மேலும் அறிய

அனைத்து அரசு அலுவலகங்களிலும் குறுங்காடுகள் அமைக்கப்படும் - மயிலாடுதுறை ஆட்சியர்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களின் வளாகம் முன்பு நிழல் தரும் மரங்கள் கொண்ட குறுங்காடுகள் அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட பத்திர பதிவு துறை அலுவலகம், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவியர் விடுதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் கல்லூரி மாணவியர் விடுதி, தர்மபுரம் ஞானாம்பிகை அரசினர் கல்லூரி மாணவியர் விடுதி ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகளையும், மற்றும் மணக்குடியில் ரூ.24 கோடி செலவில் புதிய பேருந்து நிலைய பணிகளையும், மன்னம் பந்தல் ஊராட்சி பால் பண்ணை அருகில் ரூ.114 கோடி செலவில் நடைபெற்று வரும் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர்  ஏ.பி.மகாபாரதி  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


அனைத்து அரசு அலுவலகங்களிலும் குறுங்காடுகள் அமைக்கப்படும் - மயிலாடுதுறை ஆட்சியர்

ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர் கூறுகையில், “மயிலாடுதுறை மாவட்டத்தில் தூய்மை நகரம் என்னும் பணி கடந்த ஒரு மாத காலமாக மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், பத்திர பதிவுத்துறை அலுவலகம், அரசினர் மாணவியர் விடுதி, கல்லூரி மாணவியர் விடுதி போன்ற இடங்களில் தூய்மைப்படுத்தும்பணி நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பூங்காக்கள் நமக்கு நாமே திட்டத்தில் வனத்துறை மற்றும் தோட்டக்கலை துறையின் மூலம் நிழல் தரும் மரங்கள் என்று சொல்லக்கூடிய குறுங்காடுகள் மிக விரைவில் அமைக்கப்படும்.


அனைத்து அரசு அலுவலகங்களிலும் குறுங்காடுகள் அமைக்கப்படும் - மயிலாடுதுறை ஆட்சியர்

அதேபோன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களின் வளாகம் முன்பு குறுங்காடுகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள பட உள்ளது. அதாவது பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு அடிக்கடி வந்து செல்வதால் அவர்கள் சற்று உக்காரும் நிலை ஏற்படுவதால் வளாகம் முன்பு நிழல் தரும் மரங்களும், உட்காரும் (இருக்கை) பலகையும் அமைக்கப்பட உள்ளது. அரசு அலுவலங்களில் மாதம் ஒரு முறை தூய்மை பணி மேற்கொள்ள உத்தரவிடபட்டுள்ளது. மேலும், பாதாள சாக்கடையில் தேங்கியுள்ள மண்களை உடனடியாக அகற்ற உத்தரவிட்டுள்ளேன். மயிலாடுதுறை நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் 99 கோடி செலவில் வரும் ஏப்ரல் மாதத்தில் பணிகள் தொடங்கப்படும். மாவட்ட முழுவதும் சாலைகளில் சில இடங்களில் குண்டும் குழியுமான இருப்பதை  உடனடியாக நெடுஞ்சாலை துறை மூலம் சீரமைக்கப்படும். சாலையில் உள்ள வேகத்தடைகள் வெள்ளை நிற பெயிண்ட் அடிக்கப்படும். பிளாஸ்டிக்கை தவிர்த்து மஞ்சள் பையை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்  பணியாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் மீண்டும்  மஞ்சள் பை வழங்கப்பட்டது.


அனைத்து அரசு அலுவலகங்களிலும் குறுங்காடுகள் அமைக்கப்படும் - மயிலாடுதுறை ஆட்சியர்

ஆதிதிராவிட நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆகிய விடுதி வளாகம் முன்பு மரம் செடி குப்பைகள் இருந்ததை நேரில் பார்வையிட்டேன். அதனை உடனடியாக போர்க்கால அடிப்படையில் நகராட்சியின் மூலம் உடனடியாக குப்பைகளும், பூண்டும் புதருமான செடிகளும் அகற்றப்பட்டன. ஆதி திராவிட நலத்துறை விடுதியில் உடனடியாக இன்வெட்டர் வசதி செய்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சாலைகளில் உள்ள மண்கள் உடனடியாக அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.


அனைத்து அரசு அலுவலகங்களிலும் குறுங்காடுகள் அமைக்கப்படும் - மயிலாடுதுறை ஆட்சியர்

ஆய்வின்போது மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் வ.யுரேகா, மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ், நகராட்சி ஆணையர் செல்வ பாலாஜி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பால ரவிக்குமார், பொதுப்பணித்துறை, மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் தமிழ் ஒளி மற்றும் வருவாய்த்துறை நகராட்சி துறை பொதுப்பணித்துறை சுற்றுச்சூழல் துறை ஆகிய துறையைச் சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand | Amitshah on Mallikarjun Kharge | ”சபதம் போட்டீங்களே கார்கே! இது ஓவர் PERFORMANCE” அமித்ஷா தடாலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Embed widget