 எளிய வழிகள்!
கிரெடிட் ஸ்கோரை உயர்த்தி, குறைந்த வட்டியில் கடன் பெற வேண்டுமா? 3 எளிய வழிகள்!
Embed widget